திருவிவிலியம் பற்றி...

‘பைபிள்’ என்ற சொல் ‘பிப்ளியோன்’ என்ற கிரேக்க சொல்லிலிருந்து வருகிறது. ‘பிப்ளியோன்’ என்றால் ‘நூல்’ என்று பொருள்.
உலகிலேயே முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் ‘திருவிவிலியம்’.
தமிழ் மொழியிலும் முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் ‘திருவிவிலியம்’.
329 மொழிகளில் முழுவிவிலியமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
633 மொழிகளில் புதிய ஏற்பாடு மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
46 இந்திய மொழிகளில் முழுவிவிலியமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருவிவிலியத்தில்...
மொத்த புத்தகங்கள் 73 (ப.ஏ.46 + பு.ஏ.27)
மொத்த அதிகாரங்கள் 1334
மொத்த வசனங்கள் 35487
மிகப் பெரிய அதிகாரம் திருப்பாடல் 119
மிகச் சிறிய அதிகாரம் திருப்பாடல் 117
மிக நீண்ட வசனம் எஸ்தர் 8: 12
மிக குறுகிய வசனம் யோவான் 11: 35

விவிலியம் தெரிந்துகொள்வோம்


gioa Vw;ghL 46 Gj;jfq;fs; ehd;F gphpTfshf gpupf;fg;gLfpwd.
1.jpUr;rl;l E}y;fs;
  1. 1. njhlf;f E}y; 2. tpLjiyg;gazk; 3. NytpaH 4. vz;zpf;if 5. ,izr;rl;lk;
2. tuyhw;W E}y;fs;
  1. 1. NahRth 2. ePjpjiytHfs; 3. &j;J 4. 1rhKNty; 5. 2rhKNty; 6. 1murHfs; 7. 2murHfs; 8. 1Fwpg;NgL 9. 2Fwpg;NgL 10. v];uh 11. neNfkpah 12. v];jH 13. Njhgpj;J 14. A+jpj;J 15. 1kf;fNgaH 16. 2kf;fNgaH
3. Qhd E}y;fs; 1. NahG 2. jpUg;ghly; 3. ePjpnkhopfs; 4. rig ciuahsH 5. ,dpikkpF ghly; 6. rhyNkhdpd; Qhdk; 7. rPuhf;fpd; Qhdk;.
4. ,iwthf;fpdu; E}y;fs; 1. vrhah 2. vNukpah 3. Gyk;gy; 4. vNrf;fpNay; 5. jhdpNay; 6. xNrah 7. NahNty; 8. MNkh]; 9. xgjpah 10. Nahdh 11. kPf;fh 12. eh$k; 13. mgf;$f;F 14. nrg;gdpah 15. Mfha; 16. nrf;fhpah 17. kyhf;fp 18. gh&f;F.
Gjpa Vw;ghL 27 E}y;fs; Ie;J gphpTfshf gpupf;fg;gLfpwd.
1. ew;nra;jp E}y;fs;
  1. 1. kj;NjA 2. khw;F 3. Y}f;fh. 4. Nahthd;;
2. tuyhW
  1. 1. jpUj;J}jH gzpfs;
3. gTypd; jpUKfq;fs; 1. cNuhikaH 2. 1nfhhpe;jpaH; 3. 2nfhhpe;jpaH 4. fyhj;jpaH 5. vNgrpaH 6. gpypg;gpaH 7. nfhNyhNraH 8. 1njrNyhdpf;fH 9. 2njrNyhdpf;fH 10. 1jpnkhj;NjA 11. 2 jpnkhj;NjA 12 jPj;J 13. gpyNkhd;

4. nghJ jpUKfq;fs;
1. 1Nahthd; 2. 2Nahthd; 3. 3Nahthd;; 4. ahf;NfhG 5. 1NgJU 6. 2NgJU 7.; vgpNuaH 8. A+jh

5. ntspg;ghL
1. jpUntspg;ghL

சமாதானத்தின் செபம்

இறைவா,
என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும்
எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும்
எங்கு கயமை நிறைந்துள்ளதோ அங்கு மன்னிப்பையும்
எங்கு ஐயம் நிறைந்துள்ளதோ அங்கு விசுவாசத்தையும்
எங்கு அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ அங்கு நம்பிக்கையும்
எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும்
எங்கு மனக்கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும்
விதைத்திட அருள்புரியும்.
என் இறைவா,
ஆறுதல் பெருவதைவிட ஆறுதல் அளிக்கவும்
புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும்
அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரமருள்வாய்
  ஏனெனில்,
கொடுப்பதில் யாம் பெறுவோம்
மன்னிப்பதில் மன்னிக்கபெறுவோம்
இறப்பதில் நித்திய வாழ்வடைவோம். ஆமென்.
- புனித பிரான்சிஸ் அசிசியார்
Another Tamil Version

உன் சாந்தியின் கருவியாக என்னை ஆக்க்கியருளும்.
இறைவா,
உன் சாந்தியின் கருவியாக என்னை ஆக்கியருளும்.
எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,
எங்கு மனவருத்தம் உள்ளதோ அங்கு மன்னிப்பையும்,
எங்கு பிரிவினை உள்ளதோ அங்கு ஒன்றிப்பினையும்,
எங்கு ஐயம் உள்ளதோ அங்கு விசுவாசத்தையும்,
எங்கு ஏக்கம் உள்ளதோ அங்கு நம்பிக்கையையும்,
எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,
எங்கு கவலை உள்ளதோ அங்கு மகிழ்வினையையும்,
நான் உமது இரக்கத்தின், பெயரால் பகிர்ந்திட அருள் தாரும்.
எனது தெய்வீக குருவே, நான் என் ஆறுதலுக்காக
அலைவதை விடுத்து மற்றவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்க விளைவேனாக.
என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று
துடிப்பதை விடுத்து ஏனையோரை புரிந்து கொள்ள விளைவேனாக.
என்னை மற்றவர்கள் நேசிக்க வேண்டுமென்று துடிப்பதை விடுத்து
ஏனையோரை நேசிக்க முற்படுவேனாக.
ஏனெனில்,கொடுப்பதன் மூலந்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
மன்னிப்பதன் மூலம் தான் மன்னிப்படைய முடியும்.
மடிவதன் மூலம் தான் முடிவில்லா வாழ்வைப் பெற முடியும்.


The prayer of St. Francis

Lord, make me an instrument of your peace,
Where there is hatred, let me sow love;
where there is injury, pardon;
where there is doubt, faith;
where there is despair, hope;
where there is darkness, light;
where there is sadness, joy;

O Divine Master, grant that I may not so much seek to be consoled as to console;
to be understood as to understand;
to be loved as to love.

For it is in giving that we receive;
it is in pardoning that we are pardoned;
and it is in dying that we are born to eternal life.

திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு

முன்னுரை
இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியின் வழியாகவும்,திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைவன் நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்னவென்றால் “மனமாற்றம்”. நாம் அனைவரும் நம்முடைய பழைய பாவ இயல்பை விட்டுவிட்டு இயேசு பாலகனை நமது இதயத்தில் தாங்க வேண்டும். அதற்கான வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் (பாரூக் 5:1-9)
பாரூக் புத்தகமானது இஸ்ராயேல் மக்கள் பாபிலோனியாவில் அகதிகளாக இருந்த பொழுது எழுதப்பட்டது. இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் மையமாக, உயிர் நாடியாக இருந்த எருசலேம் தேவாலயத்தைவிட்டு அவர்கள் அந்நிய நாட்டில் அகதிகளாகவும், துன்பத்தால் வாடுபவர்களாகவும்,நம்பிக்கையிழந்தவர்களாகவும் வாழ்ந்த மக்களுக்கு அறிவிக்கப்படுகிற நற்செய்திதான் இன்றைய முதல் வாசகம். இச்சிந்தனையோடு இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் (பிலி 1:4-6,8-11)
பிலிப்பு நகரில் வாழ்ந்த இறைமக்கள் பவுலடியார் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர். ஏனெனில் பவுலடியார் அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க பல துன்பங்கள்; ஏற்றுகொண்டார். பிலிப்பு நகர மக்கள் பவுலடியார் மீது காட்டும் அன்பின் அடையாளமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட பவுலடியார் அவர்களுக்கு நன்றி சொல்லியும்,அறிவுரை கூறுவதுவும் தான் இன்றைய இரண்டாம் வாசகம். இச்சிந்தனையோடு இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு
1. படைப்பின் முதல்வனே இறைவா! இந்த உலகில் பயனம் செய்யும் திருச்சபை,அதன் தலைவர்களும் மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு, வாழ்விழந்த மக்களுக்கு அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின், மற்றும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட, கிறிஸ்துவின் மீட்பைத் தங்கள் நல்ல செயல்கள் மூலம் பிறருக்கு அறிவிக்கும் வரம் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.அகதிகளையும் அனாதைகளையும் ஆதரிக்கும் அன்பு இறைவா! வீடிழந்து, உறவிழந்து. மண்ணிழந்து, மானத்தையும் இழந்து வாதை முகாம்களில் முள் வேளிக்குள் துன்பப்படும் இலங்கை தமிழர்களுக்காவும்,மற்றும் உலகெங்கும் உள்ள அகதிகளுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நீர் கொண்டு வந்த மீட்பு விரைவில் கிடைக்க எம் நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டிய வரம்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.அன்பின் இறைவா! கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்றும் கொடுமைப்படுத்தப்படும் ஒரிசாவில் வாழும் எம் சகோதர சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். அவர்களுடைய வாழ்வில் இந்தாள்வரை அவர்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் மறைந்து மக்கள் அனைவரும் ஒருத்தாய் பிள்ளைகளாய் வாழ்ந்திட மக்களின் மனதை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.மனமாற்றத்தை விரும்பும் இறைவா! உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

(எசா 60: 1-6; எபே 3: 2-3, 5-6; மத் 2:1-12)
முன்னுரை
வரலாற்றையே படைத்த இறைவன் வரலாற்றில் காலம், இடம் இவற்றிக்கு உட்பட்டவராக பிறந்தார். இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும் ‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து, பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை, இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம் (எசா 60: 1-6)
இஸ்ரயேல் மக்கள் பிற நாட்டவரால் அடிமைகளாக பல வழிகளில் நசுக்கப்பட்டனர். சொந்த நாட்டையும், வழிபட்டு வந்த கோவிலையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் பிற இனத்தவரும் உன் ஒளி நோக்கி வருவர், எருசலேமே எழுந்து ஒளிவீசு! என்று இறைவாக்கினர் எசாயா மூலம் நம்பிக்கை ஊட்டுவதை இவ்வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (எபே 3: 2-3)
புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.

இறைமக்கள் வேண்டல்
1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு உண்மை கிறிஸ்துவை வெளிப்படுத்தும் கருவிகளாக இருக்கவும் மக்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலைத்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் அரசே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையை களைந்துவிட்டு பரந்த மனத்துடன் மக்களுக்கு சேவை செய்ய ஆற்றலையும், ஞானத்தையும் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நல்லாயனே இறைவா! நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பாதுகாப்பின் நாயகனே! எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்செய்தி முழக்கம் (மத் 2:1-12)

கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடிய ஒரு சில நாட்களுக்குப் பின் நாம் திருச்சபையோடு இணைந்து திருக்காட்சி, மூன்று அரசர்கள் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். இந்த நாள் இயேசு தன்னையே உலகிற்கு ஒளியாக வெளிப்படுத்திய நினைவு நாள். ‘உலகின் மீட்பர்’ (யோவா 4:42) தான் உதித்த யூத குலத்திற்கும், நாட்டிற்கும் அப்பாற்பட்டு, ‘உலகனைத்திற்கும் உரியவன் நான்’ எனப் பறைசாற்றும் நாள். புறவினத்;தார்க்கு மூடியிருந்த மீட்பின் கதவுகள் அன்பிறைவன் கிறிஸ்து இயேசுவால் திறக்கப்பட்ட நாள் இந்நாள். நம் வாழ்வில் இவ்விழாவினை நம்பிக்கையின் அடிக்கல் நாட்டுவிழா எனச் சொல்லலாம். ஏனென்றால் இன்று இறைவன் தன்னையே நமக்குக் குழந்தை உருவில் வெளிப்படுத்துகின்றார்.
திருட்காட்சி ஆங்கிலத்தில் நுpiphயலெ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாhர்த்தையின் கிரேக்க மூலச்சொல்லாகிய ‘எப்பிபனியா’ (நுpiphயnயை) என்ற சொல் ‘இறைவனின் வெளிப்பாடு, இறைச் சக்தியின் வெளிப்பாடு அல்லது இறைமாட்சியின் வெளிப்பாடு’ என்று பொருள் தரும். இதனை ‘திருவெளிப்பாடு’ எனவும் அழைக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டவர்கள், ‘இயேசு என்னும் ஒளியை தேடி’ பல நாடுகளில் இருந்தும் “உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்று முன்மொழியப்பட்டதற்கு ஏற்ப மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடி சென்றார்கள்.
மாந்தர் அனைவரும் இறைவனைத்தேடி வந்து அவரைக் கண்டுகொள்வார்கள் என்கிற கருத்தைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் வலியுறுத்துகின்றன. கிறிஸ்து பிறந்தவுடன் வெட்டவெளியில் கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு சாமக்காவல் புரிந்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத்தான் முதன் முதலாக வானதூதர் தோன்றி நற்செய்தயை அறிவித்தார். நற்செய்தியை கேட்ட இடையர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். விண்மீன் அடையாளத்தைக் கண்ட கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை தேடிச் சென்று பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர். இவ்வாறு விண்மீனின் அடையாளத்தை வைத்து தேடிச் சென்றதால் அவர்களின் தேடல் தனித்துவம் பெறுகிறது.
ஞானிகள், அரசர்கள் என்று உலகத்தால் போற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு குழந்தையிடம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள் (மத் 2:11). ஆம், இயேசு கிறிஸ்து என்ற ஒளியை வாழ்வில் காண ஆர்வத்தோடு தேடிச் சென்று கண்டார்கள். எனவே நாம் எந்த மனநிலையோடு ஆர்வத்தோடு இயேசுவை தேடி செல்கிறோமோ அந்த அளவுக்குதான் கண்டடைவோம்.
மனதில் செருக்கில்லாமல், ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடும் பணிவோடும் இயேசுவை தேடுகின்றபோது உன்னத ஒளியாம் இயேசுவை கண்டடைவோம் ஞானிகளைப்போல. ஏனென்றால் ஒளியானது பாவ இருளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளை புறங்காணச் செய்யும், இருண்ட இதயத்தில் நம்பிக்கை தீபத்தை ஏற்றும், பகைமையை நீக்கி பாசத்தை பெருக்கும். இப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர் புறவினத்த்து ஞானிகள் (மத் 2:11). ஆனால் ஏரோது, ஞானிகள் “யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே?.... அவரை நாங்கள் வணங்க வந்தோம்” என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டு இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான். இங்குதான் ஒளியில் இருளின் செயல்பாடு தெரிகிறது.
ஏரோது தவறான எண்ணத்தோடு தேடியதால் இயேசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், இன்னல்கள் மத்தியிலும் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவை ஞானிகள் தேடினார்கள் ஒளியாம் கிறிஸ்துவை கண்டார்கள்.
கிறிஸ்து என்னும் வாழ்வின் ஒளி திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நமது சுய நலப்போக்கினால், தான், தனக்கு, என்னுடையது, எனக்கு என்ற பேராசை எண்ணத்தினால், வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தினால், நுகர்வு கலாச்சாரத்தினால், உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவதினால், மற்றவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதினால் இருளின் ஆதிக்கம் வாழ்வின் ஒளியை மறைத்துக் கொண்டுள்ளது.
எனவே கிறிஸ்து என்னும் ஒளி நமக்குள் இருக்குமானால் நாம் ஒளியின் மக்களாக, அன்பின் மக்களாக, சமாதானத்தின் மக்களாக இருப்போம். நம்மில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றை நீக்கி இடையர்களைப்போல, ஞானிகளைப் போல நம்பிக்கையோடு இயேசு என்னும் ஒளியைத்தேடுவோம். வாழ்வு பெறுவோம். எனவே நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு என்னும் ஒளியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைவோம், வாழ்வு பெறுவோம்.

- அ. இராயப்பன்

ஆண்டவரின் திருமுழுக்கு (III Year)

(எசா 42: 1-4, 6-7; திப 10: 34-38; மத் 3:15-16,21-22)

அன்புக்குரியவர்களே! கிறிஸ்துவில் நம்மையே நாம் முழுமையாக அர்ப்பணித்து, கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு அர்த்தங்களை கண்டுபிடிக்க ‘ஞானஸ்தானம்’ என்ற திருவருட்சாதனம் முழு பலனை நமக்கு தருகிறது. “கிறிஸ்தவன்” என்று தலைநிமிர்ந்து நாம் சொல்ல ஞானஸ்தானமே நமக்கு ஊட்டச்சத்து. இன்று ஆண்டவரின் ஞானஸ்தான விழாவை கொண்டழாடுகின்றோம். இயேசு பெற்ற திருமுழுக்கு மாந்தர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஓர் அடையாளச் செயலாகும். இயேசுவின் ஞானஸ்நானம் விளிம்பு நிலைமக்கள், பாவிகள், தொழுநோயாளர் இவர்களுடன் நெருக்கமான உறவையும், தோழமையையும் எடுத்துக்காட்டும் செயலாகும். நாமும் வாழ்வில் விளிம்பு நிலைமக்கள் வலிமைபெற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் (எசா 42: 1-4, 6-7)
இஸ்ராயேல் மக்கள் பாபிலோன் அடிமைத்தனத்தில் இறைவனின் வருகைக்காக, பல விதமாக எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில எசாயா ஆண்டவரின் ஊழியனைப் பற்றி இறைவாக்காக கூறுகிறார். இறைவாக்கினர் எசாயா இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்டவர், நீதி, உண்மை அறத்தை நிலைநாட்ட வருகிறார். திருமுழுக்கில் இ.றைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் ஆண்டவரின் ஊழியனைப் போல வாழ்கிறோமா என் எசாயா கூறுவதைக் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (திப 10: 34-38)
கிறிஸ்து ஒருவரே ஆண்டவர் என் அறிக்கையிடும் நாம் அனைவரும் தூய ஆவியானவரின் அருளைப் பெற்று, இயேசுவைப் போல் தீயஆவியை வென்று, நம்மில் யாரும் வேற்றுமை பாராட்டாமல் இவ்வுலகில் நிலையான அமைதியைக் கொண்டுவர ஒற்றுமையுடன் இருந்து இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகம் அழைப்பு விடுப்பதை கவனமுடன் கேட்போம்.

இறைமக்கள் மன்றாட்டு
1. அருளின் ஊற்றே இறiவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் தங்களின் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து, இறைவிருப்பத்தின்படி நடந்து மக்களi தூய ஆவியின் வழியில் நடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வார்த்தையில் சவை தந்திடும் இறைவா! எங்கள் பங்கு மக்கள் அனைவரும் திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை புதுப்பித்து இறுதிவரை இறையன்பிலும் பிறரன்பிலும் அமைதியிலும் நிலைத்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இவரே என் அன்பார்ந்த மகன் என்று கூறிய இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் எங்களிடத்தில் இருக்கும் சுயநலம் கோபம், தீயநெறி ஆகிய பாவ இயல்பை களைந்து ஆவியின் கொடைகளைப் பெற்று அருள் வாழ்வில் திளைத்திடும் புதுவாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்செய்தி முழக்கம் (மத் 3:15-16,21-22)
கிறிஸ்துவில் பிரியமானவர்களே, 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தந்தை 6ம் சின்னப்பர் இயேசு பாலஸ்தின நாட்டிற்க திருப்பயணம் சென்றார். இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் நதிக்கரையில் முழந்தாள் படியிட்டார். யோர்தான் தண்ணிரில் கைகளை நனைத்து நம்பிக்கை அறிக்கை செபத்தை சொன்னார். ஏனெனில் நமது கிறிஸ்தவ மறையின் அடிப்படை உண்மைகள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. இறைமகன் இயேசு திருமுழுக்கு யோவான் கையால் திருமுழுக்கு பெற்ற இதே நதியில்தான் இறைவன் ஒரேகடவுள், ஆள் வகையில் மூவராக இருக்கிறார் என்ற மறை உண்மை வெளிப்படுத்தப்பட்டது. யோர்தான் என்றால் “இறங்குகிறவர்” என்று பொருள். இயேசு திருமுழுக்கு பெற்றது நான்கு நற்செய்தி நூல்களும் குறிப்பிடுகின்றன. இயேசு திருமுழுக்கு பெற்ற இடம் தூய்மை நிலமாகிய புண்ணிய பூமியின் கையப் பகுதியாகும். யோர்தான் நதியில் மேற்குக் கரையில் பெத்தபெரா என்ற இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு திருமுழுக்கு பெற்ற இடம், யோசுவா இஸ்ரயேல் மக்களை இறைவனால் கூறப்பட்ட புண்ணிய பூமிக்கு அழைத்துக் கொண்டு கடந்த சென்ற இடம் என்றும் யூதர்கள் கூறுகின்றனர்.
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற இடத்தில் முக்கோண வடிவில் அமைந்துள்ள கற்பாறை மேடை இன்றும் அடையாளமாக விளங்குகின்றது. இயேசுவின் மீது தூய ஆவி, புறா இறங்குவதுபோல இறங்கிய இடமும் யோர்தான் நதிக்கரையில் அடையாளமாக விளங்குகின்றது. இதன் இரு கரைகளிலும் பலவகை மரங்கள் உள்ளன (எரே 12,5, 50,44).
இயேசுவின் திருமுழுக்கை 3 விதமான நிலைகளில் நாம் அறிந்துக் கொள்ளலாம். 1. வானம் திறந்தது 2. தூய ஆவியின் அருட்பொழிவு 3. வானகத்தில் ஒலித்த தந்தையில் குரல்.

1. வானம் திறந்தது.
இயேசு திருமுழுக்குப் பெறும்போது தந்தையோடு ஒன்றிணைந்திருந்தார் என்பது வெள்ளிடை மலையாகும். வானம் திறந்தது என்பது இறையுறவின் ஒன்றிப்பில் என்பது தெளிவாகிறது. மகனும், தந்தையும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். வானம் திறக்கப்படுதல் என்றால் விண்ணும் மண்ணும் ஒன்றிணைக்கப்படுவதின் அடையாளச் செயல் எனலாம். அதாவது இறைவன் இனி அணுகமுடியாத தொலைவில் இருப்பவர் அல்ல மாறாக அண்மையில் மக்களின் அருகில் மக்களோடு என்றும் இருப்பவர் என்பது பொருளாகும். மக்களது வாழ்வில் பின்னிப் பிணைந்திருப்பவர், மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பவர். இதைத்தான் மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன, அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் தருகின்றன என்று எசாயா 55:10 கூறுகிறது. இது ஓர் அடையாளச் செயலாகிறது.
2. தூய ஆவியானவரின் அருட்பொழிவு
கடவுள் உலகத்தை படைக்கும் போது, கடவுளின் ஆவி நீர்திரளின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது (தொநூ 1,2) மேலும் அந்த ஆவியானவர் இஸ்ராயேல் மக்களை வழிநடத்தி வந்தார் என்று பார்க்கிறோம். அதே ஆவியானவர் இயேசுவின் மீது வல்லமையுடன் இறங்கி வந்ததால் மானிட வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய காலம் புதிய படைப்பின் காலம் தொடங்கியது எனலாம். இதுவரை இருந்த பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு பதிய வாழ்க்கை இம்மண்ணில் புலரும் என்பதன் அடையாளம் தான் இதுவாகும். காலம் நிறைவேறிவிட்டது, “இறையாட்சி நெருங்கி விட்டது” (மாற் 1,15) என் இயேசு கற்பிக்க தொடங்குகிறார்.
தூய ஆவியின் வல்லமையைப் பெற்ற இயேசு ஏழை, பணக்காரர் என்று பாராமல் அனைவருக்கும் இறையரசை போதிக்கிறார். அனைவருக்கும் சமத்துவம் என்ற கொள்கையிலே தன்னுடைய போதனைகளை தொடர்கிறார். பணிவாழ்வில் அனைவருக்கும் முன் அவரவருடைய நிறை, குறைகளை எடுத்துக்கூற தூய ஆவி அவருடைய உள்ளத்தில் உறுதியைத் தருகிறார். எதை உண்பது, எதை உடுப்பது என்று கவலை கொள்ளமல் நேர்மையை நோக்கி தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்.
3. வானத்தில் ஒலித்த தந்தையின் குரல்.
“என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (லூக் 3,22) என்று வானத்திலிருந்து ஒலித்த குரல், தந்தை இயேசுவின்மீது வைத்திருந்;த ஆழ்ந்த அன்பை வெளிக்காட்டுகிறது.
திருமுழுக்கு பெற்றநாம் ஒவ்வொருவரும், நம்முடைய இதயத்தில் தூய ஆவி வழிநடத்த இடமளிப்போம். தூய ஆவியின் வழியில் நாம் நடக்கும்போது அனைத்து தடைகளையும் இறைஇயேசுவைபோல் எதிர்த்து செயல்பட முடியும். நீரே என் அன்பார்ந்த மகன் (லூக் 3,22) என்று தந்தை மகனாகிய இயேசுவை உறுதிப்படுத்தப்பட்டதைப் போல் திருமுழுக்கு பெறும் ஒவ்வொருவரும் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்று உறுதிப்படுத்தப்படுகிறோம். திருமுழுக்கு யோவான் திருமுழுக்க பாவமன்னிப்பைக் கொடுக்கவில்லை, இயேசுவின் திருமுழுக்கு பாவ மன்னிப்பைக் கொடுக்கிறது. இயேசு பெற்ற திருமுழுக்கு மனந்திரும்பதலை காட்டுகிறது (மத் 3,11). அன்று யூதர்களுக்கு வழங்கப்பட்ட திருமுழுக்கு அது இயேசுவுக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் இன்று நாம் பெறும் திருமுழுக்கு இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிப்பதில் அடங்கியிருக்கிறது. அதனை வாழ்வில் வெளிக்காட்டுவோம்.
- சகோ.N. சின்னப்பராஜ்
இறையியல் 4ஆம் ஆண்டு (2009)

ஆண்டின் பொதுக்காலம் 3-ம் ஞாயிறு (III Year)

(நெகே 8: 2-6,8-10; 1கொரி 12:12-30; லூக் 1:1-4; 4:14-21)
முன்னுரை
தவிக்கின்ற மனிதனுக்குத் தேவை வாழ்வு பெற நல்வழி காட்டும் திருநூல், அது என்றும் அழியா இறைவார்த்தைகள் அடங்கிய அற்புதநூல். அது அறியப்பட வேண்டும். புதிய சமுதாயம் படைக்கப்பட வேண்டும். ஏனென்றால் திருநூல் இறைவன் எழுதியக் கடிதம். பதில் எழுதுவது நம் கடமை. இறை பேரன்பின் வெளிப்பாடுதான் திருநூல் என அறிய வேண்டும. இன்றைய முதலாவது மற்றும் நற்செய்தி வாசகத்திலும் திருநூல் பிரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. உயிருள்ள இறைவார்த்தைகள் அடங்கிய எட்டுச்சுருள் வாசிக்கப்பட உயிற்ற, உணர்வற்றிருந்த மனித இதயங்கள் உயிர் பெறுகின்றன. அழுகின்ற நேரமல்;ல. ஆனந்தம் அடைந்து ஆண்டவனை மகிழ்விக்கின்ற நேரம் என்கின்றன. அதற்கு அடிப்படையாக இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
இறைவார்த்தையின் முழு நிறைவான இயேசுவை உணர்ந்திடவும், அவரால் வாழ்வு பெற்றிடவும், இப்பலியில் வரம் கேட்போம் என்றும் நம் குடும்பங்கள் திருநூலைப் போற்றவும், பொருள் புரிந்து வாசிக்கவும் ஆவியின் அருட்கொடைகளால் புதுப்பிக்கப்பட்டு வாழவும் அருள் வேண்டுவோம். ஏன்னில் இன்று இறைவார்த்தை நிறைவேறியது என்ற உறுதியுடன், மகிழ்வுடன் இப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம் (நெகே 8: 2-6,8-10)
கி.மு. 587ல் பாபிலோனிய மன்னன் நெபுகத்தனேசர் எருசலேம் நகர் மீது படையெடுத்தது மட்டுமல்லாமல் யூதர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டு செல்கிறான். ஆனால் கி.மு. 536ல் சைரசு என்ற மன்னன் ஆட்சிக்கு வந்ததும் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு விடுதலை வழங்குகிறான். தாங்கள் இறைவனின் சினத்திற்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டோம் என்பதை உணர்கிறார்கள். இனிமேல் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக மனம் மாறியவர்களாய் உண்மை இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழவும், திருச்சட்ட நூலின் படி வாழவும் உறுதி எடுக்கின்றனர். அப்போது குருவாய் இருந்த எஸ்ராவிடம் திருநூலை வாசிக்கும்படி அணைவரும் தண்ணீர் குளத்திற்கு அருகே வருகின்றனர். இச்சூழலில் திருநூல் வாசிக்கப்படுவதை கேட்போம்.

இரண்டாம் வாசகம் (1கொரி 12:12-30)
தொடக்கக்கால திருச்சபையில் திருமுழுக்குபெற்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் யாரென்றால் யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், உரிமைக் குடிமக்கள், பிற இனமக்கள் ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தூய ஆவியின் அருட்கொடைகளையும் பல்வேறு வரங்களையும் பெற்றவர்களாக இருந்தனர். இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மக்களிடையே ஏற்றத்தாழ்வு தலை தூக்கத் தொடங்கியது. இதை உணர்ந்த திருத்தூதரான பவுல், தூய ஆவியின் வரங்கள் பலருக்கும் பலவேறு வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பது தன் சொந்த வாழ்வுக்காக அல்ல, மாறாக திருச்சபையின் வளர்ச்சிக்காக என்பதைச் சுட்டிக் காட்ட விரும்பி நாம் அனைவரும் கிறிஸ்துவின் மறையுடலாகவும், அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்க்கு செவிக்கொடுப்போம்.

இறைமக்களின் வேண்டல்
1. என் மந்தையின் ஆடுகளை பேணிகாக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன் என்று கூறிய இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் இறைவார்த்தையின் மீது முழுநம்பிக்கை உடையவர்களாக மக்களுக்கு இறைவார்த்தையை அறிவிக்க தேவையான அருளை தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானத்தின் இறைவா! நாட்டையாளும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் பொதுநலத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, சுயநலம் இன்றி மக்களின் தேவையை நிறைவேற்றும் நல்தலைவர்களாய் செயல்பட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கண்பார்வையற்ற பர்த்திமேயுவை பார்த்து நீ போகலாம் உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று என்று மொழிந்த இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் நட்சத்திரங்களாக செயல்பட்டு இறையாட்சியின் விழுமிங்களான அன்பு, நீதி, சமாதானம் அகியவற்றை வாழ்வாக்கி உமது இறைவார்த்தையை நிறைவேற்ற தேவையான சக்தி தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. துன்புற்ற இஸ்ரயேலை நோக்கி நான் ஆறுதல் அளித்து, உங்களை நீரோடைகள் ஓரமாக வழிநடத்தி செல்வேன் என்று கூறிய இறைவா! எம் பங்கிலும், இவ்வுலகிலும் வாழும் ஏழைகள், எளியோர், அனாதைகள், விதவைகள், முதியோர்கள் மற்றும் உடல நோயாளிகள் அனைவரையும் உமது ஆறுதலளிக்கும் கரங்களால் தொட்டு ஆசிரை பொழிந்தருள வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நற்செய்தி முழக்கம் (லூக் 1:1-4; 4:14-21)

சிலர் அடிப்படையான ஒரு கொள்கையை தங்களுக்கே உரித்தான தனிப்பெருங்கொள்கையாக வைத்திருப்பார்கள். இது போன்று விவிலியத்தில் ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடுவரை, படைப்பு முதல் இறுதிவரை நாம் காணும் ஒரு அடிப்படை உண்மை “இறையன்பு”. இறைவன் தனது அன்பரசை உலகிலும், மனிதர் உள்ளத்திலும் அமைக்க எடுக்கும் முயற்சி கிளைப்போல் மீட்பு வரலாற்றில் இன்றும் ஓடுவதை நாம் காணலாம். இந்த அடிப்படையான இறையன்பு நமக்கு கிடைக்க இறைநம்பிக்கை வேண்டும்.
யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெறத் தீர்மானித்தது இயேசு எடுத்த முதல் முக்கியமான முடிவு என்றால், இரண்டாவது முக்கியமான முடிவு இயேசுவின் எண்ணத்தையும், நோக்கத்தையும் நமக்கு தெளிவாக்குகிறது. எல்லாரும் யோர்தானில் பாவங்களை அறிக்கையிட்டுத் திருமுழுக்குப் பெற்று அழிவிலிருந்து தப்பித்துக் கொள்வதன் வழியாக இஸ்ரயேலைக் காத்திட இயேசு நினைக்கவில்;லை. அவர் தேவை என்று கண்டது இன்னொன்று, அதாவது ஏழைகள், பாவிகள், பிணியாளர் போன்றவர்களிடம் அக்கறை காட்டுவது. இஸ்ரயேலில் தவறிப்போன ஆடுகளைத் தேடித் செல்வது - இதுவே இயேசு எடுத்த இராண்டாவது முக்கியமான முடிவு.
யோவான் திருமுழுக்குப் பெற்று மானமாற்றம் அடைய மக்களை அழைத்தார். இயேசுவோ அனைத்துத் தீமைகளிலுமிருந்து மக்களை விடுவிக்கக் தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
திருமுழுக்கு யோவான், மனமாற்றத்திற்கான திருமுழுக்கை வலியுறுத்தினார். இயேசுவோ அதற்கு பதிலாக நம்பிக்கையின் வலிமையை அழுத்திப் பேசினார்.
திருமுழுக்கு யோவான் பாவிகளுக்குப் போதித்தார் இயேசுவோ பாவிகளோடு தம்மை ஒன்றுப்படுதிக் கொண்டார்.
தொழுகைக் கூடத்தில் இயேசு, எசாயா நூலிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசித்து விளக்கம் அளித்தாரா என்பதன்று பிரச்சனை. இயேசுவின் பணியை மிகவும் பொருத்தமாக விவரிக்கின்ற பகுதிகள் இவை, எனவே இப்பகுதிகளைத் தெரிந்தெடுத்து இயேசுவின் பணி எத்தகையதாய் இருந்தது என்று விளக்கிட லூக்கா முனைந்தது முற்றிலும் சரியே.
எசாயா நூல் பகுதிகளில் வருகின்ற காதுகேளாதோர், பார்வையற்றோர், காலூனமுற்றோர், வாய் பேசாதோர், ஒடுக்கப்பட்டோர், உள்ளம் உடைந்தோர், சிறைப்பட்டோர், கட்டுண்டோர் ஆகிய அனைவருமே “ஏழைகள்” மற்றும் “ஒடுக்கப்பட்டோர்” ஆவர். வௌ;வேறு விதங்களில் எழைகளாக இருப்பவர்களுக்கும் வௌ;வேறு வகையில் ஒடுக்கப்பட்டிருந்போருக்கும் இறைவன் எந்தெந்த வழிகளில் நலம் கொணர்வார் என்பதை இப்பகுதிகள் விளக்குகின்றன.
மத் 9,2 “இயேசு அவர்களுடைய நம்பிக்.கையைக் கண்டு முடக்குவாத முற்றவரிடம், மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார்.”
முடக்குவாதமுற்றவரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
மத் 9,29 “பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார்.”
பார்வையற்றோரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
மாற் 1,41-42 “இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.”
தொழுநோயாளரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், தொழுநோயாளரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது போன்று, நமது வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்றால் இறைவார்ததையின் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். அப்படி இல்லை என்றால் நமது வாழ்க்கையில் கண் இருந்தும் குருடர்களாக, கால் இருந்தும் முடவர்களாக, காது இருந்தும் செவிடர்களாக தான் இருப்போம்.
பிரியமாணவர்களே, இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம், நமது வாழ்க்கையிலும் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேற வைப்போம்.

- அ. தாமஸ் சைமன் ராஜ்
இறையியல் 4ஆம் ஆண்டு - 2009