ஆயனைத் தேடும் ஆடுகளே

ஆயனைத் தேடும் ஆடுகளே
ஆயன் நம்மை தேடுகிறார் -2
சிதறிய சிறுமந்தை நாமே -2
சேர்ந்தே அவரிடம் செல்வோம்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2
1.
பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாற செய்வேன்
பாயும் நீர் அருவிக்கு நடத்தி செல்வேன் -2
நலிவுற்றதும் வலுவற்றதும்
களைப்புற்றதும் சோர்வுற்றதும்
நிலை வாழ்விலே நிலைபெற செய்வேன்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2
2.
பெரும்சுமை சுமர்ந்து சோர்ந்திருப்போரே
பணிவும் கனிவும் எனக்குண்டு -2
என சுமையோ எளிதானது என் நுகமும் எளிதானது
என்னிடம் பகின்று இளைப்பாற்றி காண்பீர்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2

திருவிருந்து பாடல்

எனில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீயின்றி ஒன்றில்லையே
என்றும் நீதானே என் எல்லையே

1.
என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
என் அன்பு தாயாக என் நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனையழைத்தேன் உயிர்கொடுத்தேன்
உறவைத் தேடியே
2.
பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனையழைத்தேன் உயிர்கொடுத்தேன்
உறவைத் தேடியே

திருவிருந்து பாடல்

என்தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே

இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2

1.
ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறையாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே.. (இறைவா)
2.
உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே.. (இறைவா)

காணிக்கைப் பாடல் - பொன்னும் பொருளும் இல்லை


பொன்னும் பொருளும் இல்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் சொந்தம் பந்தமுமெல்லாம்
நீயென சொல்லி வந்தேன் எந்தையும் என்தாயும் நீயன்றோ - நீயே
என்னை ஆளும் மன்னவனன்றோ.
1.
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ
என் நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழிவினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரை பலியென தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்
இன்று உனக்கு நான் எனையளிப்பேன்
2.
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உனதருள் கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன்
என்றும் உன்னிலே வாழ்ந்திடுவேன்

தியானப்பாடல்

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் (2) நான்
மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2

1.
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் - நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் -2
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2
2.
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - 2
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2

வருகைப்பாடல்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளிpயினில் நடந்திட
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
1.
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் நம்மை தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியை காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்
2.
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார். வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்

ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - (4)
1.
மார்போடு அணைப்பாரே
மனக் கவலை தீர்ப்பாரே
2.
கரம்பிடித்து நடத்துவார்
கன் மலைமேல் நிறுத்துவார்
3.
எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4.
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்