புதுநன்மை பெருவிழா – மரியன்னை பேராலயம், குடந்தை

வருகைப்பாடல்
மங்கள நாளில் தலைவனே எம் மனக்கோயிலின் இறைவனே
அன்பு நிறைந்த தந்தையே என்றும் ஆராதிப்போம் துதிப்போம்
அல்லேலுயா-4
|
நீர் தந்த நாளெல்லாம் திருநாளே பேரானந்த்த் திருநாளே
நீர் செய்த செயலெல்லாம் வெளிப்பாடே
உம் நேசத்தின் வெளிப்பாடே-2

உண்மையிலும் ஆவியிலும் உம்மை
தொழுதேத்தும் இந்த நாள் நல்ல நாளே
உண்மையிலும் ஆவியிலும் உம்மை
தொழுதேத்தும் இந்த நாள் நல்ல நாளே
||
உம் கோயில் பறவைகள் சரணாலயம்
என்றும் வாழ்கின்ற சரணாலயம்
உம் பார்வைபட்டாலே வளமாகும்
உம் பயிர்கள் வளமாகும் -2
பறவையிலும் பயுர்களிலும்
பெரிதாகும் உமதன்பு உமக்கின்பம்-2

தியானப் பாடல் 
தொகையறா..
தாயாக அன்பு செய்யும் இறைவா என் வாழ்விலே
ஒளியேற்றவா

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
கொஞ்சும் தமிழ் மொழி பேசி எனைத்தேற்றவே -2
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா

1.
உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
2.
உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் மிட்டிவேன்
உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீதானே இறைவா என் உள்ள தினைவாக நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

காணிக்கைப்பாடல்
நிலத்தின் விளையும் மனித உழைப்பும்
சேரும் நேரம் இது
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்
|
அப்பமும் இரசமும் மாறும் வளே
உமது பிரசன்னம் ஆகுமே
அமைதி இழந்த எனது வாழ்வில்
அதிசயங்கள் காணுமே
உம்மையே அறிந்தேன் என்னையே இழந்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்
||
உடலும் உள்ளமும்உயர்ந்த பலியாய்
உமது பாதம் படைக்கின்றேன்
உமது வழியில் உவகை காண
உள்ளது அனைத்தும் இழக்கின்றேன்
உம்மையே அறிந்தேன் உன்னையே இழந்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்

திருவிருந்து பாடல்
என் இயேசு தந்த இந்த அன்பான விருந்து
என் வாழ்வின் அருமருந்து-2
இதை என் நினைவாக செய்யுங்கள்
என்றார் இயேசு-2 இயேசு
|
உயிரினை அளித்திடும் திரு உடலாம்
உறவினை வளர்த்திடும் இறை உடலாம்
பிணிகளை நீக்கிடும் கனிகளை கொடுத்திடும்
மாபரன் இயேசுவின் உயிருடலாமை
அனைவரும் இதைவாங்கி உண்ணுங்ஙகள் என்றே
அன்புடன் அழைக்கிறார் இயேசு இயேசு
||
பாவங்கள் கழுவிடும் திரு இரத்தமாம்
பரகதி சேர்த்திடும் இறை இரத்தமாம்
அன்பிலும் பண்பிலும் அருளிலும் வளர்த்திடும்
ஆண்டவர் இயேசுவின் திரு இரத்தமாம்
அனைவரும் இதை வாங்கி பருகுங்கள் என்றே
அன்புடன் அழைக்கிறார் இயேசு இயேசு

நன்றி பாடல்
நன்றியால் துதிப்பாடு நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உணமையுள்ளவர்
|
எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்-2
கலங்ஙிடதே திகைத்திடதே
துதியினால் இடுந்து விழும்-2
||
செங்கடல் நம்மைச் சுழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு-2
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்-2

மாதப்பாடல்
அலங்காரத் தாயே அமலோற்ப மரியே ஆரோக்கியம் நீயே அம்மா
உம்மை அண்டி வந்தோர்க்கு அடைக்கலமே ஆறுதல் நீயே அம்மா
அம்மா மரியே நீ வாழ்க அலங்காரத் தாயே நீ வாழ்க
அருளின் நிறைவே நீ வாழ்க ஆவியின் ஓவியமே வாழ்க
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

|
குழந்தையின் அழுகுரல் கேட்டிடும் தாயைப்போல் -எம்
குடந்தை மக்களின் வேண்டுதலைக் கேளும் தாயே
ஆயர் குருக்கள் துறவியர் மாந்தர்
இயேசுவின் தலைமையில் இணைந்தே வாழ்ந்திட
பரிந்துரை செய்திடுவாய்
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2
||
வார்த்தை நீ கேட்டாய் இதயத்தாலே சுமர்ந்தாய் -இறை
வார்த்தையைக் கேட்கும் மாந்தருக்கு மாதிரியாய் ஆனாய்
வாரத்தையை ஏற்று இயேசுவை சுமர்ந்து
உலகிலே வார்த்தைக்கு சாட்சியாய் வாழ்ந்திட
பரிந்துரை செய்திடுவாய்
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

புதுநன்மை பெருவிழா – மரியன்னை பேராலயம், குடந்தை


திருப்பலி முன்னுரை

இயேசுவின் பிரியமான சகோதர, சகோதரிகளே! மிக புனிதமான ''நற்கருணை'' திருச்சபையின் ஒட்டு மொத்த ஆன்மிக நலனை உள்ளடக்கியது என்று இரண்டாம் வத்திகான் சங்கம் கூறுகின்றது. இயேசுவை வழங்கும் அருள் அடையாளம் நற்கருணை. இந்த மாபெரும் மறைபொருளுக்கு இயேசு பெயர் கொடுக்கவில்லை. எம்மாவுஸ் சீடர்களிடமிருந்து நாம் அறிவது அப்பம் பிடுதல் என்ற குறிப்பு. நற்செய்தியின் பிண்ணனியில் இயேசு தன்னை அப்பத்தோடு ஒப்பிட்டு கொண்டார் என்பது தெளிவாகிறது. ''விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இதை யாரவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்''. ''எனது சதையை உணவாக கொடுக்கிறேன் அதை உலகம் வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்'' இதுவே இயேசுவினுடைய வார்த்தைகள். உலக மீட்பர்இயேசு கிறிஸ்து உலகம் புதிய வாழ்வு பெறுவதற்க்காக உணவாகின்றார்.இந்த உணவு உண்ணப்படும் போதெல்லாம் புதிய வாழ்வு பிறக்கின்றது. புதிய வாழ்விற்கான ஏக்கம் பிறக்கின்றது. இதை உண்போர் என்றுமே நிலையான வாழ்வைப பெறுவர்.இதை தான் இயேசுவின் சீடர்கள் தங்களின் வாழ்வினில் உணர்ந்தனர். இன்று புதிதாக இயேசுவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உண்ணப் பொகும் நம்முடைய பிள்ளைகள் மறு கிறிஸ்துவாக மாறவும் புதிய வாழ்வு இவர்களில் பிறக்கவும் இவர்களுக்காக இத்திருப்பலியில் நாம் அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம்.

 முதல் வாசக முன்னுரை: கடவுளாகிய ஆண்டவர் பாலை நிலத்தில் உங்களை கூட்டி சென்ற வழிகளை நினைவில் கொள்ளுங்கள் எனறும், மனிதர் அப்பத்தினால் மட்டும் அன்று மாறாக கடவுளின் வாய்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கிறார் என்றும், உங்களுக்கும் உங்களுடைய முதாதையர்க்கும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். கொடிய பாலை நிலத்தில் இறைவன் வழி நடத்தினார் என்றும் மோயீசன் இஸராயல் மக்களை நோக்கி கூறிய இறைவார்த்தைக்கு நாம் அனைவரும் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை : கடவுளை புகழ்ந்து நாம் அனைவரும் கிண்ணத்தில் பருகிறோம். அப்பத்தை பிட்டு உண்ணுகிறோம். ஆகையால் கிறிஸ்துவின் இரத்தத்தில்,கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்கிறோம் என்றும், அப்பம் ஒன்றே, ஆகையால் நாம் பலராகினும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்றும் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இறைவார்த்தைக்கு நாம் அனைவரும் செவிமெடுப்போம்.
மன்றாட்டுகள் 
1. அன்பின் இறைவா! திருச்சபையை வழி நடத்தும் திருத் தந்தை,ஆயர்கள்,குருக்கள்,துறவறத்தார் அனைவரும் எழைகளுக்கு நற்செய்தியும், சிறைப்பட்டோர்க்கு விடுதலை வாழ்வு வழங்கவும், நலிவுற்றோர்க்கு நல்வாழ்வு வழங்கவும், கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும்போதுமான ஆசீர்வாத்த்தையும் திடத்தையும் இவர்களுக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் இறைவா! திருப்பலியில் பங்கேற்க்கும் அனைவரையும் இவர்களுடைய குடும்பங்களையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்.இவர்கள் கும்பத்தில் அன்பும்,சமதானம் நிலவவும், ஒருவரை ஒருவர் புரிந்து வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
3. வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவருக்கு பசியே இராது என்றுசொன்ன இயேசுவே! இன்று உம்முடைய திரு உடலையையும், திரு இரத்தத்தையும் உண்ணப் போகும் எங்களுக்கு நீர் ஒருவரே பசியையும், தாகத்தையும் போக்க்கூடியவர் என்றும், நீரே ஆன்மீக உணவு என்றும், உன்மேல் நம்பிக்கையும் அன்பையும் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின் இறைவா! திரு உடலையையும், திரு இரத்தத்தையும் உண்ணப் போகும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரம்ப பெற்று கிறிஸ்துவின் ஒரே உடலும் ஒரே மனமும் உள்ளவராக மாறவும் அவருடைய அன்பில் நிலைத்திருக்கவும் புதிய வாழ்வு எங்களில் பிறக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கை மன்றாட்டு
ஒளி : மெழுகுவர்த்தி எவ்வாறு தன்னை அளித்து பிறருக்கு ஒளி தருகிறதோ அதை போல் திரு உடலையையும், திரு இரத்தத்தையும் உண்ணப் போகும் நாங்கள் பிறருக்கு வழிகாட்டியாக வாழ ஒளியுட்டும் மெழுகு திரிகளை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்.

மலர்: மலர் எவ்வாறு பிறருக்கு மணங்களையும் மகிழ்ச்சியும் தருகிறதோ அதைபோல் நாங்கள் தூய உள்ளத்தோடு பிறரை மகிழ்ச்சி படுத்தும் வகையில் வாழ இந்த மலர்களை உமக்கு அரபணிக்கின்றோம்.

செடி: நாளருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பிறருக்கு உதவும் இந்த செடியை போல நாங்களும் பிறருக்கு உதவும் மன நிலையை கொண்டிருக்க இந்த செடியை அர்பணிக்கின்றோம்.

அப்ப இரசம்: மாபரன் இயேசு கிறிஸ்து இந்த அப்பத்திலும் இரசத்திலும் திரு உடலாவும் திரு இரத்தமாகவும் எழுந்து எவ்வாறு தன்னையே பகிர்ந்து பிறருக்கு கொடுக்கிறாறோ அதைப் போல நாங்களும் சுயநலம் மறந்து பிறர் நலம் காண இறைவா இந்த அபத்தையும் இரசத்தையும் அர்பணிக்கின்றோம்.

சிலுவைப்பாதை - திருத்தந்தை 2ம் ஜான் பால்

முதலாம் நிலை :

இயேசு கெத்சமனித் தோட்டத்தில் செபிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 39-44
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம்,சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், என்றார். பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார். 'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல: உம் விருப்பப்படியே நிகழட்டும்' என்று கூறினார்.
செபம்:
தந்தையே இறைவா!
உமது அன்பு மகன் இயேசுவின் மூலம் செபிக்கக் கற்று கொடுத்தவரே! நாங்களும் விழிப்பாயிருந்து செபிக்க உறுதியான உள்ளமும், தாராள மனமும் தந்தருளும். செபமே ஜெயம் என்பதை நினைவு கூர்ந்து, அதன் மூலம் பாவ வாழ்க்கையிலிருந்து விலகி மகிழ்ச்சி நிறைந்த தன்னலமற்ற புதுவாழ்விற்கு செல்ல ஆசீர் அருள்வீராக. உம் மகன் இயேசுவின் ஒவ்வொரு துளி இரத்தமும் எங்களைக் கழுவி மீட்பைத் தரட்டும். ஆமென்.
அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.
இரண்டாம் நிலை:
யூதாசு முத்தமிட இயேசு கைது செய்யப்படுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் 
கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 47-48
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்கு முன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம்,யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? என்றார்.
செபம்:
தந்தையே இறைவா!
நீவீர் எங்கள் பலவீனங்களையும் குற்றங்குறைகளையும் உம் மகன் இயேசுவை ஏற்றுக் கொள்ள செய்தீர். ஆனால் பாவம் என்னும் முத்தத்தால் தினமும் இயேசுவைக் காட்டி கொடுக்கிறோம் என்ற உணர்வு எங்களில் எழ, அதன் மூலம் மனம் வருந்தி உமது மன்னிப்பில் நாங்கள் புனிதமடைய, உம் அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க, உம் சாட்சிகளாய் வலம் வர அருள் புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

முன்றாம் நிலை
இயேசு தலைமைக் குருக்களால் தீர்ப்புக்குளாகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 66-70
பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடி வந்தார்கள். இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள். அவர்கள், ‘நீ மெசியா தானா? எங்களிடம் சொல்’ என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ’நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்: நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்’ என்றார். அதற்கு அவர்கள் அனைவரும், 'அப்படியானால் நீ இறை மகனா?' என்று கேட்டனர். அவரோ,'நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்' என்று அவர்களுக்குச் சொன்னார்.
செபம்:
தந்தையே இறைவா!
நிபந்தனையற்ற அன்பால் எங்களை என்றும் நேசிப்பவரே, உமது ஆறுதலாலும் அரவணைப்பாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளச் செய்வீராக. உமது மகனும் எங்கள் மீட்பருமான இயேசுவின் தியாக உள்ளத்தையும், தைரியத்தையும் எங்களுக்கு தருவீராக! இதன் மூலம் பிறரைத் தீர்ப்பிடாமல் அவர்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவத்தைத் தாரும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

நான்காம் நிலை
இயேசுவை பேதுரு மறுதலித்தார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 54-60
வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார். அப்போது பணிப்பெண்ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப் பார்த்து,'இவனும் அவனோடு இருந்தவன்' என்றார். அவரோ,'அம்மா, அவரை எனக்குத்தெரியாது' என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப் பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், 'நீயும் அவர்களைச் சேர்ந்தவன் தான்' என்றார். பேதுரு, 'இல்லையப்பா' என்றார்.ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர்,'உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான் இவனும் கலிலேயன் தான்' என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, 'நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது'என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார் இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
செபம்:
தந்தையே இறைவா!
இயேசுவில் உறுதியாக இருந்த பேதுரு அவரை மறுதலித்தப்போதிலும், மனம் கசிந்து அழுது, வருந்திய அவரை நீர் ஏற்றுக் கொண்டு, உம் மந்தையின் ஆயனாய் சிறப்புறச் செய்தது போல் எங்களையும் உமக்காகவும், திருச்சபைக்காகவும் ஊழியம் புரிய வரம் தாரும். எங்களில் விசுவாசத்தை அதிகப்படுத்தி நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மைக் காணவும், பொய்மை, பொறமை, பேராசை, அநீதிகள் எங்களை விட்டு நீங்க அருள்புரியும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

ஐந்தாம் நிலை
இயேசுவுக்கு பிலாத்து மரணதண்டனை விதிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மத்தேயு 27: 11-14
இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான். அதற்கு இயேசு, 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர் மீது குற்றம் சுமத்திய போது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், 'உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?' என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.
செபம்:
தந்தையே இறைவா!
உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியதால், படைக்கப்பட்டவனால் படைத்தவர் சிலுவைச்சாவுக்குத் தீர்ப்பிடப்படுகிறார். பல நேரங்களில் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் நாங்கள் தடுமாறும் வேளைகளில் யாரையும் தீர்ப்பிடாமல், எங்கள் உள்ளத்தில் உம் அன்பை ஏற்றி  உமக்குரியவராகவும், பாவத்தால் உமது நட்பை இழக்காமல் இருக்கவும் அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

ஆறாம் நிலை
இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டு முள்முடி சூட்டப் பட்டார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 1-3
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, 'யூதரின் அரசே வாழ்க!' என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம்,'அவனை நான் உங்கள் முன் வெளியே கூட்டி வருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்றான்.
செபம்:
தந்தையே இறைவா!
உம் நேச மகன் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டதின் மூலம் உலகத்தின் பாவங்களையும்,அதன் பரிசான சாவையும் வெல்ல வழிவகுத்தீரே! எங்களுக்கு ஏற்படும் நிந்தை அவமானங்களை நாங்களும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவும், அதன் வழியே இயேசுவின் உயிர்ப்பில் மகிமை பெறவும், உண்மைக்கு சாட்சியாய் இருக்க அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்..

ஏழாம் நிலை
இயேசு சிலுவையைச் சுமக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 16-17
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.
செபம்:
தந்தையே இறைவா!
உம் நேச மகன் இம்மனுக்குலத்தை மீட்க சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு சென்றாரே! அவர் சுமந்த சிலுவையே எங்கள் வாழ்வில் வெற்றியைத் தந்தது. பிறரால் எங்களுக்கு ஏற்படும் சிலுவைகளை நாங்கள் தியாக உள்ளத்துடன் ஏற்று, சுமந்து செல்ல, நாங்கள் வாழும் சமுதாயத்தில் இயேசுவுக்கு சாட்சியாக வாழ அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.


எட்டாம் நிலை
இயேசுவுக்கு சீமோன் உதவுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23: 26
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல் வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச்
செய்தார்கள்.
செபம்:
தந்தையே இறைவா!
சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் இயேசுவுடன் சிலுவை சுமந்து சென்றதைப் போல் எங்கள் வாழ்வில் வரும் துன்ப துயரங்களை ஏற்றுக்கொள்ள மனத்திடமும், ஆழ்ந்த விசுவாசத்தையும், உமது ஆறுதலையும் எங்களுக்கு தாரும். சீமோனைப் போல் நாங்களும் வாழ்வில் துன்பப்படுவோருக்கு உதவும் நல்லெண்ணத்தைத் தாரும். எப்போதும் எங்களை சுமப்பவர் நீராக இருப்பதை உணர்ந்து வாழ அருள்புரிவீராக.. ஆமென்

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்

ஒன்பதாம் நிலை
இயேசு வழியில் எருசேலம் பெண்களை சந்திக்கிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23: 27-29
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம். மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது;மலடிகள் பேறுபெற்றோர் என்றும் பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் என்றும் சொல்வார்கள்.
செபம்:
தந்தையே இறைவா!
மாசற்ற இயேசுவுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ட எருசேலம் மகளிர் அவரை எதிர் கொண்டபோது ‘எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ என்று ஆறுதல் தந்தீரே! எங்களாலும் எங்கள் பிள்ளைகளாலும் நேர்ந்த நிந்தை அவமானத்தால் உம்மை காயப்படுத்தியதற்காக வருந்திகிறேம். எங்கள் குடும்பம் உமது கோவிலாக மாற அருள்புரிவீராக.. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பத்தாம் நிலை
இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 17-19
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்விருவரையும் இருபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் 'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்று எழுதியிருந்தது.
செபம்:
எங்கள் விடுதலை நாயகனே! அன்பு இயேசுவே!
அவமானச் சின்னமாகிய சிலுவையில் எங்களுக்காக மரிக்க உம்மை கையளித்தீரே! அந்த அவமானச் சின்னம் சாவை வென்று எங்கள் வாழ்வின் வெற்றியின் சின்னமாக மாறியது உம் அன்பால் அன்றோ! எங்களுக்கு ஏற்படும் அவமானங்கள் எல்லாம் வெற்றியின் படிக்கட்டு களாக அமைய அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதினொன்றாம் நிலை
இயேசு கள்வனுக்கு விண்ணக வாழ்வை அளிக்கிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23:39-43
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று;என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு,'கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!' என்று பதிலுரைத்தான். பின்பு அவன், 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்றான். அதற்கு இயேசு அவனிடம், 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்' என்றார்.
செபம்:
அன்பு இயேசுவே! மனந்திருந்தி நற்செய்தியை ஏற்றுக் கொண்டால் புதுவாழ்வு பெறுவீர் என்பதை எங்களுக்கு இந்த நல்ல கள்வன் மூலம் உணர்த்தினீரே. இந்த தத்துவத்தை உணர்ந்தவர்களாய், மனம் திருந்தி, உமது இல்லமாகவும், உமது சீடனாகவும் வாழ பரிசுத்த ஆவி எங்களை வழிநடத்த உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பனிரெண்டாம் நிலை
இயேசு தன் தாயிடம் பேசுகிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 26,27
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்' என்றார். பின்னர் தம் சீடரிடம், 'இவரே உம் தாய்' என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
செபம்:
அன்பு இயேசுவே!
இதோ உன் மகன் என்று அன்னை மரியாளிடம் எங்களையும், இதோ உன் தாய் என்று அன்னை மரியாளை எங்களுக்கு அன்னையாகவும் கொடுத்தீரே. அந்த அன்னை மரியாளின் நிகரற்ற அன்பும், விவேகமும், தனித்துநின்று போராடிய மனவலிமையையும் எங்களுக்கு தாரும். அன்னையின் அருளும், பரிந்துரையும் எங்களோடு எப்பொழுதும் இருப்பதை உணர்ந்தவர்களாய் நாங்கள் உமக்காய் இவ்வுலகில் வாழ்ந்திட அருள் வரம் தாரும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதிமூன்றாம் நிலை
இயேசு தன் சிலுவையில் மரிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 28-30
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, 'தாகமாய் இருக்கிறது' என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு,
'எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.
செபம்:
அன்பு இறைவா!
மனிதனைப் போல இயேசுவும் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டு அதனை வெற்றி கொள்ள உதவினீரே. அந்த மரணத்தால் எங்களுக்கு புதுவாழ்வு அளித்தீரே! நாளும் இயேசு காட்டிய வழியில் வாழ்ந்து, அவரில் மரித்து உம் வான்வீட்டை வந்தடைய எங்களுக்கு அருள்வரம் தருவீராக! ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதிநான்காம் நிலை
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மாற்கு 15: 43-46
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்து விட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து,'அவன் இதற்குள் இறந்து விட்டானா?' என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார். அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
செபம்:
அன்பு இறைவா!
தமக்கென ஒன்றும் இல்லாத நிலையில் தம்மையே அளித்த, அன்பு இயேசுவிற்கு கல்லறைக் கூட அடுத்தவர் அளிக்கும் நிலை ஏன்? எல்லாம் எம்மில் நிலைக்கொண்டுள்ள சுயநலத்தால் தானே! தனக்கென எதுவுமில்லாமலிருந்த, எங்கள் நல்ல ஆயனைப் போல் நாங்களும் சுயநலம் இழந்து பிறர்நலம் காண அருள்வீராக! இதன் மூலம் உம் மனிதநேயம் இவ்வுலகில் அனைவருக்கும் சென்று அடைய துணைபுரிவீராக! ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதினைந்தாம் நிலை
இயேசு உயிர்த்தெழுந்தார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மாற்கு 16: 4-6
ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப் பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம்,திகிலுற வேண்டாம். சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுப்பப் பட்டார். அவர் இங்கே இல்லை. இதோ, அவரை வைத்த இடம்.
செபம்:
வெற்றி திருநாயகனே!
மரணத்தை வென்ற தெய்வமே! இறைவனின் திட்டத்தை முழமையாக்கியவரே! விண்ணக வீட்டில் எங்களுக்கு நீர் செய்துள்ள ஏற்பாடுகளில் நாங்கள் நிலையாய் பங்கு கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் எங்களை நீரே வழிநடத்தும். இவ்வுலகில் அதற்கு ஏற்ப எங்கள் வாழ்வு அமைந்திட நீர் எங்களின் உள்ளும் ,எங்கள் முன்னும், பின்னும் எங்களை சுற்றி அரணாயிருந்து எங்களை உம் வெற்றி பாதையில் நடத்துவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .  


What Easter is


The True Signs of Easter are…
The blood stained Cross, 
The crown of thorns;
The empty tomb and the burial cloth.


Today…the signs are… 
Colored eggs and chocolate bunnies,
A rainbow of jelly beans.
Chocolate rabbits,
spring flowers pretty and 
Baskets full of candy.


But how many truly know
What Easter Is.
It is a time of renewal and new life
as it happens every spring.
Blooming flowers, singing birds, and 
Gentle rain signal the season of spring,
A season of newness, freshness 
And brightness.
Winter’s over it shows, 
And spring has come.


Easter too…
Is a time of happiness and newness,
Because, Jesus is risen and 
death no more prevail.
The God who suffered for you and me,
The God who was crucified for you and me,
The God who bore the wounds of our sins,
The God who carried the weight of our faults,
The God who died for you and me,
The God buried in the tomb for you and me,
Is risen indeed to give new life 
For you and me, and for the world;
To show the way to the Father,


To love and forgive as God’s children
To be merciful and forgiving as Jesus is
To live new life as a people of hope.


     JESUS IS RISEN INDEED


For we are disciples of the risen Jesus.
Halleluiah the happy song we sing. 


Therefore…
A time of hope it is 
And a day of rebirth and renewal.
The Easter celebration end not here.
It signals a new beginning 
And brand a new life,
True friendship, peace, and 
Life-giving its mission.
Indeed the Easter spirit is all about
Hope, love, and joyful living.


Rev. Santhiyagu Arcokiyam, msfs

இயேசு கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு Easter Tamil Sermon


Click to listen to Fr. Arul Prakasam Sermon on Easter Vigil 2011
(உயிர்ப்பு ஞாயிறு மறையுரை ஒலி வடிவில்)



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே
பரந்து விரிந்த கடல்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நீர்தான்
பரந்து விரிந்த வானத்தின் வண்ணம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நிறம்தான்.
பரந்து விரிந்த இந்த உலகம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த கருதான்.

எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமுமாய், ஆதியும் அந்தமுமாய் 
‘அ’ கரம் முதல் ‘ன’ கரம் வரையுமாய் ஊனாய் உயிராய் உண்மையாய் ஒளியாயிருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா வாழ்த்துகள்.

உண்மைக்கு இல்லை உறக்கம். 

அன்பிற்குரியவர்களே இன்றைய வாசகங்கள் அனைத்தும் உயிரோட்டமுள்ள செயல்வீரர்களாக, வெற்றியின் விழா நாயகர்களாக நாம் திகழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது. இன்றைய நற்செய்தியில் யோவான் குறிப்பிடுகின்ற ஒவ்வொரு அடையாளங்களும் வார்த்தைகளும் அதிக இறையியல் அர்த்தமுள்ளதாகவும் தினந்தோறும் இயேசுவின் உயிர்ப்பு நம்மில் நிகழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.

‘வாரத்தின் முதல் நாளான்று’ என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார். எனவே இவ்வார்த்தை யூத மக்களின் பழக்கமான தொழுகைக் கூடத்தில் கூடுவதையும் கடவுள் முதல் நாளன்று (தொநூ 1, 3) ‘ஒளி தோன்றுக’ என்றார்.  உடனே கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது. நம் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் கடவுளின் நாளாக  அனுசரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கிறிஸ்துவ மக்கள் யூதர்களைப் போல் ஆலயத்தில் கூடுகின்றோம்.  அப்போது நாம் உயிர்த்த கிறிஸ்துவை சந்திக்கிறோமா அல்லது உணர்கிறோமா என யோசிக்க வேண்டும். 

‘விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்’.  இவ்வார்த்தையை ஆழமாக சிந்தித்து பார்த்தோமென்றால் இதன் அர்த்தம் தெளிவாகப் புரியும். அதாவது இயேசுவின் சீடர்களுக்கும் மகதலா மரியாவுக்கும் இயேசு தான் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னது மறந்து போனதால் அவர்களுக்குள் ஓர் அச்சம் நிலவியிருக்கலாம். காரணம் இயேசுவின் உடலை மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள், பரிசேயர்கள் எங்காவது எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிடுவார்களோ என்றும் அல்லது திருடர்கள் கல்லறைக்குள் தங்க ஆபரணங்களோ விலைமதிப்பு மிக்க பொருளோ ஏதாவது இருக்கும் என்று எண்ணி நுழைந்து இயேசுவின் உடலை திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அச்ச உணர்வால் அவர்கள் உள்ளம் இருள் சூழ்ந்திருக்கலாம். மேலும் இயேசுவுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் செய்ய கல்லறைக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் கண்டதோ கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது. எனவே இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா என்ற மாபெரும் மகிழ்ச்சியுணர்வு அவளுக்குள் ஏற்பட்டு அவளுள் படர்ந்திருந்த இருளை நீக்கி, ஒளியினால் பேருவகை அடைந்திருக்கலாம்.  மேலும் இயேசு இருள் படர்ந்திருந்த போதே உயிர்த்திருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அதாவது இருளுக்கும் ஒளிக்குமான போராட்டம், சாவுக்கும் உயிர்ப்புக்குமான போராட்டம், கெட்டதுக்கும் நல்லதுக்குமான போராட்டம், சாத்தானுக்கும் இயேசுவுக்கும் இடையிலானப் போராட்டத்தில் இயேசு என்னும் ஒளியானவர் சாவை பாவத்தை வென்று இருளின் ஆட்சியை பாவத்தின் கொடுக்கை பிடுங்கியுள்ளார் என்பது விளங்குகின்றது. 

மகதலாமரியா இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது அது அவர்களுக்குள் ஒரு தேடலையும், விசுவாச உறுதிப்பாட்டையும், இறையனுபவத்தையும் பெற உதவியாக அமைந்திருக்கிறது என்பதை (யோவா 3-8) பார்க்கிறோம். 

பேதுருவும், இயேசுவின் அன்பு சீடருமான யோவானும் ஒருமித்து இலக்கு நோக்கி ஓடியுள்ளனர். ஆனால் அன்பு சீடர் இயேசுவின் கல்லறையை முதலாவதாக அடைந்தார் என வாசிக்கிறோம். இடையில் பேதுருவுக்கு என்னவாயிற்று. ஒருவேளை பேதுரு ஓடும்போது இயேசுவை மும்முறை மறுதலித்தேனே இப்போது எந்த முகத்துடன் பார்ப்பது என்ற கலக்கமான இறுக்கம் அடைந்த மனநிலையுடன் ஓடியிருப்பார்.  ஆனால் பேதுருவுக்கு பாவத்தின் குற்ற உணர்வை விட  இயேசுவின் மீதிருந்த அன்பு அவரை கல்லறைக்கு உந்திக்தள்ளியது.  யோவான் வெறும் கல்லறைக்கு சாட்சியாக வெளியில் நிற்கிறார். ஆனால் பேதுருவோ இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக கல்லறையினுள் செல்கின்றார். 

இயேசுவின் மீதிருந்த  துணி அப்படியே இருக்க இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார். எனவே உயிர்த்த இயேசுவுக்கு மனித உடலா? கடவுளின் உடலா? என்கிற விவாதத்தை விட நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதை உறுதியாக்கிக் கொள்வோம்.  இயேசு ஏன் தன் தலைமீதிருந்த துண்டை ஓரிடத்தில் தனியாக சுருட்டி வைத்திருந்தார்?

நம் தமிழ்கலாச்சாரத்தில் கிராமப்புறங்களில் பார்த்தோமென்றால் ஏதாவது அவமானமோ நஷ்டமோ ஏற்பட்டால் தலைமீது துண்டுபோட்டுக் கொண்டு செல்வர். ஆனால் இயேசுவின் உயிர்ப்பு அவமானத்திற்குரியதோ நஷ்டத்திற்குரியதோ அல்ல, நாம் தலைநிமிர்ந்து நிற்க, இயேசு அறிவித்த இறைவார்த்தை உயிருள்ளதாய், ஆற்றல்மிக்கதாய் நம்மிடையே உள்ளது என்பதை அர்த்தமாக வாழ அடையாளமாய் உள்ளதாகக் கொள்ளலாம். 
பேதுரு தான் கண்ட உயிர்த்த இயேசுவின் காட்சிக்கு சாட்சியாய், பிற இனத்தவர் மத்தியில் சென்று அறிவிக்கிறார். கொர்னேலியு ஓர் அரசாங்க அதிகாரியாய், வேற்றினத்தவனாய் இருந்தும் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை நம்பியதால் இயேசு என்னும் ஒளி அவனுள்ளும், அவன் குடும்பத்தாரோடும் என்றும் இருக்கவும், இயேசுவின் சாட்சியாய் திகழவும், பாவத்தை வென்றவரை அறிக்கையிடவும் திருமுழுக்கு பெறுகின்றனர் என்று இன்றைய முதல் வாசகமும் விவரிக்கிறது. 

திருமுழுக்கு பெற்ற நாம் இறைவனோடு இணைக்கப்பட்டவர்கள், கிறிஸ்து என்னும் ஒளியின் பங்காளிகளாக மறைமுகமாக அவருடன் உள்ளுக்குள் ஒன்றாக இணைந்திருக்கிறோம். எனவே இறைவனின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்ற ஒளியாகிய இயேசுவுக்கு ஏற்ற சீடர்களாய் மாட்சி பெற்றவராய் நாம் தொடர்ந்து வாழ அவருக்குரியவற்றை நாம் நாட வேண்டும் என இரண்டாம் வாசகமும் வலியுறுத்துகின்றது. 

இயேசுவுக்கு உரியவற்றை நாடுதல்.  இவனை மன்னிக்கவே முடியாது இவன் முகத்தை நான் பார்க்க கூடாது என்றும், நான் செத்தாலும் அவனுடன் பேசமாட்டேன் என்கிற இருளான கோபங்களையும், வெறுப்பையும் விட்டுவிட்டு மன்னிக்கின்றபோது நாமும் கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் என்பதில் அர்த்தமிருக்கிறது.  அவனை/அவளைப் பற்றி தெரியதா? அவன்/அவள் தப்பனாவள், ஊர் ஏமாற்றி பிழைத்தவள் என தவறான சந்தேகங்களை விட்டுக் கொடுக்கும்போது நாம் இயேசுவில் உயிர்த்தவர்களாகிறோம். 

இயேசுவின் உயிர்ப்பு
மகதலா மரியாவின் சந்தேகத்தை போக்கியது
இறைஅனுபவத்தைத் தந்தது
பேதுருவின் கலக்கத்தை போக்கியது
மனதிடத்தை தந்தது
யோவானுக்கு அன்பை உறுதியாக்கியது

நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம்.

இருளைத் தவிர்ப்போம்
ஒளியில் வாழ்வோம்
ஏனெனில்
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் - ஆனால் தருமம் மறுபடியும் வெல்லும்
உண்மைக்கு இல்லை உறக்கம்.


- இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி