கிறிஸ்துமஸ் பாடல் - கருணைக் கடலே

கருணைக் கடலே! வா
துதித்த தயாபரா! வா
சுருதி மறையோர்க்கு
சுடரொளியே வா

|
அதோனாயீ ஆனந்தமே
ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளை சந்திக்க

||
எம்மான்வேல் ஏசு நாதர்
எங்கள் பாவதோஷம் தீர
ஏன் இன்னும் வரத்தாமதம்

|||
பேய் மயக்கு பாவ வழிப்
பீடையினால் வாடும் உந்தன்
பிள்ளைகளின் மேலிரங்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக