Tamil Hymns லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Hymns லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு ஏசுவாம்
நாம் நம்மையே பலியாய் கொடுப்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம்

இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2)
இதை உணர்வோம்; நம்மை பகிர்வோம் (2)
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே


பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
ஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இனையற்ற சாட்சிகளே(2)
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (2)
நாளைய உலகின் விடியலாகவே

உறவோடு வாழும் உள்ளங்கள்

உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்
உலகாளும் தேவன் நெறி வாழும் இதயத் தெய்வம் தரிசனம்
மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்
நிறைவோடு மலரும் உலகங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம்


(1)
அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் தெய்வம் தரிசனம்
மெய்யாகி பொய்மை பழிநீக்கும் நெறியில் தெய்வம் தரிசனம்
ஒளியாகி உலகில் இருள்போக்கும் பணியில் தெய்வம் தரிசனம்
கனலாகி நீதி நெருப்பாகும் செயலில் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் தெய்வம் தாசனம்
(2)
மதம் யாவும் மனித இனபேதம் ஒழித்தால் தெய்வம் தரிசனம்
சமதர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் தெய்வம் தரிசனம்
உரிமைகள் காக்க உயிர்த் தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம்
இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம்

நீ ஒளியாகும்


நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே
இறைவனும் நீயே


1.
நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம்விலகும் - உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையாய் சாய்வதில்லை
என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் - 2
2.
விடியலைத் தேடிடும் விழிகளிலே புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால்நினைந்தூட்டும் தாயும் என்
பால்வழி பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ
என் மீட்பரும் நேசரும் நீயாகும் -2

பொன்மாலை நேரம்

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவ ராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்ப மேகம் கரைந்தோடுதே
உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்.

1.
நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான்
காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே
என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே
ஆ..ஆ..ம்..ம்..

2.
ஒருகணம் என் அருகினில் அமரும்போது ஒருயுகம்
உனைதினம் நான் புகழ்கையில் எனக்குள்
தோன்றும் புது யுகம்
முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப்பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னை சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு வானம் எல்லை
அன்பின் நிழலில் நின்ற இதயம் உன் அன்பை பாடுதே
ஆ..ஆ..ம்..ம்..

அஞ்சலி


என் தெய்வமே உனக்காகும் அஞ்சலி – 2
தீபாஞ்சலி, மலரஞ்சலி தூபாஞ்சலி


தீமையினை எரிக்கின்ற நெருப்பே
இருளினை அழிக்கின்ற விளக்கே
பொய்மையை ஒழிக்கின்ற வாய்மையே
மெய்மையில் நடத்துவாய் தீபாஞ்சலி

நிதம் காலை மலர்கின்ற மலரே
நுகர்வோரை மகிழ்விக்கும் மணமே
நிலையற்ற வாழ்வுக்கு சாட்சியே
நிறைவினை அருள்வாயே மலரஞ்சலி

நறுமணம் தருகின்ற தூபமே
நாதனின் பூஜைக்கு உதவும்
நலம் பல வழங்கும் நல்தேவன்
பணிக்காக வருகின்றோம் தூபாஞ்சலி

ஒளியானவா உயிரானவா


ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒன்றானவா உருவானவா நின் மலர் பாதத்திலே
எனைமறந்து உனையடைந்து எழிலடைந்திட பாடுகின்றேன்


1.
உனக்காக என் ஜீவன் உயிர்வாழுது
உலகில் நான் உனைக்காண துடிக்கின்றது.
உன்பார்வை நிதம் காண மனம் ஏங்குது – 2
நாளும் பொழும் நீ எனில் வளர
நானிலமெங்கும் நின் மனம் கமழ
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனைமறந்து பாடுகின்றேன்

2.
உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது
உறவில் உன் உறவே சுகமானது
உன்நெஞ்சம் எனக்கென்றும் மடியானது - 2
நீயேதானே நினைவினில் மலர
நின் உயிர்தானே எனில் என்றும் வளர

உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனைமறந்து பாடுகின்றேன்

நன்றியால் துதி பாடு


நன்றியால் துதி பாடு - நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு


வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தயில் உண்மை உள்ளவர்

எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்துவிழும்

செங்கடல் நம்மை எதிர்த்து வந்தாலும்
சிலுவையின் நிழல் உண்டு
பாடிடுவோம் துதித்துடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்

என் சுவாசக்காற்றே


என் சுவாசக்காற்றே என்வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என் உயிரியின் உணவே
என்வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய்
என்வாழ்வும் என்வளமும் எல்லாமும் நீதானே
நிறைவாய் தலைவாய் அன்பினை பொழிவாய்


1.
என்சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2.
எழில்வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப்போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் துணைவேண்டுமே - 2
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்.

அர்ப்பண மலராய்


அர்ப்பண மலராய் வந்தேன் அர்ச்சனையாக்கினேன் என்னை -21
மனமில்லாத மலர் ஆனாலும் இதழ்வாடியே போனாலும் - 2
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் அந்த ஜோதியில் நிறைவு கொள்வேன் - 2
ஆ…ஆ…ஆ…ஆ…


1.
கோதுமை மணியாய் மடிந்து – எனை
வெண்ணிற அப்பமாய் தந்தேன் - 2
என்னுடல் உன்னுடல் ஆகிடவே
உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே – எனை
கனிவுடன் ஏற்பாயே ஆ..ஆ..ஆ..

2.
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன்
புவி அதிபதி உன் திட்டம் மறந்தேன்
மதியில்லாதவன் ஆனாலும் விழி
இழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய்
நான் கவியுடன் பாட்டிசைப்பேன். ஆ..ஆ..ஆ..

ஒரு வரம் நான் கேட்கிறேன்

ஒரு வரம் நான் கேட்கிறேன்
திருபதம் நான் பணிகின்றேன்
மனிதனாக முழு மனிதனாக
வாழும் வரம் நான் கேட்கிறேன்


(1)
நிறைவுண்டு என்னில் குறையுண்டு
நிலவின் ஒளியிலும் இருளுண்டு
புகழுண்டு என்றும் இகழ்வுண்டு
இமய உயர்விலும் தாழ்வுண்டு
மாற்ற இயல்வதை மாற்றவும்
அதற்குமேல் அதை ஏற்கவும்
உனது அருள் தந்து மனித நிலை நின்று
வாழ வரம் தருவாய்
(2)
உறவுண்டு அதில் உயர்வுண்டு
இணைந்த தோள்களில் உரமுண்டு
இல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டு
இணைந்த தோள்களில் உறமுண்டு
மகிழ்வாரோடு நான் மகிழ்வும்
வருந்துவோருடன் வருந்தவும்
உனது அருள் தந்து மனித நிலை நின்று
வாழ வரம் தருவாய்

நீயே என் கோயில்

நீயே என் கோயில் ஆண்டவனே
உன்னில் நிலையாக வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நானோ உன் சாயல்
உனைப்போல வாழ்வேன் ஆசையிலே
      நீயே என் கோயில் நீயே என் தெய்வம்
      நீயே என் கோயில் ஆண்டவனே-2
                1
வார்த்தையின் வடிவினில் உனைப்பார்க்கிறேன்
வாழ்க்கையின் வழியெங்கும் உனைப்பார்க்கிறேன்
செயல் உள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையே வழிபாடாய் உனைப் பார்க்கின்றேன்
புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன்
உருவ அருவங்களில் உனைப்பார்கிறேன்
     நீயே என் கோயில் நீயே என் தெய்வம் 
     நீயே என் கோயில் ஆண்டவனே-நீயே
               2
பேழையின் பிரசன்னத்தில் உனைப்பார்கின்றேன்
உயிருள்ள வசனத்தில் உனைப்பார்கிறேன்
மண்ணில் மனிதரில் உனைப்பார்க்கிறேன்
தாய்மையின் நேசத்திலே உனைப்பார்க்கிறேன்
நண்பரின் தியாகத்திலே உனைப்பார்கிறேன்
இயற்கையின் இயல்பினிலே உனைபார்க்கிறேன்
     நீயே என் கோயில் நீயே என் தெய்வம்
     நீயே என் கோயில் ஆண்டவனே – நீயே

திருப்பலிப் பாடல்கள்

வருகையில் 

இறைகுலமே இறைவனிலே
இணைந்திடும் நேரமிது
இறையருளே இதயத்திலே
எழுந்திடும் வேளையிது - 2
அகமகிழ்வுடன் வருவோம் அவர் இல்லம்
மீட்பளிக்கும் ஊற்றில் பருகிடுவோம்
கல்வாரி பலியிது கருணையின் வழியிது
தேவனின் பேரன்பே - நம் -2


1.
கருணை மழையென இதயம் இறங்கி
காக்கும் தேவன் இங்கே
பேரன்பிலே அன்பின் வழியில்தான்
அன்பாய் பிறந்தோம் அன்பாய் வளர்ந்தோம்
அவர் அன்பின் வழியில் அன்பின் ஒளியிலே
அன்பை கொண்டாடுவோம்
இருகரம் நீட்டி இறைவன் அழைக்கின்றார் - 2
அவர் திமுக தரிசனம் பிறந்திடும் இதயம்
திருப்பலியில் இணைவோம் - 2
2.
பாலை நிலத்திலே மன்னா பொழிந்து பாதுகாத்த
தேவன் இந்த பாவ நிலத்திலே பாதை வகுத்திட
பலியும் உணவும் ஆனார்
தேவனின் அன்பு தேடும் அன்பு மீட்கும் பேரன்பு
நம்மை தாங்கிடும் அன்பு
தேவனிலே உறவாடும் தாயன்பு
விண்ணகம் தேடும் தந்தையின் மந்தைகளே- 2
விடுதலை அடைந்திட விடியலில் நடந்திட
விரைவோம் மானிடரே - 2

தியானிக்கையில்

அருமை அருமை வான் படைகளின் இறைவன்
வாழும் இல்லம் அருமை


1.
அழகு முற்றங்கள் அங்கு ஆயிரம் உண்டு
அத்தனையும் காண அருமை
தங்குது அங்கே சின்ன சின்ன குருவிகள்
ஏங்குது மனமே அதைக் கண்டு
எந்த நேரமும் அந்த குருவிபோல்
உன் சன்னிதி வாழும் அருள் நிலையே வேண்டும்
எனது ஆன்மா கொண்ட தாகம் - 2 இது
2.
ஆவல் கொள்கிறேன் உன் அழுகு வாயியிலில்
காவல் காக்கவே தினமும்
அரண்மனை வாழ்க்கை ஆயிரம் நாளானாலும்
ஆலயத்தின் ஒரு நாள்போல் இல்லை

எந்த நேரமும் அந்த குருவிபோல்
உன் சன்னிதிவாழும் அருள் நிலையே வேண்டும்
எனது ஆன்மா கொண்ட தாகம் - 2 இது

தருகையில்

என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்
என்னை உனக்கு கொடுப்பதில் தானே ஆனந்தம் உன்னில் உனக்காய்
வாழ்வது எந்தன் ஆனந்தம் - 2


1.
கனிகளை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
கனிவாய் உள்ளம் வேண்டும் என்று நீர் கேட்டீர்
மலர்களை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
எனக்காய் மலர வேண்டும் என்று நீர் கேட்டீர்
உன்னில் என்னை தந்து விட்டேன்
உம் பணி செய்ய துணிந்து விட்டேன் - 2
என்னை ஏற்று மகிழ்வாயா
என்றும் உன்னில் வாழ்ந்திடுவேன் - 2
2.
கோதுமை மணிகள் கையில் ஏந்தி நான் வந்தேன்
எனக்காய் வாழ வேண்டும் என்று நீர் கேட்டீர்
தீபம் ஏந்தி உம் பீடம் நான் வந்தேன்
எனக்காய் ஒளிர வேண்டும் என்று நீர் கேட்டீர்
உன்னில் வாழ முடிவெடுத்தேன்
உம் பணி செய்ய துணிந்து விடேன் - 2
என்னை ஏற்று மகிழ்வாயா - 2
என்றும் உன்னில் வாழ்ந்திடுவேன் -2

பெறுகையில்

நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே - 2
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2


1.
தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3
இமைகளில் இருந்து நீ சுமைகள்
தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதிiயை தந்திடும்
எந்தன் தந்தையாகினாய்

உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2
2.
வானத்தின் மழைத்துளி மண்ணைத் தேடுதே - 3
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3
மேகமாய் திரண்டு நீ
அருளைப் பொழியும் அன்னலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா
உணவின் சுவையாகினாய்

உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2

பெறுகையில் 

வாழ்வு தரும் ஒளியும் நீயே - இயேசுவே
வாழ்வு தரும் வழியும் நீயே - 2
உம்மிடம் வருபவர்கள் பசியடையார்
நம்பிக்கை வைப்பவர்கள் தாகமடையார்


1.
உம் வார்த்தை கேட்போரெல்லாம்
எந்நாளும் நிலைத்திருப்பர்
எப்பொழுதும் கனி தருவர்
உம் நாமம் புகழ்ந்திடுவர்
உம் அன்பில் நிலைப்போரெல்லாம்
உம் நினைவாய் வாழ்ந்திடுவர்
உம் விழியில் நடந்திடுவர்
உம் பணியை தொடர்ந்திடுவர்
வார்த்தையான இயேசுவே ஆசீர்தாருமே - 2
உம் படைப்பாய் வாழவே எம்மைமாற்றுமே - 2
2.
உம்மை நம்பி வருவோரெல்லாம்
வெருமையாய் சென்றதில்லை
வழிதவறி நடந்ததில்லை
வான்வெளியை கண்டிடுவர்
உம் விருப்பம் செய்வோரெல்லாம்
உமக்காக வாழ்ந்திடுவர்
உம்மருளை தந்திடுவர்
நிறைவாழ்வை பெற்றிடுவர் வார்த்தையான …..

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக ௦ - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்

இயேசு பிறந்த நாளிது


இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது
காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

மணமில்லாத மலரை போல்
இசையில்லாத பறவைப் போல் (2)
அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2

துள்ளி மகிழும் குழந்தையே
உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
உந்தன் அன்பின் வரவிலே

விண்ணும் மண்ணும் இணைந்ததே – 2
தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2
சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2

குடிலினில் பிறந்த இறை மகனை


குடிலினில் பிறந்த இறைமகனை
குழந்தையாக வந்தவனை (2)
விண்ணில் வாழ்பவர் புகழ்ந்து பாடுவார்
மண்ணில் வாழ்பவர் மகிழ்ந்து காணுவார் (2)

மன்னாதி மன்னரெல்லாம் எண்ணங்கள் கொண்டிருந்தார்
தம் வீட்டில் பிறப்பாரென்று (2)
மாளிகை தேவையில்லை மண்வீடு போதுமென்று
குடிலினில் பிறந்து வந்தார் (2)

விண்மீன் வழிசெல்ல முன் வந்த ஞானியர்கள்
குடில் தன்னை அடைந்தார்களே (2)
பொன் தூபம் வெள்ளைப்போளம் பரிசாகக் கொண்டுவந்து
பணிந்தங்கு வணங்கி நின்றார் (2)

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்


எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்


ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே

தாய் தந்தை நீரே - தாழ்விலும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே

வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே

துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே
இன்னல் வேளையில் மாறாதவர் நீரே

தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜராஜனும் - என் சர்வமும் நீரே

ஆத்துமமே, என் முழு உள்ளமே


ஆத்துமமே, என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரை தொழுதேத்து - இந்நாள்வரை
அன்பு வைத்தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற்கரிய தன்மையுள்ள

2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலகமுன் தோன்றி ஒழியாத

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும், மேலான

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயைசெய் துயிர்தந்த

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்

6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

என் நெஞ்சம் இனிதாகப் பாடும்

கார்மேகம் காணும் மயிலாக நானும்

என் நாவில் ஆனந்த ராகம்

உணவாய் வந்த தெய்வம் - என்

உள்ளம் கவர்ந்த தெய்வம்

உள்ளம் கவர்ந்த தெய்வம் - என்

உணவாய் வந்த தெய்வம்


1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண

விளக்கோடு உனைத் தேடினேன்

விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள

நான் இங்கு உளம் வாடினேன்

வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ

உனக்காக நான் வாழ்கிறேன்

உன் அன்பில் ஒன்றாகிறேன்


2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும்

நான் என்னை அழகாக்கினேன்

மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள

உனக்காக யாழ் மீட்டினேன்

வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ

உம் மாண்பு நிறைவானது

உம் மாட்சி நிலையானது

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா

உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

1.

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

2.

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடைபுரிய வருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

3.

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலை கண்டிட வருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

உனக்கென நான் தரும் காணிக்கையை

 உனக்கென நான் தரும் காணிக்கையை

உவப்புடன் ஏற்பாய் என் இறைவா - 2

பலியென எனை நான் தருகின்றேன் - 2 - உன்

பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2


1. உழைப்பின் கனி இது உனக்காக

உன்னருள் கொடைகளின் பலனாக - 2

படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2 - உன்

படைப்பினில் சிறந்ததை தருகின்றேன் - 2


2. உடல் பொருள் ஆவி உனக்காக

உன் பணி புவிதனில் நிறைவாக - 2

மடிந்திடும் மனிதத்தின் விளக்காக - 2 - நான்

மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் - 2