உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

என் நெஞ்சம் இனிதாகப் பாடும்

கார்மேகம் காணும் மயிலாக நானும்

என் நாவில் ஆனந்த ராகம்

உணவாய் வந்த தெய்வம் - என்

உள்ளம் கவர்ந்த தெய்வம்

உள்ளம் கவர்ந்த தெய்வம் - என்

உணவாய் வந்த தெய்வம்


1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண

விளக்கோடு உனைத் தேடினேன்

விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள

நான் இங்கு உளம் வாடினேன்

வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ

உனக்காக நான் வாழ்கிறேன்

உன் அன்பில் ஒன்றாகிறேன்


2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும்

நான் என்னை அழகாக்கினேன்

மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள

உனக்காக யாழ் மீட்டினேன்

வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ

உம் மாண்பு நிறைவானது

உம் மாட்சி நிலையானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக