உம் சிறகுகள் நிழலில்
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா 
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண் 
தணலிலும் மனம் குளிரும் - உந்தன் 
கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை 
காத்திடு என் இறைவா
1.
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன் 
மன்னிப்பில் பனிபோல் கரையும் 
கருணையின் மழையில் நனைந்தால் உன் 
ஆலயம் புனிதம் அருளும்
2.
வலையினில் விழுகின்ற பறவை - அன்று 
இழந்தது அழகிய சிறகை 
வானதன் அருள்மழை பொழிந்தே நீ 
வளர்த்திடு அன்பதன் உறவை