சந்தோசம் பொங்குதே

சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே
சந்தோசம் என்னில் பொங்குதே
அல்லேலுயா இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் என்னில் பொங்குதே
1.
வழி தப்பி நான் திரிந்தேன் - பாவ
வழி அதை சுமந்தழைந்தேன்
அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே.

2.
சாத்தான் சோதித்திட - தேவ
உத்தர வுடன் வருவார்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சோந்த மானாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக