உம் சிறகுகள் நிழலில்

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும் - உந்தன்
கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா
1.
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்

2.
வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக