இயற்கையில் உறைந்திடும்

இயற்கையில் உறைந்திடும்
இணையற்ற இறைவா - என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு
நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா 2
1.
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு - இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ 2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா 2
2.
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ 2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக