வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது Lyrics

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது 
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன் விண்ணக தேவனை 
வழிபட வாருங்களே
இறை அருட் தரும் பலியிது ஆதவன் ஒளியிது
அர்ப்பணமாகிட வாருங்களே 
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

வறண்ட மணலாய் வாடி தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது (2)
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

எங்கும் நிறைந்த தந்தை வழிசெல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது (2)
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக