எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே Lyrics

எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே
உன் நினைவில் நான் என்றும் உயிர் வாழ்வேனே
உன் பாதச் சுவடுகளில் என் பயணம் தொடர
நீயாக எனை மாற்றும் என் நேசமே
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அன்பே தூய்மையானது என்வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது - 2
வாழ்வின் எதிர்ப்புகளில் கலங்கிடமாட்டேன் -2
நம்பிக்கையின் தீபமாய், நீ இருக்கின்றாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அருளே மேலானது என் வாழ்வில்
உன் உறவே மாறாதது
உனக்காக நான் என்றும் காத்திருப்பேன்
நிழலாக எனை என்றும் நீ தொடர்வாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து 
அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

.உன் பாவங்கள் மன்னித்திடுவார் உன் நோய்களைக் குணமாக்குவார் 2
உன் உயிரை அழிவிலின்று மீட்டு காத்திடுவார் 2
கருணையம் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபெற செய்கின்றார் 2
உன் இளமை கழுகின் இளமை போல் நாளும் புதுப்பிக்கின்றார் 2
நீதியான செயல்களையே எந்நாளும் செய்கின்றார். 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

தம்வழியை வெளிப்படுத்தி மாட்சிமையைக் காணசெய்கிறார் 2
மண்ணினின்று விண்ணளவுயர்ந்த பேரன்பில் ஆட்க்கொள்வார் 2
வயல்வெளி மலரெனவே எந்நாளும் மலரச்செய்வார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது Lyrics

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது 
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன் விண்ணக தேவனை 
வழிபட வாருங்களே
இறை அருட் தரும் பலியிது ஆதவன் ஒளியிது
அர்ப்பணமாகிட வாருங்களே 
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

வறண்ட மணலாய் வாடி தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது (2)
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

எங்கும் நிறைந்த தந்தை வழிசெல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது (2)
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

அன்பில் கனிந்த வந்த அமுதே Lyrics

அன்பில் கனிந்த வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கி தவித்தேன்
எனில் வாழும் உணவாக அழைத்தேன்

விருந்தாக வரும் தேவன்
உனை காண்கையில்
வரும் தாகம் பசியாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா
இசையோடு தமிழ் சேரும் சுவை காணவே
உனைத்தேடி உனை நாடி நிறைவாகுவேன்
உன்னில் உருவாகுவேன்

என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என் மீது நீ கொண்ட அன்பானது - அது
தினந்தோறும் பலியாக அரங்கேருது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே
மண்ணில் உருவாகுமே

மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே lyrics

மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே
மாறாதது மாறாதது மாறாத உன் பாசமே
மறையாதது மறையாதது மறையாத உன் நேசமே
நிலையானது நிஜமானது நெஞ்சத்தில் நீங்காதது
என் நினைவெல்லாம் நிழலாடுது

1. என் அன்னையின் கருவில்
என்னை நீ என்னை நீ தெரிந்தெடுத்தாய்
உன் கண்ணின் கருவிழிப் போல்
கருத்தாய் கருத்தாய் காத்து வந்தாய்
எனை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டாய்
உன் தோளில் சுமந்து நடந்து வந்தாய்
வாழ்வு முழுவதுமே இனிக்கச் செய்தாய்
வானின் மழையெனவே நின் அருளைப் பொழிந்தாய்
உன் பாசம் மாறாதது உன் நேசம் அழியாதது

2. என் உறவென்னை வெறுக்க
உறவாய் உறவாய் நீ வந்தாய்
நான் உன்னோடு இருப்பேன்
என்று நீ மட்டுமே உறுதி தந்தாய்
என் பயணம் முழுதும் தொடர்ந்து வந்தாய்
என் களைப்பு போக்க உன் மடியைத் தந்தாய்
துன்பமில்லா வாழ்வைத் தந்தாய்
இன்பம் காணும் உலகம் தந்தாய்