துன்பம்


‘துன்பம்’ என்ற பெயரைக் கேட்டாலே ‘சும்மா அதிருதுல்ல.’ இதற்கு காரணம் துன்பம் இல்லாமல் இன்பமில்லை (ழே pயin ழெ பயin) என்பதை ஏற்றுக் கொள்ளாத மனமே காரணம். ஒருவர், “வாழ்வில் இன்பம்” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். அதன் விலை ரூபாய் 500. அந்த நூல் சரியாக விற்பனை ஆகவில்லை. அவரது வாழ்வில் இன்பம் இல்லாமல் துன்பத்தை ஏற்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார். இவ்வாறு இல்லாமல் துன்பத்தை சரியாக புரிந்துக் கொண்டோம் என்றால் அவற்றிலிருந்து ஒரு திடமான, தெளிவான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.

வாழ்வியலில் துன்பம்
“நாங்கள் எல்லாம் தூங்கும் போது தலையாணிக்கு பதிலாக ‘துன்பத்தை’ வைத்து தூங்குறவுங்க என்று கூறுபவர் ஒருவரும் கிடையாது. தன் வாழ்நாள் முழுவதும் ‘இன்பமே’ என்று கூறுபவரும் கிடையாது. “துன்பம் நிரந்தரம் அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரைப் போல ஓடிவிடும்”. சாலை என்று ஒன்று இருந்தால் அதில் மேடு, பள்ளம் இருக்கத் தான் செய்யும். அது போல ‘வாழ்க்கை’ என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும். ஒருவனுக்கு துன்பம் வந்தால் அவன் வாழ்வில் முன்னேறிக் கொண்டு உள்ளான் என்று அர்த்தம்.

என்னை பொறுத்தவரை, ஒருவன் துன்பத்தின் வழியாகத்தான் வாழ்வில் பல வி~யம் கற்றுக் கொள்ள முடியும். இன்பம் ‘ஒருமுறை’ வந்தால் துன்பம் ‘பத்துமுறை’ வர வேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டுவேன். ஏனென்றால் அப்போதுதான் நான் வாழ்விலும் சரி, இறைவனிடமும் சரி நெருங்கி இருப்பதாக உணர்கிறேன். 

வாழ்க்கையில் துன்பமே வேண்டாம், இன்பம் மட்டுமே வேண்டும் என்று நினைப்பவர்கள். “வெந்ததைத் தின்று விட்டு – விதி வந்தால் சாவோம்” என்ற அடிப்படையில் வாழ்பவராகி விடுவோம். ஒருவன் இமயமலை ஏற வேண்டும் என்றால் வெயில், குளிர், காயம், மழை, பசி, தாகம், சோர்வு, என்று துன்பம் வந்தாலும் இவற்றையெல்லாம் கடந்தால்தான் ‘இன்பமான’ இமயமலையின் உச்சியை அடையமுடியும். இறைவனால் உண்டாக்கப்பட்ட இந்த மலையில் ஏற இவ்வளவு துன்பம் தேவைப்படுகிறது என்றால் நம் இயேசு கிறிஸ்துவையே அடைய ‘எவ்வளவு துன்பம்’ சந்திக்க வேண்டிவரும் என்பதை சற்று சிந்திப்போம்.

துன்பத்தில் ‘கின்னஸ் சாதனை’ படைத்தவர் இயேசு கிறிஸ்துதான் என்று கூறலாம். இவரை விட எவரும் அதிகமான சோதனையும், துன்பத்தையும் அடைந்திருக்க மாட்டார்கள். இவருக்கு அடுத்து ‘அப்போஸ்தலர்கள்’ துன்பத்தில் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் என்றுக் கூறலாம். அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு வரும் ‘துன்பம்’ எல்லாம் தென்றல் வந்து உரசுவது போலத்தான். ஆகவே வாழ்வு என்னும் பயணத்தில் துன்பத்தை கருவியாக கொண்டு வெற்றியடைவோம். 

“பத்தோடு பதினொன்று, அத்தோடு நானொன்று” என்று வாழாமல் இந்த இறையரசு பணியில் ஈடுபட்ட நாம் அவரது சொற்களை எடுத்துக் கொண்டு உலகமெங்கும் அறிவிக்க செல்வோம். அவ்வாறு வாழ்ந்திட துன்பத்தை துரும்பாக்கி, இன்பத்தை இறும்பாக்கிக் கொள்ளவேண்டிய மனநிலையை ஆண்டவரிடம் கேட்போம். 

சகோ. செ. அருண்

என் வழி சிலுவை வழி

என்னை பின்பற்ற விரும்புகிறவர் எவரும்
தன்னலம் துறந்து தம் சிலுவையைத் சுமந்து
கொண்டு என்னை பின்பற்றட்டும் (மத் 16:24)
அடுத்த வேளை உண்ண உணவு இல்லை என்ற போதும் தன்னிடம் இருந்த நெல் விதையை எடுத்துக் கொண்டு விதைக்க செல்லுகின்ற விவசாயிக்கு அன்றாட உணவு ஓர் சிலுவை. மீன் பிடித்து எப்படியும் மீள முடியும் என்று இரவு பகல் பாராமல் கடலை நோக்கி பயணம் செய்யும் மீனவர்களுக்கு தன் வாழ்வு ஒரு சிலுவை. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இருந்தும் இரவில் உறக்கம் வராமல் படுத்து புரளும் பணக்காரர்களுக்கு இரவு ஓர் சிலுவை. ஆயிரம், இலட்சம் என்று பணம் சேர்த்தும் தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று தவிக்கும் பெற்றோருக்கு எதிர்காலம் ஓர் சிலுவை. திருமண தம்பதியர்களுக்கு வயதான பெற்றோர்கள் சிலுவை. அறிவியல் மேதைகளுக்கு இன்று ஆன்மீகவாதிகள் சிலுவை, உனக்கு நான் சிலுவை, எனக்கு நீ சிலுவை….. என்று இன்று நாம் சிலுவைக்கு அர்த்தம் கொடுத்து வருகின்றோம். இதுவா இயேசு நம்மை சுமந்து கொண்டு பின் தொடரச் சொன்ன சிலுவை? இல்லை… இல்லவே இல்லை…

உண்மையை உறக்கத்தில் வைத்துவிட்டு, அநீதியால் அக்கிரம ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்களிடம், உண்மையை எடுத்துரைப்பதும், அதற்காக சாட்சிய வாழ்வு வாழ்வதுமே உண்மையான சிலுவை ஆகும். இப்படி வாழ்கின்ற போது நமக்கு தோல்வி என்பது நிரந்தரம் ஆகலாம், இன்பம் என்பது இல்லாமல் போகலாம், துன்பம் மட்டுமே துணையாகலாம், சொத்துக்கள் பறிபோகலாம், சொந்த பந்தங்கள் விலகி போகலாம், இழப்பு ஏற்படலாம் ஏன்? இறப்பும் ஏற்படலாம். இத்தகைய சிலுவைகளைதான் ஏற்றுக் கொண்டு இயேசுவை பின்தொடர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். 

இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் இயேசுவும் வாழ்ந்து காட்டினார். தன் வழி பின்பற்ற விரும்புகிறவர்களையும் அதனால் கிடைக்கும் பாடுகளின் பயனையும் மூன்று முறை மலைமேல் தோன்றி இயேசு அறிவித்தார். தன்னை பின்பற்ற விரும்புகிறவர்கள் கடை பிடிக்க வேண்டிய தெய்வீக போதனைகளை மலைப் பொழிவாக கலிலேயா மலைமீது அறிவித்தார். நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றேர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே. (மத் 5:10.). தன்னுடைய இறுதி காலத்தில் கல்வாரியில் தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களின் துன்ப துயரத்தையும், வேதனை சோதனைகளையும் விளக்கி காட்டினார். தன்னை பின்பற்ற விரும்புபவனிடம் “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக் கூட இடமில்லை.” (மத் 8:20). இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தாபோர் மலையில் தோன்றி நீதிக்காக, உண்மைக்காக துணிவோடு வாழ்கின்றவர்கள் உயிர்த்த யேசுவில் மகிமை அடைவார்கள் என்பதை வெளிப்படுத்தினார். “ஆண்டவரே நாம் இங்கே இருப்பது எத்துனை நல்லது” (லூக் 9:33). இத்தகைய அறிவிப்புகளை, அறிவித்ததோடு நின்றுவிடாமல் அதனை செயல் வடிவமாக மாற்றினார் இயேசு. இயேசுவின் காலத்தில் யூத மக்கள் உரோமை நாட்டினராலும், சதுசேயர்களாலும், பரிசேயர்களாலும் அடிமைப்பட்டு கிடந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இயேசு பரிசேயர்களுக்கு பாடம் புகட்டினார். தன்னை தூய்மையானவர்கள், சட்டங்களையும், மரபுகளையும் நுணுக்கமாய் கடைபிடிக்கும் கடவுள் பக்தர்கள் என்று சட்டத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தி, கடவுளின் கட்டளைகளை நாங்கள் மீறலாம் என்று நியாயப்படுத்தி வாழ்ந்தவர்களை இயேசு "வெளிவேடகாரர்களே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று கூறினார். மறுபுறம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் சட்டங்களை வளைத்து, தங்களை உயர் வகுப்பினராக காட்டி, உரோமையோடு நல்லுறவு வளர்த்து, மக்களை ஏமாற்றி வாழ்ந்த சதுசேயர்களை “உங்களுக்கு ஐயோ கேடு, ஏன் என்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகின்றீர்கள், நீங்களோ அந்த சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள் (லூக் 11:46) என்று வசைப்பாடினார். இவைகள் எல்லாம் ஒரு விதத்தில் இயேசு ஏழைகளின் நீதிக்காக போராடிய போராட்டங்களே. இத்தகைய போராட்டத்திற்கு கிடைத்த பரிசுதான் முத்தாய்ப்பான மூன்று ஆணிகள், இந்த மூன்று ஆணிகளை தொடராக மாற்ற இயேசு நம்மை நோக்கி “தன்னலம் துறந்து பாடுகளின் சிலுவைகளை சுமந்து” வருவதற்கு ஆசைப்படுகின்றார். நாமும் பலவித சுமைகளை சுமக்கின்றோம். ஆனால் அவைகள் எல்லாம் இயேசு விரும்பும் சிலுவைகளா? என்பதை தெரியாமல் சுமக்கின்றோம். 

கற்பனைச் சிலுவை
இவர்கள் நிஜத்தை விட நிழலை நேசிப்பவர்கள். எதார்த்தத்தை விரும்பாமல், கற்பனையில் கோட்டை கட்டி கஸ்டப்படுபவர்கள். துன்பப்படும் மனிதனைப் பார்த்து துயரம் கொள்வார்கள், அந்த துயரத்தை மனதளவில் நிறுத்தி “அந்தோ, அய்யோ பாவம்” என்று கற்பனையிலே சிலுவையை சுமந்து கொள்வார்கள். நல்ல சமாரியனின், லேவியராக, குருவாக அடிப்பட்டவரை, அல்லல் படுவோரை, அநீதியைப் பார்த்து கற்பனையிலே சிலுவை சுமந்து கொண்டு சென்றுவிடுவார்கள். 

காற்றுச் சிலுவை
“கடவுளே உனக்கு கண் இல்லையா, காது இல்லையா?” என்று தானே உருவாக்கி கொள்ளும் சிலுவைக்கு கடவுளை பழித்துரைப்பார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் வானுயர கட்டிடம் கட்டுவார்கள், பூமிக்கு அடியில் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள், தன் சொந்தம் வளர வேண்டும் என்று தன் உறவிலே பிள்ளைக்கு திருமணம் செய்வார்கள். இப்படி போன்ற விதைகளை விதைத்துவிட்டு சுனாமி, பூகம்பம் உடல்வளர்ச்சி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அறுவடை செய்வார்கள். இத்தகைய சிலுவைகளைத் தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வார்கள். 

மரச்சிலுவை
“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று மற்றவர்களின் துன்பத்தை கண்டு கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த துன்பத்தை துடைக்க தானே ஒரு கருவியாக மாறுவார்கள். இதுதான் யேசு விரும்பிய மரச்சிலுவை. ஏழை மக்களின் நலனுக்காக அரசிடமும், அவர்களை அடிமைபடுத்தி வாழும் பணக்கார முதலைகளிடமும் போராடுபவர்கள். கொத்தடிமை, இலஞ்சம், ஊழல் வரதட்சணை, குழந்தை தொழிலாளர்கள்…… போன்றவைகளை அன்றாட வாழ்வில் பார்த்து “ஐயோ பாவம்” என்று நினைத்து விடாமல் அதை எதிர்த்து போர்க்கொடி தூக்கவும் நாம் முயலுகின்ற போது ஏசுவைப் போல் நாமும் மனித சிலுவையாக, நல்ல சமாரியனாக மாற்றம் அடைய முடியும். இதைத்தான் இயேசு “நீதியை நிலை நாட்ட வேட்கைக் கொண்டோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்” (மத் 5:6) என்றார். 

எனவே சாவுக்கு சாவுமணி அடித்துவிட்டு, துன்ப துயரங்களையும் இயேசுவின் போதனைகளையும் ஏற்று, துன்பம் என்றதும் துவண்டு போகின்ற நிலையிலிருந்து விலகி சிலுவை என்றதும் சினுங்குகிற மனதினை மாற்றி பிறருக்காய் படும் வேதனைகளை, துன்பங்களை நம் தோளில் வைத்துக் கொண்டு, கல்வாரி நோக்கி வீர நடைபோடுவோம். எத்தனையோ மரத்தை கொண்டு சிலுவைகளை செய்த நாம் எத்தனையோ மனிதர்கள் இருந்தும் நம்மால் ஒரு இயேசுவை உருவாக்க முடியவில்லையே? உருவாக்குவோம், நாளைய வரலாறு நமது பெயரை வாழ்த்த வைப்போம்….
சிலுவை வழி…… ஓர் சுகமான வழி…..

சகோ. ஆரோக்கிய தாஸ்

NO CROSS NO CROWN


Suffering is an inevitable reality of human life, so too with the salvific plan of God. Salvation through suffering is the plan of God. That is what we find in the suffering servant of Isaiah. God himself willed redemption of disobeyed humanity through suffering. Therefore, suffering is not something to run away from, but a door to the road of redemption. Thus, it is in endurance we are elevated.

A Tamil proverb goes like this, “உளி விழுவதால் வலி என அழும் கற்கள் சிற்பமாவதில்லை”. Yes, a beautiful statue is sign and symbol of extreme form of endurance. It has undergone the painful process of editing and redacting. Its submission to its master is not a passive act, but an active, and attentive commission totally without any desire of its own in the hands of the sculpture. In fact, a stone with passivity and rigidity gets broken and is thrown away useless. 

God is an editor. But are we ready to be edited by Him?  It is true that it is a painful processes, but with bright future. Can we say with Paul, “I consider the suffering of this world as nothing when I compare the glory to come.”  (Rom 8: 18)

Therefore, let us pray to our Lord, who has conquered the world through suffering, that we may actively submit ourselves in the hands of God, and may become beautiful living statues of message of Gospel. 

Bro. A. Susai Devanesan

பாவத்தால் கிடைத்த வாழ்வு


ஆதிமனிதன் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் கடவுளை நினைத்திருப்போமா என்பது கேள்விக்குறிதான். இறைமகன் மனிதனாகப் பிறந்திருப்பாரா? இல்லை கிறிஸ்தவம்தான் இருந்திருக்குமா? ஆக கிறிஸ்தவத்தின் அடித்தளத்தோடு இரண்டற கலந்துவிட்டது பாவம். பழைய ஏற்பாட்டில் ஆதாமில் ஆரம்பமான பாவ பயணம்,. புதிய ஏற்பாட்டில் இறைமகனின் இரத்தத்தைக் குடித்து நிறைவு பெறுகின்றது. 

தொடக்கத்தில் ஆதாமையும், ஏவாளையும் படைத்து, படைப்பு பொருட்கள் அனைத்தையும் அவர்களுக்கு அளித்து எக்குறையும் இன்றி வாழவைத்தார் இறைவன். மனிதனோ கீழ்படியாமை என்னும் சாவியால் பாவ வாழ்வின் கதவுகளை திறந்து வைத்தான். பாவத்தின் பலனாக சாவுக்குள் நுழைகிறோமே என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல், அன்று ஆதிப் பொற்றோர் செய்த பாவம் மனித இனத்தின் சாபமாக மாறி அவனை இன்றளவும் தொடந்து வருகின்றது. கனியை உண்டு ஆதாமால் தொடங்கபட்ட பாவ வாழ்விற்கு, தன் தம்பியை கொன்று காயின் உரமூட்டினான். இவ்வாறு படிப்படியாக பாவம் மனிதனை ஆட்கொள்ள கடவுள் அதற்கு தண்டணையாக நீரால் (நோவா காலத்தில்) அழிவைக் கொடுத்தார். பின் மக்களுக்காக மனமிறங்கிய இறைவன், அன்பால் அரவணைத்து சென்றார். தன்னுடைய அன்பின் மக்களாகிய இஸ்ராயேலரை அடிமைதனத்திலிருந்து மீட்க மோயிசனை தேர்ந்து கொண்டு வாக்களிக்கப்பட்ட நாட்டை அவர்களின் உரிமைச் சொத்தாக்கினார். அதை மறந்த மக்கள் பொய் தெய்வங்களையும் பாவ வாழ்வையும் நாடிச் சென்ற பொழுதெல்லாம் வெவ்வேறு இறைவாக்கினர்களை அனுப்பி அவர்களை நெறிபடுத்தியதோடு, மனித சமுதாயத்தின் மீட்புதிட்டத்தையும் முன்னுரைக்கின்றார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில் பாவிகளை நெறிபடுத்திய இறைவன், இதோ தன்னுடைய ஒரே மகனை உலகிற்க்கு அனுப்பினார். இந்த இறைமகனின் வருகையை குறித்து நற்செய்தியாளர் புனித மத்தேயு “ மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார்” (மத் 18: 11) என வெள்ளிடை மலைப்போல் நமக்கு தெளிவு படுத்துகின்றார். இறைமகன் இயேசுவின் வருகையைப் பற்றி “மருத்துவன் நோயற்றவனுக்கு அன்று, நோயுற்றவனுக்கே. நீதிமான்களை அல்ல, பாவிகளையே மீட்க வந்தேன்” (மத் 9:12-13) என பாவிகளை குறித்த தன் மீட்புதிட்டத்தையும் இவ்வாறாக உரைக்கின்றார். மீட்பு திட்டத்தின் பரிணாமத்தை “நேர்மையாளரை குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய பாவிகளை குறித்து விண்ணுலகில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்” (லூக் 15:7) என்றுரைத்த இறைமகன் இயேசு கிறிஸ்து பாவிகளோடும், நோயுற்றவர்களோடும் தன் பணிகாலத்தை கழித்ததோடு மட்டும் இல்லாமல், அவர்களுக்காக உயிரையே கொடுத்துள்ளார். உலகின் பாவங்களை தன்னுடைய இரத்தக் கரையால் துடைக்கின்றார். இந்த இறைமகனின் ஈடு இணையற்ற இந்த அன்பை தூய பவுல் கூறும் போது “ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டணை தீர்ப்பாய் அமைந்தது போல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதனின் கீழ்படியாமையால் பலர் பாவியானது போல் ஒருவரின் கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள். (உரோ 5:18-19) இவ்வாறு இறைமகனின் சாவின் மூலம் மனித சமுதாயம் எவ்வாறு மீட்பு அடைந்தது என்று தௌளத்தெளிவாக குறிப்பிடுகின்றார். மேலும் சாவின் வழியாய் இறையருளை நாம் எவ்வாறு பெற்றோம் என்பதை மீண்டும் புனித பவுல் தன்னுடைய கடிதத்திலே “சாவின் வழியால் பாவம் ஆட்சி செய்தது போல் ஆண்டவர் இயேசுவின் வழியாய் இருள் ஆட்சி செய்கின்றது. அந்த அருள் கடவுளின் நிலைவாழ்வை பெற வழி வகுக்கின்றது. (உரோ 5:21) இவ்வாறு மனிதனுடைய பாவ வாழ்வு இறைமகனின் இணையற்ற இரத்தத்தால் நிறைவு பெற்று நமக்கு புதியதொரு வாழ்வை கொடுக்கலாயிற்று.

எனவே இறைசமூகமே! இறைவனின் அருள் கிடைக்கின்றது என்பதற்காக பழைய பாவ வாழ்வில் நிலைத்திருக்கலாமா? என்றால் அது இயேசுவின் தியாக பலிக்கு அர்த்தத்தை கொடுக்காது. இதை தூய சின்னப்பர் இவ்வாறு சுட்டிகாட்டுவார், “ஒருபோதும் பாவ வாழ்வில் நிலைத்திருக்கக் கூடாது. திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாம் அவரோடு சாவிலும் இணைந்திருக்கிறோம். அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில் அவர் உயிர்த்தெழுந்தது போல் நாமும் அவரோடு உயிர் பெறுவோம். நம்முடைய பாவமாகிய பழைய மனித இயல்பை அவரோடு சிலுவையில் அறைந்துவிட்டு புதுவாழ்வில் உயிர்தெழுவோம்”. (உரோ 6:3) எனவே சகோதரமே சீராக் ஆகமம் (21:1-2) கூறுவது போல் “பாவம் செய்து விட்டாயா இனிமேல் செய்யாதே. உன்னுடைய பழைய பாவங்களுக்காய் மன்னிப்புக்கேள். பாம்பை கண்டு ஒடுவதை போல் பாவத்தை விட்டு ஓடி விடு.” (சீராக் 21:1-2) நம்முடைய பாவ வாழ்வை விட்டு விலக உறுதி கொண்டவர்களாய் “நொறுங்கிய உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோம், அவர் என்றுமே நம்மை கைவிடுவதில்லை.” 

சகோ. ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்

இறப்பு


பிறப்பு என்பது இறப்பின் ஆரம்பம்

இறப்பு இந்த வார்த்தை நம் காதுகளுக்கு எட்டியவுடனே ஏற்படும் பய உணர்வு இருக்கிறதல்லவா அது இரத்ததினூடே நாடி நரம்புகளில் பாய்ந்து, மூளையைத் தாக்கும் ஒரு கொடிய வி~மாக மாறுகிறது. காரணம் இறப்பு வந்து விட்டது என்ற எண்ணத்தினாலேயே தங்களுடைய வாழ்நாளை, பாதியிலேயே முடித்துக் கொள்ளும் மக்கள் கூட்டம் ஏராளம்! ஏராளம்! மாறாக இறப்பு என்பது பிறப்பைப் போலவே நம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்று என்பதை மானுடத்திற்கு அறியச் செய்வோம். 

இறப்பு ஒரு கொடை

நம்மில் பலருக்கு இறப்பு என்பது ஒரு துக்கச் சடங்காகவே இன்றளவும் இருந்து வருகிறது காரணம், நாம் அதை ஒரு பேரிழப்பாக கருதுவதேயாகும். மாறாக இறப்பு என்பதை ஒரு கொடையாக கருதும் பொழுது நாம் நம் இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற உதவும் ஒரு கருவியாக இது அமைகிறது. எவ்வாறெனில் இறைமகன் இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பாவிகளாகிய நம்மை மீட்க இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற காரணமாயிருந்தது அவருடைய இறப்பு என்றால் அது மிகையல்ல. தன்னுடைய வாழ்நாளில் பாவம் அதிகமாக செய்பவர்களே இறப்பை பற்றிய அச்சம் கொள்ள வேண்டும். ஏனெனில் இறப்பிற்குப் பிறகு தாம் செல்லப்போகும் மறுஉலக வாழ்வைப் பற்றிய அச்சம் நம்மில் பலருக்கு எழுகின்றது. இத்தகைய உணர்வோடு வாழும் நாம் இறப்பை ஒரு கொடையாக கருதுகின்ற போது பாவம், நம்மை தூய்மைப்படுத்தி மறு உலக வாழ்வைப் பற்றிய அச்சத்தைப் போக்கவல்லது என்பதில் ஐயமில்லை. 

புனிதர்கள் வாழ்வில் இறப்பு

புனிதர்களின் வரலாற்றை நாம் சற்று அலசி ஆராயும் பொழுது இத்தகைய இறப்பை தாங்கள் இறைவனிடம் பெற்றுக் கொண்ட ஒரு வரமாகக் கருதியதை நம்மால் உணரமுடிகிறது. தங்களுடைய உயிரைத் துச்சமாகக் கருதி இறைவனுக்குத் தியாக காணிக்கையாக தங்களுடைய இறப்பை அர்ப்பணித்தனர் என்று கருதுவதே சாலச் சிறந்தது. 

உதாரணமாக பல புனிதர்கள் மறைசாட்சியாக உயிர் நீத்தார்கள் என்பதை அவர்களின் வரலாறு நமக்கு அறிவுறுத்துகிறது. பல இன்னல்களுக்கு மத்தியிலும் இறப்பானது இறைவன் தமக்கு அளித்த வரம் எனக் கருதிய “புனித செபஸ்தியார், அருளானந்தர், இலாரன்ஸ்” போன்றோரும், புனிதைகளாகிய மரிய கொரற்றி, குழந்தை தெரசம்மாள்” போன்றோரும் நம்மிடையே புனிதர்களாக வாழக் காரணம் தங்களுடைய உயிரையே இறைவனுக்காக அர்பணித்ததே என்றால் அது மிகையல்ல. 

திருவிலியத்தில் இறப்பு பற்றி நிகழ்வுகள்

இறப்பின் மேன்மையை, அதன் அவசியத்தை நாம் திருவிவிலியத்திலே பல இடங்களிலே காணமுடிகிறது. குறிப்பாக நூற்று முப்பத்தைந்து இடங்களிலே இறப்பு பற்றிய நிகழ்வுகளை நாம் விவிலியத்திலே வாசித்து அறிகிறோம். ஆகவே இறைத்திட்டத்தின் அச்சாணியாக இந்த இறப்பு விளங்குகிறது என்றால் அதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. 
  • நாம் வாழ்வதும் நாவாலே சாவதும் நாவாலே என்று நீதிமொழிகள் 18:21ல் காண்கிறோம்.
  • மனிதர் முதல் விலங்கு வரை சாவு நிச்சயம் என்பது பற்றி சீராக் 40:8ல் வாசித்து அறிகின்றோம். 
  • வாழ்வதை விட சாவதே நல்லது என்பது பற்றி யோனா 4:3 ல் காண்கிறோம்
  • பாவத்தின் விளைவாகவே சாவு இவ்வுலகில் நுழைந்தது என்பது பற்றி உரோமையர் 5:12ல் காண்கின்றோம் 
  • இறப்பினால் வரும் நன்மைகள் பற்றி உரோமையர் 8:11ல் வாசிக்கிறோம் 
  • வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார் என எபிரேயர் 2:13ல், வாசிக்கிறோம்.
  • மனிதர் ஒரு முறை மட்டுமே இறப்புக்கு உட்படுகின்றனர் பினனர் இறுதி தீர்ப்பு வருகிறது என்று 9:27ல் காண்கிறோம். 
  • வாழ்விலும் சாவிலும் கிறிஸ்துவை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பிலிப்பியர் 1:20ல் காண்கிறோம்
  • இறப்பிற்காக நாம் ஏங்க வேண்டும் என்பது பற்றி 2 கொரிந்தியர் 4:11லும் இறப்பு என்பது நாம் விண்ணக வீட்டை அடைய உதவும் ஒரு அடையாளம் என்றும் 5:4லிலும் வாசிக்கிறோம்.

இவ்வாறாக ஏறக்குறைய நூற்று முப்பத்தைந்து இடங்களில் இறப்பு பற்றிய நிகழ்வுளையும் அதன் அவசியத்தையும் விவிலியத்தின வாயிலாக நாம் உணர முடிகிறது. எனவே தினமும் திருவிவிலியத்தை வாசித்தவர்களாய் விண்ணக வாழ்வின் பேரின்பத்தை அடைய நாம் முற்பட வேண்டும். 

மரணம் என்பது அழகானது, மரணம் என்றால் முடிவு என்கிறாய், அது தொடக்கமாக இருப்பதை நீ கவனித்ததில்லையா? ஒரு பூவின் மரணத்தில்தான் காய் பிறக்கிறது. கன்னிமையின் மரணத்தில்தான் தாய்மை பிறக்கிறது. விடியலை அழகு என்கிறாய் அது இரவின் மரணமல்லவா? புதுமையை வரவேற்பவனே பழமையின் மரணம் இல்லையென்றால் புதுமை ஏது? இவ்வாறாக “மரணம் என்பது அழகு” இதை பற்றி “ஆலாபனை” என்னும் நூலிலே கவிஞர் அப்துல் ரகுமான் கூறுகிறார். 

ஆகவே மானுட நண்பர்களே! இறப்பு என்பது இறைவன் நமக்கு அளித்துள்ள கொடையாகவும், வரமாகவும் கருதி திருவிவிலியத்தின் இறப்பு நிகழ்வுகளை சற்று ஆராய்ந்து புனிதர்களின் வாழ்க்கைப் பாதையிலே நம்மையும் இணைத்து நாம் இறப்பை எதிர்நோக்கும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ முற்பட வேண்டும். 

இறுதியாக,
பிறப்பு என்பது இறப்பின் ஆரம்பம்
பிறக்கும் நீ இறப்பது உறுதி
இறக்கும் நீ வாழ்வது உறுதி
புனிதனாய் மாறும் போது.

சாவான பாவம்…வாழ்வு தந்த வரம்


நிழல் இல்லா நிஜங்கள் இல்லை,
காற்று இல்லா ஒளி இல்லை,
முட்கள் இல்லா வழிகள் இல்லை,
முட்டுக் கட்டைகள் இல்லா வாழ்க்கை,
ஒரு வாழ்க்கையல்ல.
இறை யேசுவில் பிரியமானவர்களே!

பாவம் இல்லாத ஒரு வாழ்வு நம்மால் வாழ முடியாது. அதேசமயம் பாவத்திலிருந்து மீள முற்படாமல் வாழ்வது ஒரு பாவம் ஆகும். ஆதியிலே மனிதனை மிகவும் நல்லது என படைத்தார் இறைவன் ( ஆதி. ) மனிதனோ தனக்கு தானே பாவத்தை உருவாக்கினான். எனவேதான் ஆதியிலே பிறந்த பாவம் அகிலத்தை ஆண்டுவருகிறது. கடவுள் மனிதனுக்கு நல்லதை அறிவிக்க விரும்பி பல காலகட்டங்களில் பலவிதமான முயற்ச்சிகளால் மனிதனுக்கு பாவத்தின் பலத்தையும் அதன் விளைவையும், அழிவையும் அறிவுறுத்த முற்பட்டார். அக்கால இறைவாக்கினர் முதல் இக்கால கவிஞர்கள் வரை பாவத்தின் கணத்தை வெவ்வேறு விதத்தில் எடுத்துக் கூறுகின்றனர். 
  • பாவத்தை விட்டு விலக்கி இறைவனிடம் திரும்பி வாருங்கள் - எரேமியாஸ்
  • இம்மக்கள் உதட்டினால் என்னை புகழ்கின்றனர் ஆனால் இவர்கள் உள்ளமோ வெகு தொலைவில் உள்ளது
  • பாவம் என்ற கல்லறைக்கு பலவழி அந்தக் கருணை தேவன் கோயிலுக்கு ஒருவழி – கண்ணதாசன் 
  • பாவம் என்றொரு விசத்தால் - உன் பாதத்தை பிடித்தேன் இறைவா – கிறிஸ்தவ பாடல் 
பாவத்தின் பரிநாமத்தை பலபேர் எடுத்து கூறினாலும், மனிதனிடத்திலே எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இந்த கலியுகத்தில் மனிதன் வேகமாக முன்னேறினாலும், பாவம் பல கோணங்களில் விருச்சமாக பரந்து விரிந்து வளர்ந்து வருகிறதை எவராலும் மறுக்க முடியாது. பாவத்தினால் சாவு என்ற சவுக்கடி இந்த உலகில் தலைக்காட்டியது. நமது ஆண்டவர் பாவத்தை வென்று சாவை தூக்கியெறிந்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். கடவுள் நம்மிடம் கூறுவது பாவத்தை விட்டு விலகுங்கள் என்று நமக்கு அறிவூட்டுகிறார். பாவம் செய்த எவருக்குமே விண்ணரசில் இடம் இல்லையென்று சொல்லவில்லை. பாவிகளுக்கும், ஏழைகளுக்கும் இறையரசு என்று கூறியதெல்லாம் யார் பாவத்திலிருந்து மன மாறுகின்றார்களோ அவர்களுக்கே வசந்தம் கிடைக்கும். ( எ. கா. நல்ல கள்வன்)

பாவம் எப்படிச் செய்கிறோம்? 

புனித அகுஸ்தினார் தன்னுடைய நூலில் இவ்வாறு கூறுகின்றார், “இறைவனை விட்டு விலகுவது பாவம்” இதற்கு விவிலியத்தில் சான்றுகளை தேடிபார்க்கும் போது விவிலியம் முழுவதுமே மனிதன் பாவம் எப்படி செய்கின்றான் என்றும், கடவுள் மனிதனை எவ்வாறு பாவத்திலிருந்து மீட்கிறார் என்றும் ஒவ்வொரு பக்கங்களும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டு நூல்கள் முதல் புதிய ஏற்பாட்டு நூல்கள் வரை பாவத்தை பற்றி அருமையாக எடுத்து கூறுகின்றது. சான்றாக: 
  • ஆதிமனிதனின் பாவம் 
  • பாபேல் கோபுரம் கட்டி கடவுளை காண முற்படுகின்ற பாவம் 
  • இஸ்ராயேல் மக்கள் வேற்று தெய்வங்களை வழிபடுதல் மூலம் கடவுளுக்கு எதிராக பாவம் செய்தல், 
  • கடவுளை விட்டு வெகு தொலைவில் சென்ற பாவம். 
  • தேர்தெடுக்கப்பட்ட இஸ்ராயேல் குலத்தவர்கள், அரசர்கள் மற்றும் மதகுருக்கள் பாவம் செய்தனர்(தாவீது). 
  • பலி செலுத்தும் முறையில் பாவம் செய்தனர். 

இவ்வளவு தூரம் கடவுளுக்கு மனவருத்தம் கொடுத்தாலும் கடவுள் அவர்களை அந்த நிலையிலே விட்டு விட்டாரா? இல்லை, புதிய ஏற்பாட்டு நூல்களிலே பார்க்கின்றோம், கடவுள் தம் ஒரே மகனையே அனுப்பி மனிதனை பாவத்திலிருந்து மீட்கிறார். 

கடவுளின் வெளிபாடு

இறைமகன் இயேசு பாவிகளை நேசித்தார். அவர்களுடைய உள்ளத்து ஏக்கங்களை புரிந்து கொண்டார், ஆனால் பாவத்தை வெறுத்தார். இதையே இயேசு, சக்கேயுவை சந்திப்பதின் மூலமும், ஊதாரிமைந்தனின் உவமையிலும் விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணிடம் “நானும் தீர்பிடேன், இனி பாவம் செய்யாதே” என்று அறிவுறுத்தி சொன்னதிலும் கடவுளின் அன்பை வெளிப்படையாக காண்கின்றோம்.. 

கடவுளின் அன்பை உதரிச் சென்று, விவேகத்தை இழந்து, இருளை விரும்பி வாழ்ந்து கொண்டிருந்த கொரிந்து மக்களுக்கு தூய பவுல் தன்னுடைய கடிதத்தின் மூலம் கடவுளின் அன்பை கொடுக்க முயல்கின்றார். திருவிவிலியம் நமக்கு கற்றுத் தருவது எந்த ஒரு செயலிலும் கடவுளின் வெளிப்பாட்டை மறந்து, மனித புத்தியின் படி நடக்கும் போது பாவ சேற்றிலே விழுந்து நம்மை நாமே கரையாக்கி கொள்கின்றோம். சுருங்கக் கூறின், பாவம் என்பது நிழல் போன்றது தொடர்ந்து வரும். ஆனால் நாம் பாவத்தை தொட நினைத்தால் அது ஓட தொடங்கும் (நிழல்). 

திருநூலும், திருச்சபையும் கற்பிப்பது
  1. “Every sinner has a future” ஒவ்வொரு பாவியும் நல்ல எதிர் காலத்தை எதிர்நோக்கியுள்ளான். இன்று அடிபடாமல் படிக்கின்ற பிள்ளையை விட, அடிவாங்கி படிக்கின்ற பிள்ளையும், சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது விழுந்து விடாமல் பழகுகின்ற குழந்தையை விட, அடிப்பட்டு கற்றுகொள்கின்ற குழந்தை திறமை மிக்கதாக இருக்கும். எனவே நாம் பாவி என்பதை மனமாற முதலில் ஏற்றுக் கொள்வோம். 
  2. மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் தன்னுடைய சுற்றுமடலில், “இருபதாம் நூற்றாண்டின் அவலநிலை பாவம் என்ற உணர்வு அற்ற நிலைதான்” என்று கூறுகின்றார். மனிதன் எதையுமே வயமந வை நயளல pழடiஉல என்று எடுத்து கொள்வதால் பாவம் என்ற பய உணர்வு இன்றி, வாழ்ந்து மடிகின்றான். 
  3. திருச்சபை நமக்கு ஒப்புரவு என்ற அருட்சாதனத்தை கொடுத்துள்ளது. அதன் மூலம் நாம் பாவ கரைகளை நீக்கி மீண்டும் இறைவனோடு கை கோர்த்துக் கொள்ள வழி வகுக்கின்றது. இன்று நம்மில் பலர் இந்த அருட்சாதனத்தை அலட்சிய படுத்தி வாழ்ந்து வருகின்றோம். 
  4. திருவிவிலியம்: நீங்கள் பாவம் செய்யாதீர்கள் என்று வெளிப்படையாக கூறுகின்றது. அதே போல் பாவத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று இயேசு ஒவ்வொரு பக்கத்திலும் கூறுவதை பார்க்கின்றோம். நாம் எவ்வாறு பாவம் செய்யாமல் இருப்பது என்பதற்கு இரண்டு கட்டளைகளை இயேசு கொடுக்கின்றார். 1 இறையன்பு 2 பிறரன்பு 
எப்படி நம்மால் பாவத்தை விலக்கி வாழ முடியுமா?

முடியும் என்று நினைப்பது தவறல்ல. ஒவ்வொரு ஆன்மாவிற்கும் போதிய பலத்தை தந்துள்ளர் நம் ஆண்டவர் இயேசு. ஆனால் நாம் அனைவரும் பயன் படுத்துவது கிடையாது. பாவத்தை விலக்கி புனித வாழ்வு வாழ்ந்து காட்டியவர் தூய பவுல் அடிகளார். இவர் கிறிஸ்தவர்களை கொன்று குவித்து வந்த காலகட்டத்தில் இறைவனின் உந்துதலினால் ஏவப்பட்டு எந்த கிறிஸ்தவர்களை வதைத்தாரோ, அதே மக்களுக்கு பணி செய்யப் புறப்படுகின்றார். இவருடைய மனமாற்றத்திற்கு இறைவன் ஒரு கருவியாக செயல்பட்டார். நம்முடைய வாழ்விழும் சில எதிர்பாராத நேரங்களில் இறைவன் நம்மையும் சந்தித்து பேசுகின்றார். நாம் அவருக்கு செவிசாய்க்க மறந்து விடுகின்றோம். நாம் செய்கின்ற ஒவ்வொரு பாவமும் ஏதாவது ஒரு வழியில் நம்மை மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், நம் வாழ்வு அவமானத்திற்கும், கேளிப் பேச்சுக்கும் உள்ளாகும் என்பதை விவிலிய சுவடுகள் எடுத்து காட்டுகின்றன. (யூதாஸ், இறைவாக்கினர்கள் மற்றும் அரசர்கள்)

பாவத்தை விட்டு விலகுவதற்கு இறைவன் கொடுக்கும் மருந்து 

இவ்வுலகில் பாவம் சாபமாக உள்ளே நுழைந்தது. ஆனால் ஆண்டவர் அதை வரமாகப் பெற்று மீட்பு அளித்தார். எனவே துன்பத்தில் சாய்ந்து விடாமல் துணிந்து அதை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கும் அருமருந்து. ஒவ்வொரு மருந்தையும் அதை அருந்தும் முன் அதன் முத்திரையை (சீல்) உடைக்க வேண்டும். அதேபோல் அன்பு என்ற கனிரசம் நம்மிலே உடைப்பட்டு ஊற்றாக வேண்டும். அப்போது இறைவன் கொடுக்கும் மருந்து பூரண சுகமளிக்கும். 
மனிதன் எடுக்கும் முயற்சி

கடவுளை விட மனிதன் எடுக்கும் முயற்சி மிக மிக சொர்பமாணவை. பாவத்திற்கு கருவியாக கோவில் உண்டியலில் தான் கொள்ளையடித்த பணத்தின் மீதி பாதியை போட்டு விட்டு, வருகின்ற துன்பத்திலிருந்து காக்கும்படி மன்றாடுகின்றான். ஏழைகளுக்கு உதவியை நாடி வருபவருக்கு தன்னால் இயன்ற அளவு உதவி செய்கின்றான். தன்னலம், சுயநலம் இல்லா மன்னிப்பை பெற அவனுடைய மனமும் அவன் செய்கின்ற செயல்களும் அவனுக்கு பல நேரங்களில் தடையாய் இருக்கின்றன. எனவே பாவத்தை விட்டு விலக்கி அன்புடனும் இயேசு கொடுத்த மருந்துடனும் வாழ முற்படுவோம் 

வாங்க எல்லோரும் பாவத்தை விட்டு விலகுவோமே, என்பதை விட, பாவத்தை வாழ்க்கையில் இருந்து விரட்டுவோம் என்ற உறுதிமொழியுடன் இறைவனை வேண்டுவோம். ஆமென்.

சகோ. அருண் பெல்லார்மின் 

நற்கருணை - மனுகுலத்தின் மீதான அன்பின் அடையாளம்


கி.பி எட்டாம் நூற்றாண்டு, இத்தாலி நாட்டில் ஓர்த்தோனா பகுதியில் லான்சியானா என்ற இடத்தில் பைசாரியன் துறவிகள் வாழ்ந்து வந்தார்கள். கி. பி 730 முதல் 750 களுக்குள்ளாக நடந்த நிகழ்வு இது. ஒரு குறிப்பிட்ட குருவானவர் இதயத்திலே முள்ளைப்போல் தைத்துக் கொண்டிருந்த சந்தேகத்தோடு ஒவ்வாருநாளும் திருப்பலியை நிறைவேற்றினார். அவரின் சந்தேகம் இதுதான். பலிப்பீடத்தில் இருக்கும் அப்பமும், இரசமும் திருப்பலியில் உண்மையாகவே இயேசுவின் தசையாக, இரத்தமாக மாறுகின்றதா? நாட்கள் நகர்கின்றன. அன்றும் அவருக்கு அதே சந்தேகம். 

திருப்பலியை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார். எழுந்தேற்றவேளையில் அர்ச்சிப்பு செபத்தை செபித்து, “இது என் உடல், இது என் இரத்தம்” என்கிற வசீகர ஜெபத்தை முடிக்கிறார். தலைதாழ்த்தி வணங்கி நிமிர்ந்தால் அவருக்கு அதிர்ச்சி! அப்பமும், இரசமும் காணவில்லை. ஆனால் அங்கே மனித தசைத் துண்டும், இரத்தமும் உள்ளது…. அதிசயம்! ஆனால் உண்மை! விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள், இது மனித தசையா என்று? கத்தோலிக்கர் மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர் குழு பரிசோதனை செய்தது. மனித தசையே என்று உறுதி செய்தது. 

மீண்டும் 1971ல் சியன்னா பரிசோனைக்கூடத்திலே ஆராய்ச்சித் தொடர்ந்தது. தசை மனிதரின் தசை என்றும், இரத்தம் மனிதரின் இரத்தம் என்றும், அத்தசை மனித இதயத்தின் ஒருபகுதி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மீண்டும் எண்டோக்கார்டியாக் என்கிற நவீன பரிசோதனை செய்யப்பட்டது. இதயத்தின் சதையே என்று அவர்களும் சான்றளித்தார்கள். Standard Method of Electro – Analysis of Blood என்ற அதி நவீன இரத்தப் பரிசோதனைச் செய்யப்பட்டது. AB இரத்த குடும்பத்தை சார்ந்த தசை என்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் நற்கருணையில் தன் பிரசன்னத்தை உண்மைப் படுத்துகின்றார். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆராதனைச் செய்கின்றனர். 1300 ஆண்டுகளாக இன்று வரை இது தொடர்ந்து கொண்டே உள்ளது. 

நற்கருணை - இறையன்பின் மறைபொருள்

தன் நண்பனுக்காக உயிரைக்கொடுப்பதை விட மேலான அன்பு வேறில்லை என்றவர், நற்கருணையில் அதைச் செயல்படுத்துகிறார். “எனது தசை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” (யோவான் 6:55-56) என்றவர் நற்கருணையில் தன் அன்பையும், உடனிருத்தலையும் பாடமாக்குகிறார். 1999 ஆம் ஆண்டு லான்சியாவில் நடைபெற்ற நற்கருணை மாநாட்டிலே திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் “நற்கருணை நாதரின் நிரந்தர அர்பணிப்பு, பரிவு, தியாகம், மற்றும் அன்பு அன்றாடம் வாழ்வில் மறு நிகழ்வாக்கப்படவேண்டும்” என்பதை மையப்படுத்தினார். நற்கருணை இறையன்பின் வெளிப்பாடு. இயேசுவின் முழுவாழ்வையும், குறிப்பாக பாடுகள், மரணம், உயிர்ப்பை உணர்த்துகின்றது. 
நற்கருணை – ஆண்டவரின் திருவிருந்து – அன்பின் அருமருந்து.

தூய பவுலடியாரின் 1கொரி. 11:17-34ல், அர்பண வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கின்றது. குழுமங்களில் உள்ள பிளவு, கட்சி மனப்பான்மை, பாகுபாடு, பிரிவிணை பேதம்… கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி… வெட்கப்படுத்துகிறீர்களா? என்ன சொல்வது? உங்களை பாராட்டுவதா? (எசா. 22) “ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்ற பவுலடியாரின் வார்த்தைகளை நானும் பயன்படுத்துகிறேன். நற்கருணையைப் பற்றிக் கொள்வோம்! இனம், மொழி, சாதி, பண்பாடு கடந்து, நற்கருணை மனுக்குலத்தை அன்பினால் குடும்பமாக்குகின்றது. அன்பே நற்கருணையின் உயிர் நாதம். 

ஆண்டவரின் திருவிருந்திலே தகுதியுடன் பங்கேற்க, நிறையருள் பெற நாம் நம்மை விட்டு வெளியே வருவோம். தகுதியின்றி பங்கேற்பது ஆண்டவரின் உடலுக்கும், இரத்தத்திற்கும் எதிரான பாவம் (எசா 27). சோதித்தறிந்தே பங்கேற்க வேண்டும் (எசா 28). இல்லையெனில் தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்வீர்கள் (எசா 29). ஆனால் நம்மை நாமே சோதித்தறிந்தோமானால் நாம் தீர்ப்புக் குள்ளாக மாட்டோம்(எசா 30). நற்கருணை ஆண்டு நம் ஆன்மீக வாழ்வில் திருப்புமுனையாக அமையட்டும்.

நற்கருணை – அர்ப்பண வாழ்வின் ஊற்றும், உச்சமும். 

நாம் அழைக்கப்பட்டதே அவரோடு உடனிருக்க! நற்கருணை இறைவனின் உடனிருப்பு. உமது உடனிருப்பு சீடத்துவ வாழ்வின் அடிப்படைத் தேவை. அவரோடு, அவர் பிரசன்னத்தில் இருப்பதே நம் முதல் கடமை….. சீடத்துவ வாழ்வின் ஊற்றும் உச்சமும் இதுவே…. தூய ஜான் மரிய வியான்னி தினமும் 16 முதல் 18 மணிநேரம் நற்கருணை நாதர் பிரசன்னத்தில் தன்னையே கரைத்துக் கொண்டார். திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், மடாதிபதிகள், அரசர்கள் என ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை ஆண்டவருக்குள் இணைத்தார். அருளாளர் அன்னைத் தெரசா… பணிவாழ்வுக்கு ஆற்றலை, சக்தியைத் தருபவர் நற்கருணை நாதரே என்று உலகிற்கு பறைசாற்றியவர். சபை சகோதரிகள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நற்கருணை நாதரோடு ஐக்கியமாகின்றார்கள். நமக்கு உயிர் பிச்சை போடுகின்ற இறைவனுக்கு நேரம் ஒதுக்க தயங்க வேண்டாம். தனிமையில் நற்கருணை நாதரிடம் உரையாடுவோம். ஆராதனைச் செய்வோம். அருள்வரங்களை நிறைவாகப் பெறுவோம்….

நற்கருணை – விடுதலை இறையியலின் உயிர்நாதம் 

விடுதலை இறையியல் அடிப்படைப் பண்பு பேசுவது அல்ல, மாறாக செயல்படுவது. அடுத்தவர்களுக்காக, தேவையில் இருப்போர்க்காக, இலக்கு மக்களுக்காக சுவாசிப்பது, சிந்திப்பது, செயல்படுவதுதான் விடுதலை இறையியல். பேசாமலேயே இதற்கு இலக்கணம் வகுத்தவர் நற்கருணைநாதர் இயேசு. பாவம், சாவு, சமூக, பொருளாதார, அரசியல் அடிமைத்தனங்களுக்கு சவால் விடுப்பவரும், சவுக்கடி கொடுப்பவரும் நற்கருணை நாதரே. அவரின் வழி தற்கையளிப்பு. இறைவாக்குப்பணி. உருமாற்றப்பணி, உருவாக்கப்பணி. அனைத்தும் முழுமை பெறுவது தன்னையே பலியாக்குவதில். தியாகமில்லாத விடுதலை இறையியல் ஒரு கானல் நீர். நடமாடும் நற்கருணையாவோம்.

திருத்தொண்டர் அடைக்கலசாமி