துன்பம்


‘துன்பம்’ என்ற பெயரைக் கேட்டாலே ‘சும்மா அதிருதுல்ல.’ இதற்கு காரணம் துன்பம் இல்லாமல் இன்பமில்லை (ழே pயin ழெ பயin) என்பதை ஏற்றுக் கொள்ளாத மனமே காரணம். ஒருவர், “வாழ்வில் இன்பம்” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். அதன் விலை ரூபாய் 500. அந்த நூல் சரியாக விற்பனை ஆகவில்லை. அவரது வாழ்வில் இன்பம் இல்லாமல் துன்பத்தை ஏற்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார். இவ்வாறு இல்லாமல் துன்பத்தை சரியாக புரிந்துக் கொண்டோம் என்றால் அவற்றிலிருந்து ஒரு திடமான, தெளிவான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.

வாழ்வியலில் துன்பம்
“நாங்கள் எல்லாம் தூங்கும் போது தலையாணிக்கு பதிலாக ‘துன்பத்தை’ வைத்து தூங்குறவுங்க என்று கூறுபவர் ஒருவரும் கிடையாது. தன் வாழ்நாள் முழுவதும் ‘இன்பமே’ என்று கூறுபவரும் கிடையாது. “துன்பம் நிரந்தரம் அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரைப் போல ஓடிவிடும்”. சாலை என்று ஒன்று இருந்தால் அதில் மேடு, பள்ளம் இருக்கத் தான் செய்யும். அது போல ‘வாழ்க்கை’ என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும். ஒருவனுக்கு துன்பம் வந்தால் அவன் வாழ்வில் முன்னேறிக் கொண்டு உள்ளான் என்று அர்த்தம்.

என்னை பொறுத்தவரை, ஒருவன் துன்பத்தின் வழியாகத்தான் வாழ்வில் பல வி~யம் கற்றுக் கொள்ள முடியும். இன்பம் ‘ஒருமுறை’ வந்தால் துன்பம் ‘பத்துமுறை’ வர வேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டுவேன். ஏனென்றால் அப்போதுதான் நான் வாழ்விலும் சரி, இறைவனிடமும் சரி நெருங்கி இருப்பதாக உணர்கிறேன். 

வாழ்க்கையில் துன்பமே வேண்டாம், இன்பம் மட்டுமே வேண்டும் என்று நினைப்பவர்கள். “வெந்ததைத் தின்று விட்டு – விதி வந்தால் சாவோம்” என்ற அடிப்படையில் வாழ்பவராகி விடுவோம். ஒருவன் இமயமலை ஏற வேண்டும் என்றால் வெயில், குளிர், காயம், மழை, பசி, தாகம், சோர்வு, என்று துன்பம் வந்தாலும் இவற்றையெல்லாம் கடந்தால்தான் ‘இன்பமான’ இமயமலையின் உச்சியை அடையமுடியும். இறைவனால் உண்டாக்கப்பட்ட இந்த மலையில் ஏற இவ்வளவு துன்பம் தேவைப்படுகிறது என்றால் நம் இயேசு கிறிஸ்துவையே அடைய ‘எவ்வளவு துன்பம்’ சந்திக்க வேண்டிவரும் என்பதை சற்று சிந்திப்போம்.

துன்பத்தில் ‘கின்னஸ் சாதனை’ படைத்தவர் இயேசு கிறிஸ்துதான் என்று கூறலாம். இவரை விட எவரும் அதிகமான சோதனையும், துன்பத்தையும் அடைந்திருக்க மாட்டார்கள். இவருக்கு அடுத்து ‘அப்போஸ்தலர்கள்’ துன்பத்தில் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் என்றுக் கூறலாம். அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு வரும் ‘துன்பம்’ எல்லாம் தென்றல் வந்து உரசுவது போலத்தான். ஆகவே வாழ்வு என்னும் பயணத்தில் துன்பத்தை கருவியாக கொண்டு வெற்றியடைவோம். 

“பத்தோடு பதினொன்று, அத்தோடு நானொன்று” என்று வாழாமல் இந்த இறையரசு பணியில் ஈடுபட்ட நாம் அவரது சொற்களை எடுத்துக் கொண்டு உலகமெங்கும் அறிவிக்க செல்வோம். அவ்வாறு வாழ்ந்திட துன்பத்தை துரும்பாக்கி, இன்பத்தை இறும்பாக்கிக் கொள்ளவேண்டிய மனநிலையை ஆண்டவரிடம் கேட்போம். 

சகோ. செ. அருண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக