உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

என் நெஞ்சம் இனிதாகப் பாடும்

கார்மேகம் காணும் மயிலாக நானும்

என் நாவில் ஆனந்த ராகம்

உணவாய் வந்த தெய்வம் - என்

உள்ளம் கவர்ந்த தெய்வம்

உள்ளம் கவர்ந்த தெய்வம் - என்

உணவாய் வந்த தெய்வம்


1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண

விளக்கோடு உனைத் தேடினேன்

விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள

நான் இங்கு உளம் வாடினேன்

வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ

உனக்காக நான் வாழ்கிறேன்

உன் அன்பில் ஒன்றாகிறேன்


2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும்

நான் என்னை அழகாக்கினேன்

மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள

உனக்காக யாழ் மீட்டினேன்

வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ

உம் மாண்பு நிறைவானது

உம் மாட்சி நிலையானது

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா

உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

1.

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

2.

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடைபுரிய வருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

3.

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலை கண்டிட வருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

உனக்கென நான் தரும் காணிக்கையை

 உனக்கென நான் தரும் காணிக்கையை

உவப்புடன் ஏற்பாய் என் இறைவா - 2

பலியென எனை நான் தருகின்றேன் - 2 - உன்

பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2


1. உழைப்பின் கனி இது உனக்காக

உன்னருள் கொடைகளின் பலனாக - 2

படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2 - உன்

படைப்பினில் சிறந்ததை தருகின்றேன் - 2


2. உடல் பொருள் ஆவி உனக்காக

உன் பணி புவிதனில் நிறைவாக - 2

மடிந்திடும் மனிதத்தின் விளக்காக - 2 - நான்

மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் - 2

எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே Lyrics

எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே
உன் நினைவில் நான் என்றும் உயிர் வாழ்வேனே
உன் பாதச் சுவடுகளில் என் பயணம் தொடர
நீயாக எனை மாற்றும் என் நேசமே
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அன்பே தூய்மையானது என்வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது - 2
வாழ்வின் எதிர்ப்புகளில் கலங்கிடமாட்டேன் -2
நம்பிக்கையின் தீபமாய், நீ இருக்கின்றாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அருளே மேலானது என் வாழ்வில்
உன் உறவே மாறாதது
உனக்காக நான் என்றும் காத்திருப்பேன்
நிழலாக எனை என்றும் நீ தொடர்வாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து 
அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

.உன் பாவங்கள் மன்னித்திடுவார் உன் நோய்களைக் குணமாக்குவார் 2
உன் உயிரை அழிவிலின்று மீட்டு காத்திடுவார் 2
கருணையம் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபெற செய்கின்றார் 2
உன் இளமை கழுகின் இளமை போல் நாளும் புதுப்பிக்கின்றார் 2
நீதியான செயல்களையே எந்நாளும் செய்கின்றார். 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

தம்வழியை வெளிப்படுத்தி மாட்சிமையைக் காணசெய்கிறார் 2
மண்ணினின்று விண்ணளவுயர்ந்த பேரன்பில் ஆட்க்கொள்வார் 2
வயல்வெளி மலரெனவே எந்நாளும் மலரச்செய்வார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது Lyrics

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது 
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன் விண்ணக தேவனை 
வழிபட வாருங்களே
இறை அருட் தரும் பலியிது ஆதவன் ஒளியிது
அர்ப்பணமாகிட வாருங்களே 
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

வறண்ட மணலாய் வாடி தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது (2)
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

எங்கும் நிறைந்த தந்தை வழிசெல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது (2)
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

அன்பில் கனிந்த வந்த அமுதே Lyrics

அன்பில் கனிந்த வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கி தவித்தேன்
எனில் வாழும் உணவாக அழைத்தேன்

விருந்தாக வரும் தேவன்
உனை காண்கையில்
வரும் தாகம் பசியாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா
இசையோடு தமிழ் சேரும் சுவை காணவே
உனைத்தேடி உனை நாடி நிறைவாகுவேன்
உன்னில் உருவாகுவேன்

என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என் மீது நீ கொண்ட அன்பானது - அது
தினந்தோறும் பலியாக அரங்கேருது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே
மண்ணில் உருவாகுமே