இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா

முன்னுரை:
நற்கருணை என்பது உறவின் சாட்சியமாகவும், உரையாடலின் சாத்தியமாகவும், உள்ளுணர்வுகளின் சங்கமமாகவும், உடன்படிக்கையின் சகாப்தமாகவும் திகழ்வதுதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் ஆகும். நாம் உழைக்க வில்லையேல் நமக்கு உணவில்லை. இதைத்தான் உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது என்று புனித பவுல் அடிகளார் கூறுகிறார். இந்த உழைப்பு இறைவனின் உள்ளத்திலும் இதயத்திலும், மனித உள்ளமும், மனித இதயமும் குடிக்கொள்வதற்காக தயாரிக்கும் உழைப்பு. வாழ்வின் உணவாக நற்கருணை வடிவில் வந்த இயேசு நமது ஆன்ம தாகத்தையும், பசியையும் போக்குகிறாh.; நம்மைக் குணப்படுத்துகிறார். நம் வாழ்வைப் புதுப்பிக்கிறார். விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகிறார். நற்கருணை விருந்தில் நம்மீது இயேசு வைத்திருக்கும் அன்பின் ஆழ அகழத்தைப் புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறார். நம்மோடு நெருக்கமான உறவுகௌ;ள நற்கருணையில் வாழும் இயேசுவை ஆவலோடு வரவேற்போம்.
முதல் வாசக முன்னுரை: இணை 8; 2-3,14-16.
மோயிசன் வழியாக மக்களுக்கும் கடவுளுக்கும் நடந்த உடன்படிக்கை அவர்களுடைய வாழ்வில் பிரிக்கமுடியாத, மறக்கமுடியாத மன்னாவை தெய்வீக உணவாகவும், பாறையிலிருந்து புறப்பட்ட நீர் அவர்களுக்கு வாழ்வுதரும் நீராகவும் இருந்தது என்பது ஒரு நீண்டகால மரபும,; வரலாறும் இஸ்ரேயல் மக்களின் வாழ்வில் இருந்ததை இவ்வதசக்தின் வழியாக வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: 1கொரி 10:16-17
இயேசு கிறிஸ்து நமக்கு உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி உணவாக தருவதோடு மட்டுமல்லாமல் இறைவன் தன்னையே மிகுந்த அன்போடு நமக்குத் தருகிறார், அவரது உணவிலே, உணர்விலே, உறவிலே நாம் ஒரே உடலாய் இருக்கிறோம் என்றுக் கூறும் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:
1. “ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா, உம் திருச்சபையை வழிநடத்தும்; திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வாhத்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “ விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்” என்று மொழிந்த வாழ்வின் நாயகனே, எம் தாய்திருநாட்டை ஆளுகின்ற தலைவர்கள் அதிகாரிகள் அனைவரும் உம்மக்களுக்கு வாழ்வு தருபவர்களாக மாறவும் அதனால் அவர்கள் வாழ்வில் உயர வேண்டிய அருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்” என்ற எம் தலைவனே, எம் பங்கில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் உண்மையாகவே பாவங்களையும் உடல் உள்ள நோய்களையும் மன வேதனைகளையும் துன்ப துயரங்கள் அனைத்தையும் போக்குகின்றது என்பதனை உணர்ந்தவர்களாக உம் நற்கருணை பிரசன்னத்தில் விசுவாசம் கொண்டவர்களாக சான்று பகர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன் அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்று மொழிந்தவரே எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறு குழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள,; அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும் நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள் பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கானிக்கை பவனியோடு கூடிய இறைமக்கள் மன்றாட்டுகள்:

1. அப்பம்
“எனது சதை உண்மையான உணவு” என்று மொழிந்தவரின் உடல் மென்மையாகவும், வெண்மையாகவும், ஒளிகொடுக்கக்கூடியதாகவும் இருந்தது நமக்கு தெரிந்த உண்மையாகும் அதேப்போன்று இந்த வெண்மையான அப்பம் எங்களுடைய பாவத்தைப்போக்கி சாத்தானின் அடிமையிலிருந்து விடுவித்து எங்கள் இதயத்தை வெண்மையாக்கவும் இருளை அகற்றி ஒளியை கொணர இந்த அப்பத்தை காணிக்கையாக்குகிறோம் இறைவா ஏற்றருள்வாய்.

2. திராட்சை ரசம்
“எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்” என்று கூறி திராட்சை ரசத்தை உம்முடைய இரத்தமாக மாற்றிய இறைவா எமது பாவத்தால் ஊறிபோன இரத்தத்தை உம்முடைய இரத்தத்தால் எங்;களைக் கழுவி சுத்தமாக்கிட இந்த இரசத்தை ஏற்றருள்வாய் இறைவா, எம்மை மாற்றிடுவாய் தலைவா.

3. விவிலியம்
ஆதிமுதல் தந்தையாம்; இறைவன் வார்த்தையின் வழியாக தம்மை வெளிபடுத்தினார். அவ்வார்த்தையின் அடக்கமே திருவிவிலியம். ஓளி உணடாகுக என்ற வார்த்தை ஆற்றலோடு உலகை உண்டாக்கியது. உலகில் உள்ளோரின் வாழ்வை மேன்மையாக்க அவ்வாறே மனிதனாகி மனிதனின் ஆன்மீகவாழ்விற்கு வழியும், உண்மையும,; வாழ்வுமாய் இருக்கிறது. அவ்வார்த்தையே தனிக்குருத்துவத்தில் பங்குபெறுவோரையும் பொதுக்குருத்துவத்தில் பங்குபெறுவோரையும் சாட்சிய வாழ்வுக்கு அழைக்கிறது அவ்வார்த்தையை வாழ்ந்து உலகெங்கும் பகிர அதன் மீது தணியாத ஆன்ம தாகத்தை ஊற்றெடுக்கச் செய்ய இவ்விலியத்தை காணிக்கையாக்குகிறோம்.

4. வெள்ளைத் துணி
அன்பை தொலைத்துவிட்டு அநீதியையும், அகிம்சையை தொலைத்துவிட்டு அக்கினிஏவுகனைகளையும,; சமாதானத்தை தொலைத்துவி;ட்டு போர்க்கருவிகளையும் கையிலேந்தி நிற்கும் இவ்வுலகம் ஆழ்ந்த இறைஞானம் பெற்றிட, நீதியாகவே எப்போதும் நடத்திட அன்பு நெறியை இம்மண்ணில் விதைத்திட அதனால் எங்கும் சமாதானக்காற்று வீசிட இவ்வெள்ளைத்துணியை காணிக்கையாக்குகிறோம்.

5. மெழுகுவர்த்தி, தண்ணீர்
இருளில் நடக்கிற மக்களை உண்மையின் ஒளிக்கு அழைத்துவர, பொய்மையிலிருந்து வாயிமையை இனம் கண்டுகொள்ள, ஒளியையும் பஞ்சப+தங்களில் தன்னிடம் தஞ்சம் புகும் அத்தனைப்பொருட்களையும் தன்மையமாக்கிக்கொள்ளும் நெருப்பைபோல் நாங்களும் உம் வார்த்தையை, நற்கருணை பிரசன்னத்தை எமதாக்கி எங்கும் மணம் கமழவும் ஆன்மதாகம் கொண்ட அத்தனைப்பேரும் “உம் சொற்கள் என்நாவுக்கு இனிமையானவை என் வாய்க்குத் தேனினும் இனியவை” என்று கூறிய சங்கீத ஆசிரியரைப்போல் சொல்லும் அளவுக்கு உம் வாக்கு எங்களில் இரண்டரகலக்க கரைய இந்நீரையும,; ஒளியையும் காணிக்கையாக்குகிறோம்.

6. விதைகள்
விதை விருச்சமானதுபோல் நாங்களும் உம்மில் வளரவும் மழையில் மடிந்துபோகாமலும் வெய்யிலில் வெந்துப்போகாமலும் உம் வாக்கில் நிலையாய் ஊன்றிவள்ர்ந்து தளிர்முதல் வேர்வரை அத்தனையும் அடுத்தவருக்கு பயன்படுவதுப்போல் நாங்களும் பயன்பட்டு எம்மை அழித்து உம் வாக்கை, உம் பிரசன்னத்தை வாழவைக்க அவ்வாக்கிற்கு நாங்கள் சாட்சிகளாய் நின்று வாழும் மக்களாய் இம்மண்ணில் பரவி படர்ந்துநிற்க இவ்விதைகளையும் காணிக்கையாக்குகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக