இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

முன்னுரை
இறையேசுவில் பிரியமானவர்களே, இன்று நாம் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழானைக் கொண்டாடுகின்றோம். நற்கருணை என்னும் அருட்சாதனம் மூலம் இக்கொடை நமக்கு அருளப்படுகிறது. எல்லா அருட்சாதனங்களிலும் மையமாய் விளங்குவது நற்கருனை, ஏனெனில் எல்லா அருளின் ஊற்றாம் இயேசு கிறிஸ்துவையே நமக்குக் கொடையாகத் தருவது இவ்வருட்சாதனம் மட்டுமே. திருச்சபை முழுநலத்துடன் அன்றாடம் வளர்வதற்கு உணவாக இது அமைகிறது. அப்பமும், திராட்சை இரசமும் தூய ஆவியால்தான் இயேசுவின் உடலாகவும,; இரத்தமாகவும் மாற்றப்பட்டு அவர் மனுவுரு பெற்று அவர் உடனிருப்பை நமக்குத்தருகிறார். அவர் மனுவுருவெடுத்ததின் குறிக்கோள் சிலுவையில் அவர் உடலை சிதைத்து, இரத்தத்தை சிந்தி உலகிற்கு நிறை வாழ்வு வழங்கவே. நற்கருணை கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு என்னும் மறைபொருளை உள்ளடக்கியுள்ளது எனவேதான் நாம் இதனை விசுவாசத்தின் மறைப்பொருள் என்று அறிக்கையிடுகின்றோம். அவரை உட்கொண்டு வாழும் போதும் அவர் உடலும் நம் உடலும் ஒன்றாய் இணைகின்றன. அவர் இரத்தமும் நம் இரத்தமும் ஒன்றாய் கலக்கின்றன. இவரோடு இணைந்திருக்கும்போது தந்தையும் தூய ஆவியும் நம் அருகில் அமர்ந்திருப்பதையும், வானதூதர்களும், புனிதர் புனிதையரும் புடை சூழ நிறைந்திருப்பதையும் நம்மிலே நாம் உணர இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை
சுருக்கமாக சொன்னால் சீனாய் மலையில் செய்த உடன்படிக்கை இஸ்ரயேல் மக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவின் ஒன்றிப்பை குறிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதை இவ்வாசகத்தின் வழியாக தெரிந்துக்கொள்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை
இயேசுவின் மனுவுருவெடுத்தலின் வழியாக இறைவன் தன் அன்பிரக்கத்தை நிறைவாக அபரிமிதமாக மக்கள் அனுபவிக்க உதவுகிறார் அதன் வழியாக அவர்களோடு உறவையும் ஒன்றிப்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார். கிறிஸ்து இரத்தத்தின் வழியாகச் செய்யும் உடன்படிக்கையின் மூலம் இந்த உறவு ஒன்றிப்பிற்கு நிலைத்த தன்மை கொடுக்கிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்:
1. “ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா, உம் திருச்சபையை வழிநடத்தும்; திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வாhத்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “ விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்” என்று மொழிந்த வாழ்வின் நாயகனே, எம் தாய்திருநாட்டை ஆளுகின்ற தலைவர்கள் அதிகாரிகள் அனைவரும் உம்மக்களுக்கு வாழ்வு தருபவர்களாக மாறவும் அதனால் அவர்கள் வாழ்வில் உயர வேண்டிய அருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்” என்ற எம் தலைவனே, எம் பங்கில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் உண்மையாகவே பாவங்களையும் உடல் உள்ள நோய்களையும் மன வேதனைகளையும் துன்ப துயரங்கள் அனைத்தையும் போக்குகின்றது என்பதனை உணர்ந்தவர்களாக உம் நற்கருணை பிரசன்னத்தில் விசுவாசம் கொண்டவர்களாக சான்று பகர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன் அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்று மொழிந்தவரே எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறு குழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள,; அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும் நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள் பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

1 கருத்து:

  1. கபிரியேல் வேதநாயகம்24 ஜூன், 2011 அன்று AM 4:20

    இயேசுவின் இனிய நாமத்தில்
    நலமே நாடி நலமுடன் வணக்கம்,
    முதல் பார்வையிலேயே மகிழ்ச்சியடைந்தேன். என்போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இன்னமும் புதிய ஆக்கங்களை சேர்க்கவேண்டும். இத்தளம் எப்போதும் என்றென்றும் பொலிவுடனும் சிறப்புடனும் விளங்க பிரார்த்திக்கின்றேன். எனது நல்லாசிகள்.
    நன்றி.

    கபிரியேல் வேதநாயகம்
    kaddaikadu.mulliyan@t-online.de

    பதிலளிநீக்கு