அன்பும் நட்பும் எங்குள்ளதோ

அன்பும் நட்பும் எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்

கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்
ஒன்றாய் கூடிச் சேர்த்ததுவே
அவரில் அக்களிப்போம் யாம்
அவ‌ரில் ம‌கிழ்ச்சி கொள்வோமே
ஜீவிய‌ தேவ‌னுக்கஞ்சிடுவோம்
நேரிய‌ உள்ள‌த்துட‌னே யாம்
ஒருவ‌ரை ஒருவ‌ர் நேசிப்போம்

என‌வே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் பொழுதினிலே
ம‌ன‌தில் வேற்றுமை கொள்ளாம‌ல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய‌ ச‌ச்ச‌ர‌வு ஒழிந்திடுக
பிண‌க்குக‌ள் எல்லாம் போய் ஒழிக‌
ந‌ம‌து ம‌த்தியில் ந‌ம் இறைவ‌ன்
கிறிஸ்து நாத‌ர் இருந்திடுக.

முக்தி அடைந்தோர் கூட்ட‌த்தில்
நாமும் ஒன்றாய் சேர்ந்து ம‌ன‌ம்
ம‌கிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்
ம‌கிழை வ‌த‌ன‌ம் காண்போமே
முடிவில்லாம‌ல் என்றென்றும்
நித்ய‌ கால‌ம் அனைத்திற்கும்
அள‌வில்லாத‌ மாண்புடைய‌
பேரானந்த‌ம் இதுவேயாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக