மாதா பாடல் - உம்மைத் தேடி வந்தேன்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாருமம்மா-2


1
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலை காத்தாய்-2
பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்ததாய்(2)- உம்மை
2
கடல் நீரும் போல உன் கோயில் காண‌
அலையாக வந்து உன் பாதம் சேரும்-2
உலகாளும் தாயே உனை பாடி வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா(2)- உம்மை
3
மலடான மங்கை மடிமீது மகனை
மகிழ்ந்தாடச் செய்த மகிமையின் தாயே-2
குருடானேன் உன்னை கரங்கூப்பி நின்றால்
அருளாகி எனக்கு ஒளி தாரும் தாயே(2)- உம்மை

Diaconate Ordination Kumbakonam Diocese

Priestly Ordination Procession, Kumbakonam

November 2008 Rain at Kumbakonam

On Changing the World

"When I was a young man, I wanted to change the world. I found it was difficult to change the world, so I tried to change my nation. When I found I couldn't change the nation, I began to focus on my town. I couldn't change the town and as an older man, I tried to change my family. Now, as an old man, I realize the only thing I can change is myself, and suddenly I realize that if long ago I had changed myself, I could have made an impact on my family. My family and I could have made an impact on our town. Their impact could have changed the nation and I could indeed have changed the world."
- Author Unknown on Changing the World

உன்னை அறிந்தால்...Know Thyself

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா

(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

சிற்பிகள்

முடியும் என்று முனைந்தால்
முடியாது என்பது முடங்கிவிடும்!
பகற்கனவு பசிக்கு உதவாது
இலட்சியமே நம்மை இமயத்திற்கு அழைத்து செல்லும்!
தன்னம்பிக்கையைத் தாரகமந்திரமாக்கி
வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக மாறுவோம்.

இம்மானுவேல்
(இறையியல் 1ம் ஆண்டு - 2005)

இளைஞர்களும் போதைப்பொருளும்


இன்றைய சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் வன்முறை, பசி, பஞ்சம், வறுமை, சாதியக் கொடுமைகள், லஞ்சம், வேலையின்மை மனித வாழ்வோடு ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கிறது. இக்கொடுமைகளுக்குள் அகப்பட்டுப் போயிருக்கின்ற மனிதன் தனது சுய மகிழ்ச்சிக்காக நாடுவது மது, மாது.,

மனிதனின் ஈடுபாடு எதில்?

நன்கு படிக்க வேணுடும், வேலைக்கு போக வேண்டும் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் உண்டு. வாழ்க்ககையில் எடுத்து வைக்கும் முதல் அடி தோல்வியாக அமைந்தல் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற எண்ணம் வரும், ஆனால் தோல்விதான் வெற்றியின் முதல் படி என்பதை மறந்து போய்விடுகிறொம் இதனால் நாடுவது போதை. தக்க நேரத்தில் நிம்மதி சிடைப்பதால் இதுவே நிரந்தரமாக வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் நாடுவது போதை.

போதையின் பாதிப்பு

இந்த நிலை நீடித்தால் மனிதனின் வாழ்க்கை இளமையோடு முடிந்து விடும் முதுமை என்பதே இல்லாமல் போய்விடும் இதனால் நமது உடல் மட்டுமல்ல மனமும் பாதிக்கிறது. சுய மரியாதை சுய மதிப்பு உள்ள மனிதனாக வாழாமல் போகின்றான். இது அவனை மட்டுமல்ல அவனைச் சார்ந்த அவன் குடும்பத்தையும் பாதிக்கின்றது. இது பணக்காரக் குழந்தைகளிடம் மட்டுமல்ல ஏழைக் குழந்தைகளும் இப்போது 79% பேர் அடிமையாகியுள்ளனர்.

தற்போது இந்திய நிலை
  • எட்டு இலட்சம் பேர் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கதிற்கு அடிமையாகியுள்ளனர்.
  • 1987-ல் பம்பாயில் 4000 கிலோ ஹசிஸ் கைப்பற்றப்பட்டது.
  • தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் கஞ்சா வளர்க்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
  • 65% கல்லூரி மாணவ, மாணவியர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
  • சென்னையில் மட்டும் 1,00,000 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
  • கிராமத்தை விட நகரங்களில் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
எப்படி விடுதலை?

நமது வாழ்வு இறைவன் நமக்கு அளித்த மாபெரும் கொடை. இதை பாதுகாத்து பல வித நல்லசெயல்களைச் செய்துஈ கடவுளுக்கும் நம்முடன் வாழும் மற்றவர்களுக்கம் பெருமை சேர்ப்பது நமது கடமை. இவ்வாழ்க்கையை தற்கொலை வழியாக முடித்துக்கொள்வதற்கோ, போதைப் பொருட்கள் மூலம் அழித்துக்கொள்வதற்கோ நமக்க உரிமையில்லை. வாழ்க்கைப் பிரச்சினைகளிலும், தனிமையிலும், பாவப் பிடியிலும் சிக்குண்டு தவிக்கும் மனிதத்தை மீட்டு புது வாழ்வை முழுமையாக அளிக்கவே இளைவன் மனிதனாக உருவெடுத்தார். இந்த இயேசு நம்மைப் பார்த்து, “நானே உலகின் ஒளி என்னைப் பின்செல்பசன் இருளின் ஒளியைக் கொண்டிருப்பான்.”

வாழ்க்கையில், விழுவது இயற்கை. ஆனால் எழுவது இயற்கைக்கு அப்பாற்பட்டதல்ல. முதல் முறை விழுந்த இயேசு எழ முடியாது என்றிருந்தல் ஏது உயிர்ப்பு, மீட்பு. விழுந்த நாம் எழ வேண்டும் தோல்வியைக் கண்டு துவளாமல், முடியும் என்ற எண்ணத்தோடு வாழும்போது வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும்.

தோல்வியிலிருந்து வெற்றிக்கு,
போதையிலிருந்து போட்டியான வாழ்வுக்கு,
துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்கு
தூக்கத்திலிருந்து துடிப்புக்கு,
வீழ்ச்சியிலிருந்து வழுச்சிக்கு எழுப்ப வேண்டும்.
இதை நாம் மறந்தோமானால் இளமையோடு இளைஞர்கள் வாழ்வு முடிந்து போவதற்கு நாமும் துணை போகிறோம். இதை விட நாம் என்ன செய்யப் போகிறோம்?
அடைக்கலராஜ்
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளையோர் நட்பு

அன்பு என்ற சொல் நம்மை எப்படி அரவணைக்கின்றதோ அதே போல நட்பு என்று சொல்லும் மனதில் தெம்ப உண்டாக்குகிறது, மனத்திற்குள் கூடுதலாக வலு சேர்க்கிறது. நம்மில் யாரும் தனிமையில் வாழ விரும்புகிறது இல்லை. உடலளவிலும் மனதளவிலும் நமக்கு தோழமை தேவைப்படுகிறது. நம்முடைய உணர்ச்சிகள், எண்ணங்கள், மகிழ்ச்சிகள், ஆகியவற்றை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். நம்முடைய ஆபத்தான சூழ்நிலையில் பிறர் ஆதரவுக்காக ஏங்குகிறோம். மகிழ்ச்சியான வாழ்வுக்கு நட்பு அத்தியவசியமான ஒன்று.

நட்பே மகிழ்ச்சி

நட்பு நம் அனைவருக்கம் வேண்டிய மிக அவசியமான ஒன்று. வியந்து உயர்ந்த நட்பு தியாகத்தினாலும் பிநர்நல அக்கறையினாலும் ஏற்படுகிறது. நல்ல நட்பு எந்த வித பிரதிபலனையம் எதிர்பார்ப்பது இல்லை. பழம்பெரும் தத்துவ ஞானி செனக்கா, வாழ்க்கையில் கிடைக்க கூடிய சுகங்களிலேயே, உறுதியான, மென்னையான நட்பைப்போல் சிறந்தது ஏதுமில்லை. அது நமது கவலைகளை இனிமையாக்குகின்றது. துயரங்களை பொக்கிவிடுகின்றது. நல்ல நட்பு மரணத்தைக் கண்டும் பயப்படாத நிலையினை கொடுக்கும் என்கிறார. உண்மையான நண்பர்களைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

நட்பில் பல வகை

எல்லோருக்கும் நண்பர்களாக நம்மோடு இருப்பது நமக்கு பலத்தையும் உற்சாகத்தையும் புது தெம்பையும் அளிக்கிறதுஇ. நல்ல நண்பர்களையுடையவர்கள்ஏழைகளுமல்ல கோழைகளுமல்ல தைரியம் உள்வர்கள், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டு கலங்காதவர்கள் காரணம் நண்பர்கள் உடன் இருப்பதால். “வெற்றியின் இரகசியம் என்னவென்றால், பிறர் கண்ணோடத்தைப் புரிந்து கொள்வது உங்கள் கோணத்திலிருந்து மட்டுமல்ல அடுத்தவர் நிலையிலிருந்தும் பார்ப்பது “என்கிறார் டோல் கானர்கி. நல்ல நண்பர்களைப் பெற நீங்கள் முதலில் நீங்கள் நல்ல நண்பர்களாக இருங்கள்.

நண்ர்களின் மனது புனிதமானது

“நம்பிக்கை இல்லாம் நட்பு இல்லை”. என்கிறார் கிரேக்க த்துவ ஞானி எபிக்யுரஸ்ஃ எப்படிப் நண்பர்கள் உங்கறுளுக்கு அமைய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட நண்பர்கள் நீங்கள் இருங்கள். நண்பர்களை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள். வேடிக்கையாகக் கூட நண்பர்களை புண்படுத்தாதீர்கள். கொடுப்பதும் பெறுவதும் நட்பில் முக்கியமானது. வாழ்க்கையில் வெற்றி பெற எதையாவது இழந்து தான் ஆக வேண்டும். அது அன்பாகவோ சேவையாகவோ இருக்கலாம்.

நல்ல நண்பர்களைப் பெற சில வழிமுறைகள்
  • மற்றவர்களிடம் நீங்கள் உண்மையான அக்கறை காட்டுங்கள்.
  • பிறரின் நட்பை உற்சாகத்துடன் வரவேற்கவும்.
  • பிறரிடம் புன்முறுவலுடன் பழகுங்கள்
  • பெயர் சொல்லி அழையுங்கள்
  • நட்புணர்வுடன் உதவுங்கள்
  • எதார்த்தமாய் வழகுங்கள்
  • உணர்ச்கிக்கு மதிப்பு கொடுங்கள்
  • உதவி செய்ய தயாராக இருங்கள்
  • விசுவாசமாக இருங்கள்
  • இரகசியத்தைக் காப்பாற்றுங்கள்
  • குற்றங்களொடு மதிப்பிடாதீர்கள், திறந்த மனதுடன் திருத்துங்கள்
  • நம்பங்கள், நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.
  • நண்பர்கள் உங்களுடன் தொடர்ந்து நட்பு வைத்திருக்க வழிமுறைகள்
  • நண்பர்களின் இரகசியங்களை மூன்றாவது நபரிடம், அவர்கள் இல்லாத போது புறம் கூற வேண்டாம்.
  • புனைப் பெயர்களையோ கேலி பெயர்களையோ சொல்லி அழைக்க வேண்டாம்.
  • உடல் ஊணத்தை குறிப்பிட்டு பேசாதீர்கள்.
  • நண்பர்களின் பணிபாடு பழக்க வழக்கங்கள், இனம், மொழி, சாதி, மதம் குறித்து கேலி செய்யாதீர்கள்.
  • நீங்கள் உங்கள் நண்பர்களை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணரச்செய்யுங்கள்.
  • ஆம் நல்ல நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமே இல்லை.

ஜேம்ஸ்
(இறையியல் 3ம் ஆண்டு - 2005)

இளைஞர்களின் நேர்மறை சிந்தனை

இன்றைய இளைஞர்கள் கலாச்சார மாற்றத்தினால், வேளையில்லா திண்டாட்டத்தினால், திரைப்படம் ஆதிக்கத்தினால் சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் தன் திறமைகளை புதைகுழியில் போட்டு புதைத்துவிட்டு சின்னாபின்னமாய் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் சுய மதிப்பு என்ன என்பதை மறந்து நடை பிணமாய் இருக்கிறார்கள். அவர்கள் உயிருள்ள இளைஞர்களாக வாழ தான் ஙார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு இயையோர் ஒருங்கினைப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு ஒரு சில நேர்மறையான சிந்தனைகள்.

1. உன் என்னமே நீ எண்ணங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. நம்முடைய எண்ணங்கள் தான் வாழ்க்கை. எண்ணத்தால் எல்லாவற்றிக்கம் ஆணிவேர். தோல்வி, வெற்றி, மகிழ்ச்சி, சோகம், இவை எண்ணத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அவரவர் எண்ணமே வாழ்க்கை என்கிறார் மார்க்ஸ் ஆர்லியஸ். ‘எண்ணங்களைப் பற்றி கவனமாய் இருங்கள் ஏனெனில் அவைதான் செயல்களாக, பழக்கங்களாக மாறுகின்றன’ என்கிறார் எம்.எஸ்.உதயமூர்த்தி. ஆகவே இளைஞனே உன் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் வாழ்க்கயையே மாற்றி அமைக்க முடியும். உன்னுள் ஒரு குரல் ஒலிப்பதைக் கேள் நீ எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்லும். நீ ஒரு அழகான வீரம் மிக்க இளைஞன் சாதிக்கப் பிறந்தவன் திறமையானவன் என்பதைச் சொல்லும். அதுதான் மனசாட்சி அதுவே உன் எண்ணம். நீ எதைப்பற்றி எண்ணுகிறோயே, சிந்திக்கிறாயோ அதுவாகவே நீ மாறிவிடுகிறாய். எண்ணங்களை சற்று கவனித்துப்பார். நீ யார் என்று அது சொல்லும்.

2. உன்னை நீ அறிந்து கொள் முதலில் உன்னை நீ அறிந்து கொள். உன்னிடமுள்ள ஆற்றலைக் கண்டுபிடி அதை விடாமுயற்சியால் வளர்ந்துக்கொள். உனக்க முதலில் எது வேண்டும் என்பதை உன் மனதிடம் கேட்டு தெரிந்து கொள். அடிக்கடி அதை மனதில் கொண்டு செயல்படு உன்னுடைய ஆற்றலை பெருமையாக நினைக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் “பத்து இளைஞர்களைக் கொடுங்கள் நான் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டகிறேன்” என்றார் விவேகானந்தர். எது அவரை இப்படி சொல்லத் தூண்டியது நீ எதையும் செய்யத் தயங்கமாட்டாய், எதற்கும் துணி;ந்தவன் நீ என்பதனால் தான். நீ நிமைத்தால் செய் முடியாதது ஒன்றுமில்லை. உன்னை நீ முழுமையாகத் தொரிந்துககொள் பின் உனக்கு தெரியாதது எதுவுமே இருக்காது.

3. மனவுறுதி அல்லது நம்பிக்கை “நீ சிறந்த இளைஞன் மட்டுமல்ல இரத்தவோட்டமுள்ள இளைஞன், உனக்கென்று சில ஆற்றல்களும் தனித்தன்மையும் உண்டு. உன்னுடைய ஆற்றலில் திறமையில் நீ நம்பிக்கை வைக்கும்போது உனக்குள் மறைந்திருக்கும் சிறப்பாற்றல்கள் கூட உனக்குத் தெரியும்.” என்கிறார் மேத்தா. நம்பிக்கையினால் உன் வாழ்வில் வெற்றியடையலாம். தோல்விகள் பல வந்தாலும் எதிர்த்துப் போராடலாம். உன் வாழ்க்கையை வழிநடத்தும் வழிகாட்டி நீயே. ஆம் உன் எண்ணங்களைப் புரிந்து கொண்டு வாழும் போது. இந்த இரகசநியத்தை இளையோர் ஒருங்கினைபாளார்கள் அறிந்து கொண்டால், இளைஞர்களின் இருண்ட காலத்தை ஒளிமயமாக்கலாம்.

சகோ.ஜான் போஸ்கோ
(மெய்யியல் 1ம் ஆண்டு - 2005)

இலட்சியம் செய்யுங்கள்

வாழ்வின் அனைத்து அனுபவங்களையும்
வளமான வகையிலே வார்க்கத் தெரிந்த நாம்
வரலாறு படைக்கும் கதாநாயகர்களே!

சீரழிந்திருக்கும் கூறுகள் மீது சினங்கொண்டெழுவோம்
எருசலேம் கோவிலில் நுழைந்த இயேசுவைப் போல
ஆதிக்கச் சக்திகளைப் பொசுக்கும்
அக்கினிச் சுவாலைகளாக மாறுவோம்!
வாருங்கள் புது உலகம் படைக்க புறப்படுவோம்
இலட்சியத்தை இதயத்தில் ஏந்தி!

ப. ராஜேந்திர சேகர்
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளைஞர்களும் உறவுகளும்

உறவின் முக்கியத்துவம்
வாழ்வென்பது உறவு கொண்டு வாழ்வது. நாம் கொண்டிருக்கம் உறவின் தன்மையில்தான் வாழ்வின் நிறைவும் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது. மனிதனின் துன்பமும் வெற்றியம் தோல்வியும் உறவின் தன்மையைப் பொறுத்தும் அதன் ஆழத்தைப் பொறுத்துமே அமைகிறது. மனித மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்ற உறவின் தன்மை மந்திரத்தால் வருவதல்ல மாறாக தெரிந்து புரிந்து பழகிக்கொள்வது. இரு ஒரு கல்வி.
இளைஞர்களும் உறவுகளும்
இளைஞர்களும் உறவுகளும் என்றவுடனே இயல்பாக நம் மனதில் தோன்றுவதெல்லாம் தவறான எண்ண ஓட்டம்தான். இந்த நிலைக்க இளைஞர்கள் மட்டும் காரணம் என்று கூறிவிட்டு நாம் விலகிவிட முடியாது. ஏனென்றால் பல காரணிகள் அவர்களை இந்த நிலைக்க ஆளாக்கியுள்ளது என்பதில் சிறிதும் தவறில்லை.
இளைஞர்களை பாதிக்கும் காரணிகள்
1. குடும்பச்சூழல்2. நண்பர்கள் சூழல் 3. ஊடகதாக்கம் 4. சமூக அமைப்பு
1. குடும்பச்சூழல்
இளைஞர்களை பாதிக்கம் காரணிகளில் ஒன்றாக கருதப்படுவது குடும்பச் சூழல். இந்த குடும்பச் சூழலனது ஒவ்வொரு இளைஞனுக்கும் மாறுபட்டதாக அமைகிறது. பெரும்பாலும் எதிர்மறையான புரிதல் கொண்டதாகவே இருக்கிறது. பல குடும்பங்கள் இளைஞனில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. அந்நத்த பருவத்திற்கு முன்புவரை எதைக் கூறினாலும் சரி என்று ஏற்றுக்ககொண்டு திகழ்ந்தவன் திடீரென ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விக்கனைகளை தொடுக்கும்போத பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் இந்த இளைஞனின் வளர்ச்சியைப் பற்றி கண்டுகொள்ளாமல் பெற்றோர்கள் தம் கடமையை தட்டிக் கழ்த்துவிடுகிறார்க்ள. அவனை கண்டுக்ககொள்ளாமல் விடுவதால் அவனை ஏற்றுக்கொள்ளும் உறவுமுறை எங்கே இருக்கிறது என்ற தேடலில் இறங்குகின்றான். இத்தேடலில் அவனுக்கு முதலில் ஆதரவு கொடுப்பது நண்பர்கள் சூழல். இச் சூழல் அவனது சுதந்தரத்தை மதிப்பதாக தோற்றமளிக்கம் கானல் நீராக பல வேளைகளில் அமைந்துவிடுகிறது.
2. நண்பர்கள் சூழல்
இளைஞனின் உறவுமுறைகளை பாதிக்கம் காரணிகளில் பெரிதும் பங்கு வகிப்பது நண்பர்கள் சூழல் எனலாம். ஏனென்றால் இந்த இளைஞனின் அனைத்துவிதமான தேடலுக்கு (குறிப்பாக தவறான தேடலுக்கு) துணை செல்லும் சாதனமாக அமைந்துவிடுகிறது. இதனால் குடும்ப உறவிலிருந்து விலகி, தன்னிச்சையாக செயல்படுபவனாக மாற்றிவிடுகின்றான். இந்தச் சூழலில் அவனுக்க குடும்ப உறுப்பினர்களின் வழியாக கூறப்படும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இந்த நிலை தம்மை விட்டுவிட்டு மாட்டின் வாலை பிடிக்கும்கதைக்கு ஒப்பாக அமைந்துவிடுகிறது. நண்பர்கள் சூழலில் பெரிதும் அவனை பாதிப்பதும் ஊடக தாக்கம்.
ஊடக தாக்கம்
இளைஞனை அவனது இலக்கினை மறக்கச் செய்யும் முக்கிய காரணிகளில் ஒன்றுதான் ஊடகம். தான் எந்த நிலையில் இருக்கிறோம்? எவ்வாறு செயல்படவேண்டும்? என்று சிந்திக்க எத்தணிக்கும் சமயத்தில் நீ இப்படித்தான் வாழ வேண்டும், செய்ய வேண்டும் என்ற தீர்வுகளை ஊடகங்கள் வழங்குகின்றன. இந்த ஊடகத்தின் தாக்கம் இளைஞனுக்கு மகிழ்ச்சியைத்தருவதால், அதன் தவறான வழிக்காட்டுதலை புரிந்து கொள்ளாமல் கண் இருந்தும் குருடனாக அதற்கு அடிமையாகி விடுகிறான். இதற்கெல்லாம் ஆணிவேர் என்னவென்று பார்க்கும்போது பல வேளைகளில் சமூக அமைப்புகளே திகழ்கின்றது.
நல் உறவுகளை வளர்த்துக்கொள்ள வழிமுறைகள்
இளைஞர்கள், தங்கள் நிலை உணரவேண்டும். நாளைய இந்தியாவின் தூண்கள் தாங்கள் என்ற உயர்ந்த உணர்வு வளர வேண்டும். இளைய தலைமுறையினரின் வழிகாட்டிகள் தாங்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நல்லதொரு சமூகத்தின் உருவாக்கும் கடமை தங்களது என்ற எண்ணம் வரவேண்டும்.
இறுதியாக
நாளைய தலைவர்களை உருவாக்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு என்று உணர்தல் வேண்டும். பெற்றோர்க்ள இளைஞர்களுக்க நண்பர்களாக இருந்து வழிக்காட்ட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தங்களின் சகொதர்கள் என்ற உணர்வுடன் தேவையான வழிக்காட்டுதலை வழங்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது எந்த ஒரு இளைஞனாலும் தன் இலக்கை உணர்ந்து சமூகத்தில் உள்ள நல்லவைகளை கண்டு தெளிந்து அதன் அடிப்படையில் தன்னை உருவாக்கிக்கொள்ள முடியும். நல் உறவுமுறையோடு வாழமுடியும்.

உறவு வாழ்வாகட்டும் வாழ்வு மகிழ்வாகட்டும்”.

கு. ஆரோக்கிய சாமி
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளைஞர்களும் உணர்வுகளும் (உளவியல் பார்வை)

உட்புகுமுன்

இன்றைய சமூகம் இளைஞர்களின் தகுதி குறைவுகளைச் சுட்டிக்காட் தாயராக இருக்கிறதே ஒழிய அவர்களை தகுதி படுத்த உயர்வுகளை புரிந்துகொளள் தயாராக இல்லை. காரணம் இளைஞர்கள் இறிவைத்தாண்டி உயர்வுகளின் கட்டுபாட்டுக்கள் முடங்கி போவதுதான் காரணம். இவர்களுக்கு தேவையான ஒன்று தமது உணர்வுகளைப் பற்றிய விழிப்பு. இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

உணர்வுகள் உயிருள்ளவை

இளைஞனின் வாழ்க்கையை அழகூட்டும் வண்ணங்கள் அவனது உணர்வுகளே. மனிதனின் உணர்வுதான் மற்ற உயிரினங்களில் இருந்த மனிதனை பிரித்துக்காட்டுகிறத. அப்படிப்பட்ட உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் அதன் விளைவாக உணர்வுகளை உரியமுறையில் உணரவும் வெளிப்படுத்தவும் இன்றைய இளைஞர்களை நமது கலாச்சாரம் அனமதிப்பதில்லை, இளைஞர்கள் தங்களத உணர்வு மாற்றங்களையோ சிக்கல்களையோ மனம் விட்டு பேசாமல் இருப்பதால் தேவையான விழிப்புணர்வும் அறிவும் வழிக்காட்டுதலும் இல்லாமல் போய்விடுகிறது.

இந்நிலையில் இளைஞர்கள் தடம்மாறி போவதுண்டு, அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடிய பருவம் இளைமைபருவம். பயம், கோபம், மகிழ்ச்சி, கவலை என நான்கு உணர்ச்சிகளை தாய் உணர்வுகளை இன்றைய உளவியலார் குறிப்பிடுகின்றனர். இளைஞர்களைப் பொறுத்த மட்டில் போதிய அளவு முதிர்ச்சி இல்லாததால் சில வேளைகளில் அளவுக்கு அதிகமாகவும் சில வேளைகளில் வெளிப்படுத்தப்படாமல் உணர்வுகள் இருக்க வாய்ப்புண்டு. எ.கா. பாலுணர்வு, நமது தமிழக பண்பாடு கற்றுக்கொடுத்த சில தவறான மதிப்பீடுகளால் இளைஞர்கள் பாலுணர்வு குறித்து சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது, பார்ப்பது போன்ற செல்பாடுகள் தவிர தங்களை தாங்கள் கட்டுப்படுத்தி பின்பு அதன் எதிர்விளைவுகளை சந்திக்கின்றனர். இவை இளைமைப்பருவத்தில ஏற்படும் இயற்கையான உணர்வு என்பதையும் உயர்வுகள் உயிருள்ளவை என்பதையும் உணர்தல் அவசியம்.

இளைஞர்கள் ஏன் உணர்வுகளை வெளிப்படத்த வேண்டும்?

இளைஞர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தாவிட்டால் மூன்று விதமான பாதிப்புகளை சந்திக்க கூடும்: 1. உடல் ரீதியான பாதிப்ப 2. மன ரீதியான பாதிப்பு

3. குடும்பம் மற்றும் சமூக உறவில் பாதிப்பு.

இளைஞர்கள் உணர்வுகளை ஏன் வெளிப்படுத்தவதில்லை?

இளைஞர்களின் உள்மனத்தின் இருண்டபகுதியில் பல நிகழ்வுகள் ஏக்கங்கள் எண்ணங்கள் பதிந்திருக்கின்றன. அதை வெளிப்படுத்த விரும்பாததற்கு காரணங்கள் பல

குற்றப்பழி உணர்வுகள் சில அந்தரங்க நிகழ்வுகள்

கடந்தகால தவறுகள், இன்னும் பல

இளைஞர்கள் உணர்வுகளை கையாள வழிமுறைகள்

இளைஞர்கள் உணர்வுகளை தகுந்த முறையில் கையாள கற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளப்படாத உணர்வுள் இளைஞர்களுக்கு எதிராக செயல்படும். இளைஞர்களின் வளர்ப்பு முறையாலும் கல்வி முறையாலும் உணர்வுகள் ஏற்றுக்கொள்ளபடாமல் போக ஏதுவாய் அமைகின்றன. இளைஞர்கள் உணர்வுகளை உண்மையாக உள்ள படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1. அடக்கி வைத்தல்: கோபப்படாதே! என்ற வார்த்தையும் இளம்பெண்கள் சத்தமாக சிரிக்கக் கூடாது, இளைஞர்கள் கண்ணீர் விடக்கூடாது போன்ற பெரியவர்கள் கண்டிப்ப இன்றைய இளைஞர்கள் மனத்தில் ஆழப்பதிந்து கோபப்பட வேண்டிய ஒரு சூழலில் கோபத்தை அடக்குவதும் அதனால் வரும் விளைவுகளை எண்ணி கட்டுப்படுத்துவதும் காணப்படுகிறது. இத்தகைய மனநிலை தவறு என்ற மனநிலைக்கு இன்றைய இளைஞர்களை வர வேண்டும். உணர்வுகளை தேவையான இடத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

2. முழுமையாக வெளிப்படுத்துதல்: இளைஞர்கள் உணர்வுகளை தன் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்து சரியான நேரத்தில் உரிய முறையில் வெளிப்படுத்த பழகிக்கொள்ள வேண்டம்.

3. பொறுப்படன் வெளிப்படத்துதல்: கோபத்தை உரிய முறையில் பொறுப்புடன் வெளிப்படத்துதல். இளைஞன் தன்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் அவனுக்கும், வெளிப்படுத்தக்கூடிய நபருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்கவேண்டும். சூழ்நிலையை மனதில் கொண்டு விவேகத்துடன் செயல்படவேண்டும். இதுவே மற்ற இரண்டைகாட்டிலும் சிறந்தது.

4. இளைஞர்களுக்கு தேவையான மனநிலை

உறவுகளை வளர்க்கம் உணர்வுகளைப்ற்றி ஆழமாக அறிதல் இளைஞனுக்கு அவசியம். வெளிப்படுத்தகூடிய உணர்வுகள், வெளிப்படுத்தகூடாத உணர்வுகள் பற்றிய புரிதலும் அவற்றிலிருந்து விடுதலை பெற வழிவகுத்தலும் இளைஞனுக்கு அவசியம்.

இளைஞன் தன்னை பற்றி முழுமையாக அறிந்து நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலை தேவை.

உணர்வுகளை நல்லது கெட்டது என பிரிக்கமுடியாது மாறாக அவை இளைஞனின் உள்ளிருக்கும் மனநிலைகளின் வெளிப்பாடே. நடிப்பதை கைவிட்டு இயல்பாக செயல்பட வேண்டும்.

எனது உணர்வுகள் எனக்குத் தெளிவாகும் போத பிறரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியும். உணர்வுகள் பாதிக்கப்படும் போது பிரச்சனைகள் பிளவுகள் ஏற்பட ஏதுவாகின்றது.

முதலும் முடிவுமாக

இன்றைய இளைய சமதாயம் பொய்யுணர்ச்சியைக் காதல் என்று காட்டும் மாயஉலகில் இருந்து விடுபட்டு வாழ முயல வேண்டும். காரணம் உணர்ச்சிகளில் ஆரம்பித்து உணர்ச்சிகளிலேயே முடிந்துவிடுகின்றது. காதல் அதையும் தாண்டி உணர்வுளில் ஆரம்பித்து, அறிவு வந்து முடிந்து வைப்பதாக இளைஞனின் செயல்பாடுகள் இருத்தல் அவசியம். சீரானமுறையில் சிந்தித்து அறிவுத்தெளிவு பெற வெண்டியவர்களாய் இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

வில்லியம்ஸ்

(இறையியல் முதலாம் ஆண்டு - 2005)

இளைஞர்களுக்காக ...

மாதுளையை பிளந்தால்தான் முத்துக்கள் உண்டு
மனவலிமையை நீ அளந்தால்தான்
முன்னேற்றம் உண்டு.

முட்டாளின் கையில் மோதிரமாய்
இருப்பதைவிட புத்திசாலி
போட்டுக்கொள்ளும் கால்
செருப்பாய் இருப்பது மேல் அல்லவா?

அடுத்தடுத்து வெட்ட வெட்டத்தான் வாழைமரம் கூட துளிர்க்கிறது
அடுத்தவன் மட்டம் தட்டதட்டத்தான்
வளர வேண்டுமென்ளு மனம் துடிக்கிறது. அப்படி
திட்டும்போதெல்லாம் உன்
அறிவை பட்டை தீட்டிக்கொள்
எதிரிகள் வார்த்தைகளை
கொட்டும்போதெல்லாம் காதில்
வாங்காதது போல காட்டிக்கொள்

எரிகின்ற விறகுகூட எரிந்துக்கொண்டே இருப்பதில்லை
அணைந்தால் அது சாம்பலாகிவிடுகிறது
எதிரிகள் படும் எரிச்சலைக்கண்டு
அஞ்சிவிடாதே!
எதிர்நீச்சல் அடித்தால் கரையேறிவிடலாம் மறந்துவிடாதே!

நம்மால் முடியுமா என்று முனக ஆரம்பித்தால்
மூட்டை பூச்சியை அடிப்பதுகூட கஷ்டம்தான்
நம்மால் முடியும் என்று நம்ப ஆரம்பித்தால்
வீரமற்றவன் கையில் வில்லே வைத்திருந்தாலும் கூட
விவேகம் உள்ளவன் கையில்
வில் இல்லாவிட்டாலும் கூட
சொல்லை வைத்தே வென்று விடுவான்.

ஆ. டோனி (இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளைஞர்களின் உளவியல்

ஏன் முன்னுரை?

இளைஞர்கள் ரொம்ப மோசம், பெரிசுகளை மதிப்பதே கிடையாது. ஏண்டா அம்பி, பொம்நாட்டிகளை கிண்டல் பணிறேலே- நீயெல்லாம் அக்கா? தங்கையொட பொறக்கலையா? மாடு மாதிரி வளர்திருகியென்னோ, னோக்கு அறிவில்லையா? என்று இறைஞர்களை பற்றி வசைபாடும் பழக்கம், இந்த காலத்து பிள்ளையாண்டாவை பார்த்து பாடிய பாடல் அல்ல. மாறாக, சாக்ரடீஸ் காலத்திலிருந்தே சொல்லப்படுகின்ற பல்லவிகள். இவையெல்லாம் உண்மையா? உண்மை எனில் என்னிடம் பத்து இளைஞர்களை தாருங்கள், நான் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறென் என்று சொன்ன விவேகானந்தரின் கூற்று பொய்யா? தன்னிடம் இருந்த அறிவை விட அன்பைக் கொண்டு உலகத்தை வென்ற 33-வயது வாலிபன் (இயேசு) சாதித்தது சாதனை இல்லையா? பிரான்ஸ் தேசத்தின் மகுடம் சாக்கடையில் கிடந்தது, அதை என் வாளால் வெற்றிக் கொண்டேன் என்று சென்ன இளைஞன் நெப்போலியன் வீரன் இல்லையா? அல்லது வெற்றிதான் பெறவில்லையா? இளமைப் பருவம் புரியாத புதிர் பருவம் என்று புரிந்து கொண்டால் போதும், “ஏன் இந்த முன்னுரை? என்ற உங்களில் பலர் முணுமுணுக்கத் தோன்றும்.

இளைஞர்கள் யார்?

உனக்கு 18 எனக்கு 20, கிச்சா வயசு-16, பிப்ரவரி-14, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், காதல், கடிதம், முகத்தில் அடிப்பட்ட விதையின் முதல் வார வளர்ச்சி, படியில் சாகசம், துவைக்க கூடாத ஜூன்ஸ், தன் தோழியிடம் மற்றவர் பேசினால் புகை வரும் காதுக்கள்… இரவு நேர பட்டாம் பூச்சி இதயத்தில். இன்னும் பல, பல, சேர்ந்த கூட்டு வடிவம் தான் நாம் கேட்கும் யார் இந்த இளைஞர்கள்? யார் வாலிபர்கள்? யார் காளையர்கள்?

என்ன எதிர்பார்க்கிறார்கள்?

“உன்னை பாடச் சொன்னதுக்கு, ஒரு கழுதையை பாடச் சொல்லியிரக்கலாம்”- என்று தலைமை ஆசிரியர் திட்டினாலும், தாய் தந்த உற்சாகத்தால் வானுயர வளர்ந்தவர்தான் இசைஞானி இளையராஜா. கல்லூரியில் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்த போதும் பெற்றொரின் அன்பான அணுகுமுறையால் உருவெடுத்தவர் தான் கவியரசு வைரமுத்து. ‘மண்டு, மக்கு’ என்று மார்க் அட்டை வந்த போதும் நம்பிக்கையோடு படிக்கவைத்தனர் பெற்றோர்கள். அதன் விளைவுதான் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் தோன்றினார். வணிகவியல் பாடத்தில் தேர்ச்சியரடயவில்லை, படிக்க அனுப்புவது வீண் என்று அவருடைய பெற்றோர்கள் நினைத்திருந்தால் இன்று The Father of Economics என்று அழைக்கப்படும் Keynes ஏது?

பெற்றோர்கள் மேற்பட்ட இந்த அன்பான அணுகுமுறை அவர்களுக்கு மட்டுமல்ல, நம் இளைஞர்களுக்கம் இன்று மிக, மிக அவசியம். இப்படிப்பட்ட அன்பை தான் பெற்றோர்களிடமும், சக நண்பர்களிடமும் அதிகமாய் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று சொல்லி அவனை சிறிது தூரத்திலேயே வைத்துப் பார்த்து மகிழ்கின்றோம். பத்து வயதில் சாதித்த போது கிடைத்த பாராட்டுகள் காளைப் பருவத்தில் சாதிக்கும் போது கிடைப்பதில்லை. இப்படி திறமைக்கு ஏமாற்றம் வரும் போது அதைக் கொடுக்கும் மற்றவர்களிடம் போகிறான். அதுதான் பின்பு காதல் கலாட்டா கல்யாணம் என்று முடிகிறது. அல்லது காதல்… கடற்கரை… கயிறு… கடைசி மூச்சு என்று தொடர்கிறது.

எப்படியும் வாழலாமா?

வாழலாம் என்று வாழ்பவர்கள் உலகத்தில் இருத்தல் என்ற நிலையில் இருந்து ‘இறந்து’ விடுகிறார்கள். இப்படிப்பட்ட இளைஞர்களிடம் எப்படி இருக்கிறாய் என்று கேட்டால், ஏதோ ‘இருக்கிறேன்’ என்பார்கள் உலகத்தில் வாழ்கல் என்ற நிலையிலிருந்து வளர்ந்து காண்ப்படுகிறார்கள். இந்த நிலையில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையோடு. ஆன்ம பலத்தோடும் இருப்பார்கள்.

எது கைகாட்டி?

“இருத்தல்” நிலையில் உள்ளவர்களுக்கு இன்று கைகாட்டியாக இருப்பது ‘திரைப்படம்’. இவர்கள் வெறும் கண்ணுக்கு மட்டும் தெரியும் காணல் நீpரை நம்பி., கையில் இருக்கும் சோடாவை உடைத்துவிடுவார்கள். உன்னையே நீ அறிந்து விடு – சாக்ரடீஸ், உன்னையே நீ மறந்து விடு (தாகூர்), உன்னையே நீ இழந்து விடு (இயேசு), போன்ற வார்த்தைகளையெல்லாம் கிடப்பல் வைத்து விட்டு, உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு என்று துதி பாடுவார்கள். இப்பழப்பட்ட இளைஞர்களிடம் உயர்ச்சி மேலோங்கி நிற்குமே தவிர மனித உயர்வு இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். எப்படி இறந்து போனவனின் செருப்புக்காக காத்திருப்பவன் வெறும் காலுடன் நடக்க வேண்டி வருமோ, அதே போல் தான் இருத்தல் நிலையில் உள்ளவர்களின் வாழ்வும் இருக்கும்.

‘வாழ்தல்’ நிலையில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையே வழிகாட்டி. தோல்வி என்பது முடிவு அல்ல மாறாக வெற்றியின் ஆரம்பம். இவர்கள் முயற்சியை முதுகில் கட்டிக்கொண்ட முயல்பவர்கள். வீட்டில் வளர்க்கும் தென்னை மரம் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து போனால் தான் தோல்வியே தவிர, இடி இடித்து கருகினால் தோல்வி அல்ல என்று புரிந்து வைத்திருப்பவர்கள் தோல்வி நிலையென நினைத்தால் கஜினி முகமது, தாமஸ் ஆல்வா எடிசன், போன்றவர்கள் சாதித்திருக்க முடியுமா? தென்னைமரத்திலிருந்து ஒரு கீற்று விழுந்தால் அது தளர்ச்சியல்ல மாறாக வளர்ச்சியே ஆகும். எனவே தன்னம்பிக்கையெ இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும். அவ்வாறு வாழும் போது காகித கப்பல் கூட இவர்களை கரைசேர்க்கம் என்று வாழ்த்துவோம்.

வரப்புயர நீர் உயருமா?

ஒரு முறை புனித ஜான் போஸ்கோவின் தாய் தன் மகனிடம், உன்னைச் சுற்றி எப்போதுமே கெட்ட நண்பர்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள், எனவே நீ அவர்களோடு சேரக்கூடாது என்றார்கள். அதற்கு போஸ்கோ, “அம்மா நான் அவர்களோடு இருக்கும் போது அவர்கள் எந்த தவறும் செய்வதில்லை” என்றார். இங்கு நான் வரப்புயர நீர் உயர்ந்ததைக் காண்கிறேன். மாற்றம் என்பது மானிட தத்தவம். மாற்றத்தை புதுமையை விரும்பாத யாரையும், எதையும் கணக்கில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

“ஒரு இலையுதிர் காலத்திற்கு பின்பு தன்னை மாற்றிக் கொள்ளாத புதுப்பித்துக்கொள்ளத் தெரியாத மரத்தை, வானம் தன் எண்ணகையில் வைப்பது கிடையாது. அற்று நீராலும் மழை நீராலும், ஊற்று நீராலும் தன்னை புதுப்பிக்கத்தெரியாத நதியை மனிதன் பிளாட் போட்டு விற்று விடுகிறான். இதில் இளைஞனான நீயும் நானும் என்ன விதிவலக்கா? எனவே இளைஞர்களே உங்கள் மனத்தை நன்கு ஆராய்ந்து, அறிந்து மாற்றுங்கள், அப்போது தான் பூவோடு சேர்நத நாரும் மணக்கும் என்பது போல், உன்னோடு சேர்ந்த இளைஞர்கள் வாழ்வ மணம் வீசும். ஒரு முறை தோன்றினாலும் மின்னலாகத் தோன்றாமல் இடியாகத் தோன்றுவோம். இமயத்தைத் தொடுவோம். இறுதிவரை இளமையோடு வாழ்வோம். தாழ்வு மனப்பான்மையை களைந்து விட்டு தன்னம்பிக்கையோடு வாழ்வோம்.

ஆரோக்கிய தாஸ் 
(இறையியல் முதலாம் ஆண்டு - 2005)

முரண்பாடு

பிடித்தமான பாடலை மிதமாக வைத்து
பிடித்த கவிஞனின் நூலில் ஆழ்நிதிருக்கையில்
கதவுத் தட்டும் பொழுது சுர்ரென கோபம் வருகிறது
படிக்கும் கவிதை எண்ணவோ பொறுமையைப் பற்றி!
எப்படியாவது முதலிடம் பெறவேண்டும்…
நாளையக் கவிதைப் போட்டியில்
சகிப்புத்தன்மை என்ற தலைப்பில்…
தாத்தா! தள்ளிப் போய் இருமக்கூடாதா?
வயசான காலத்துல எதுக்கு கிடக்கிற!

பாஸ்டின் பிரிட்டோ
(தத்துவவியல் 2ம் ஆண்டு - 2005)

இளையோர் வழிகாட்டி --- திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்.

எனது இனிய இளைய நண்பர்களே உங்களுக்கு நான் விடுக்கும் செய்தி ஒன்று உண்டு அதனை உங்கள் உற்றார் உறவினரோடு, குடும்ப கோத்தரத்தோடு, நண்பர்களோடு மற்றும் உங்களுக்கு செவிசாய்ப்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். அச்செய்தி யாதெனில், நான் உங்கள் மேல் அபார நம்பிக்கை வைத்துள்ளேன், இளைஞர்களாகிய நீங்களே எனது வலிமை, உங்களோடு எனது எதிர்காலக் கனவுகளையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசையாய் இருக்கிறேன்.
இது நமது மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இளைஞர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையின் இறுதி பகுதி.

பல திறமைகளைக் கொண்டு இறைவனின் ஆசீரோடு அகில உலகத் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒரு மாபெரும் மனிதர். இளைஞர்களோடு நெருங்கி பழகுவது என்பது அவரது சிறப்பியல்களில் ஒன்று. இவ்வியல்பே அவருக்கு இளைஞர்களின் திருத்தந்தை என்ற சிறப்பைத் தந்தது. இச் சிறப்புக்கு அவர் உரியவரே. ஏனெனில் அவர் இளையோர்கிளின் வாழ்க்கை இரகசியங்களையும் இதய நாதங்களையுமத் நன்களிந்தவர். அதோடு மட்டுமில்லாது அவர்களின் தந்தையாகவும் நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் என்பது மிகையாகாது.

இளைஞர்கள் மீது திருத்தநதை நம்பிக்கை வைத்தற்கு காரணம் இளைஞர்கள் இயேசுவால், அன்பு செய்யப்பட்டதோடு அல்லாமல் அவரிடம் நம்பிக்கைகுரியவர்களாகவும் திகழ்ந்ததால்தான். எனவேதான் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுது வாழ்வில் உலகத்திருச்சபையின் வசந்த காலத்தை எதிர்நோக்கினார். இளைஞர்களை சந்திப்பதில் ஆர்வமும் மகிழ்ச்சியும் கொணட்டிருந்தார். அவர்களோடு பேசியும் அவர்கள் சொல்வதைக் கேட்டும், அவர்களின் மகிழ்ச்சி துக்கங்களில் பங்கு கொண்டார். அவர்களிடம் உலகை மனிதனுக்குதந்த வகையில் மாற்றவல்ல வலிமை இருப்பதை கண்டார்.

எனவே தான் இளைஞர்களிடம் “திருச்சபையில் கடவுளின் திட்டம் நிறைவேற்ற நீங்கள் தேவைப்படுகிறீர்கள் திருச்சபையின் எதிர்காலம் கடவுளுடைய ஆசீரோடு உங்களது தன்னார்வ ஒத்துழைப்பை பொறுத்து அமையும் என்று இறைஞர்களை உற்வாகப்படுத்தினார். மேலும் அவர்களிடம், “அன்பு இளைஞர்களே இவ்வுலகில் தலைவிரித்து தாண்டவமாடுகின்ற தீய நாட்டங்களைக் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள் அவைகளினால் நீங்களும் தீய வழியில் போகக்கூடும், இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்களுது மனசாட்சியை மழுங்கடித்து விட்டு உண்மையான மகிழ்ச்சியை போதைப் பொருட்களிலும் வன்முறைகளிலும் பொருளாசைகளிலும் தேடுகின்றனர்.”

“இச்சூழ்நிலையில் உங்களுக்கு உகந்த வழிகாட்டியாக ஒருவர் இருக்க முடியுமென்றால் அது இயேசு மட்டுமே. கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் மகத்துவத்தையும் பெருந்தன்மையும் நீங்கள் இயேசு கிறிஸ்துவில் கண்டு கொள்ளலாம். உங்களது வினாக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் விடையளிப்பவர் இயேசு ஒருவரே. அவரே தந்தையிடம் உங்களை அழைத்துக்கொண்டு செல்ல இருக்கிறார். இவ்வாறு அழைக்கம் இறைவனின் குரலுக்கு செவிமடுத்து அவர்மேல் நம்பிக்கை கொண்டு வாழும் போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.”

ஜெரோம் பால்ராஜ்
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளையோர் ஆன்மீகம்

இன்றைய இளைஞனின் ஆன்மீகத்திற்கு ஓர் சவால்

முன்னுரை

எது ஆன்மீகம்? என்ற கேள்விக்கு இன்றைய மனிதர்கள் தரும் பதில்கள்
ஆன்மீகம் என்பது வாழ்வின் இறுதிப் பெருள்சார்ந்த அனுபவ வெளிப்பாடு
ஆன்மீகம் என்பது அநீத அமைப்பு சித்தைகளை உடைக்கும் புதுரசம்.
ஆன்மீகம் என்பது ஒடுக்கப்பட்ட மனித மாண்பை பொங்கி எழச்செய்யும் புளிகாரம்.
ஆன்மீகம் என்பது அடித்தள மக்களோடு கரையும் உப்பு.

மேலும் ஆன்மீகம் மானிடத்தை வாழவைக்கும் உந்து சக்தி. ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு ஆன்மீகம் என்னவெனில் வரலாற்று இயேசுவின் ஆவியை இன்று நம்மில் உடலெடுக்கச் செய்யும் வாழ்வு. இந்த வார்த்தைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்தியவர் அன்னை கன்னிமரியாள். இன்றைய இளைஞர்களின் ஆன்மீக வாழ்விற்கு இயேசுவே ஊற்று. அன்னை கன்னிமரியாள் இயேசு என்னும் ஆன்மீக ஊற்றுக்கு நம்மை அழைத்து செல்பவர்.

கிறிஸ்துவின் ஆன்மீகம்

இதோ உம் திருவுள்ளத்தை நிறைவேற்ற வந்து விட்டேன் (எபி 10,7)
என்று தன்னையே இறைவனுக்கும், மக்களின் விடுதலைக்கும் அர்பணித்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசுவின் ஆன்மீக வாழ்வில் மூன்று நிலைகளை நாம் பார்க்கலாம்.
1. அறிதல்: தனது திருமுழுக்கின் வாயிலாக தான் யார்? தனது பணி என்ன? என்று அறிந்து கொள்கிறார்
2. தெளிதல்: இசையால் இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளின் மூலம் தெளிவு பெற்றார்.
3. கையளித்தல்: தான் யார் என்று அறிந்த இயேசு இறைவாக்கினர் இசையாஸ் ஏட்டுச்சுருளில் மூலம் தெளிவுபெற்ற இயேசு தன் விருப்பப்படி அல்ல மாறாக வானத தந்தையின் விருப்பப்படி கையளிக்க வேண்டிய சூழ்நிலையிலும் இறைவனின் திருவுள்ளத்திற்கு கீழ்படிந்து தன்னையே சிலுவையில் பலியாக கையளிக்கிறார். இதுவே உண்மையான ஆன்மீகம்.

இயேசுவின் வாழ்வில் நாம் நான்கு வகையான ஆன்மீகத்தைப் பார்க்கலாம்.
1. மரபு ஆன்மீகம்: மறு உலக வாழ்வு மற்றும் தனிமனித வாழ்வை மையமாக கொண்டு வாழ்வது மரபு ஆன்மீகம். மறு உலக வாழ்வின் சொந்தக்கதரரான இயேசு, இவ்வுலக தனிமனித வாழ்வில் எல்லோரும் வியக்கதக்க வகையில் பாவம் செய்யாமல் வாழ்ந்தவர்.
2. போராட்ட ஆன்மீகம்: மனித நேயத்திற்காகவும் மனித விடுதலைக்காகவும் தன்னையே அர்ப்பணிக்கும் செயல் தான் போராட்ட ஆன்மீகம். இதை இயேசுவின் பணிவாழ்வு மிகவும் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.
3. இறைவாக்கினன் ஆன்மீகம்: நீயும் வாழ்ந்திடு பிறரையும் வாழ விடு. இந்த இரண்டு நிலையிலும் தடையாக உள்ளவர்களை சின்னாபின்னமாக்கும் செயல் இறைவாக்கினன் ஆன்மீகம் இவ்வாறாக எல்லோரும் நலம் வாழ வழி வகுத்தவர் தான் இயேசு.
4. வாழ்வியல் ஆன்மீகம்: சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அறநெறி வேண்டியும், உண்மைக்காக தன் வாழ்வை பணயம் செய்து, தன்னுயிரையே தியாகம் செய்வதுதான் வாழ்வியல் ஆன்மீகம். இதை நிறைவேற்றியவர் கிறிஸ்து ஒருவரே. இன்றைய இளைஞர்கள் ஏதாவது ஒருவகையைத் தேர்ந்து தெளிந்து, சமுத்துவ சகோதரத்துவ சமுதாயம் உருவாக்க இறையாட்சியைக் கொணர தன்னையே தன்னுயிரயே கையளிக்க முயற்சி செய்யும் போது கிறிஸ்துவின் ஆனிமீகத்தில் நாம் பங்கு பெறலாம். இது இன்றைய இளைஞனுக்கு இயேசு அளிக்கும் சவால்? இளைய சமுதாயமே உனது பதில் என்ன?

கன்னி மரியாளின் ஆன்மீகம்

1. இறைவனின் வார்த்தையைக் கேட்டல்: வானதூதன் வழியாக வந்த இறைவார்த்தைக்கு செவிமடுத்தார்.
2. இறைவர்த்தையை கேள்வி கேட்டல்: தெளிவு பெற தைரியமாக இது எங்களம் நிகழும் என்று வினா எழுப்பியவர் அன்னை மரியாள்.
3. இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளல்: தன்னுடைய வினாவிற்கு விடைபெற்ற அன்னை மரியாள் இளைவார்தையை ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாக இவ்வுலக மீட்பரை கருவில் தாங்க மடியில் சுமக்க, அவரது அரியணையில் விண்ணுலக மண்ணுலக அரசியாக முடிசூட்டப்பட தகுதி பெற்றார்.

இன்றைய இளைய சமுதாயமே, மரியாளின் ஆன்மீகம் நம்முடைய ஆன்மீக வாழ்விற்கு ஓர் சவால். நமது வாழ்வில் இறைவார்த்தைக்கு செவிமடுக்கிறோமா? இறைவார்த்தைய கேள்வி கேட்கிறோமா? இறைவார்த்தையை ஏற்றுக்கொள்கிறோமா?

அன்னை மரியாள் விடுக்கும் சவாலுக்கு உனது பதில் என்ன?

முடிவுரை

ஆன்மீகமா? வாழ்வின் இறுதிகட்டத்தில் தேட வேண்டிய ஒன்று என்று உலக இன்பங்களில் திளைசகக
முற்படும் போது நாம் பாவம் என்ற பாதாளத்தில் தள்ளப்படுகிறோம். ஆன்மீகம் மானிடத்தை வாழ வைக்கும் உந்து சக்தி. ஆகவே வரலாற்று இயேசுவின் ஆவியை இன்று மாறுவோம். அநீத அமைப்பு சித்தைகளை உடைக்கும் புதுரசமாக மாறுவோம். ஒடுக்கப்பட்ட மனித மாண்பை பொங்கி எழச்செய்யும் புளிக்காரமாக மாறுவோம். .ப்படிப்பட் ஆன்மீகம் நம்மில் உருவெடுத்தால் இறையாட்சி நம்மில் மலரும். அநீத அழியும். இயேசு நம் உள்ளங்களில் ஆட்சி செய்வார். அப்போது நமது ஆன்மீகம் இந்த மானுடத்தை வாழவைக்கும்.

2. இயேசுவின் வழியில் இளையோர் வழிகாட்டி

தனித்து வாழும் மனிதன் தன்னிறைவு அடைவதில்லை.
கிறிஸ்துவ மதிப்பீடுகளில், மனித உறவு நிலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. மனிதன் மனிதனோடு கொள்ளும் உறவு பல நிலைகளில் மாறபடுகின்றது. குழுக்களோடும் தனி மனிதர்களோடும் உறவு கொள்ளுதல் என்பது, கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஓர் கலை. உறவுநிலைகள் இப்படித்தாள் இருக்க வேண்டும் என அன்றே வாழ்ந்து காட்டியவர் இயேசு பிறருடன் நல் உறவை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு இறைமகன் இயேசு பின பற்றிய 10 வழிகாட்டுதல்கள்.
• இயேசு எப்போதும் உண்மையுடன் இருந்தார்.
• எல்லோருடனும் ஒத்திருந்தார்.
• எல்லோருக்கும் செவிமடுத்தார்.
• நம்பிக்கை இழந்தோருக்கு உறுதியூட்டினார்.
• பிறருடைய ஆலோசனையை வரவேற்றவர்.
• ஒவ்வொருவரையும் அன்பு செய்தார்.
• தேவையானதை கேட்க தறங்காதவர்.
• அன்பிற்காய் தன்னையே தந்தவர்.
• தற்பெருமைக்காக அல்ல பிறர் நலனுக்காய் வாழ்ந்தார்.
இயேசு இவ்வுலகில் வாழ்நத போது இறைவனோடும் மனிதனோடும் நல்லுறவுக் கொண்டிருக்க இந்த பத்து வழிகளையும் கையாண்டார். எல்லோருடனும் நாமும் நல்லுறவு வளர்த்துக் கொள்ள இயேசுவின் இந்த வழிகாட்டுதலை நம்வாழ்வில் செயல் படுத்துவோம்.

ஜோமிக்ஸ் - இறையியல் மூன்றாம் ஆண்டு -2005

இதோ உங்களுக்காக…..

இளையோரது பணி சிறக்க வேண்டுமெனில் - ஒவ்வொரு இளைஞனும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பிரியமானவர்களே!

இன்றைய இளைஞர்கள் நமது நாட்டின் ஏன் நமது திருச்சபையின் கண்களும் கூட மாறிவருகின்றன காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கம் இளைஞர்களை என்றுமே மாறாத இறைவன் அருளிய வழியில் நடத்தி செல்வது நமது கடமை. இன்றைய உணர்வுகள், எண்ணங்கள், ஏக்கங்கள், எதிர்பார்புகள், அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். திருப்பலி மற்றும் பங்கு பணிகளில் ஆர்வமுடன் பங்கெடுக்க முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் நமது பங்கு ஆன்மீகத்தில் மறுமலர்ச்சி அடையும். இளையோர் வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக இறைவன் விரும்பும் வாழ்வாக அமையும்.

இன்றைய இளைவோருக்கு நம் தத்தவங்கள் தேவையில்லை தேவையெல்லாம் நம் சக தோழமைதான். எனவே நமது தோழமையால் அவர்களை புரிந்துக்கொண்டு அவர்களை வழிநடத்த குருக்கள் மற்றும் குருமாணவர்களாகிய நாம் முன்வர வேண்டும்.
இந்தப்பணியில் எண்ணற்ற சவால்கள் நம்மை வசந்திக்கும், எண்ணற்ற சவால்களை நாமும் சந்திப்போம். இந்த தருணத்தில் உங்களுக்கு உதவிட இந்த “இளையோர் வழிகாட்டி” உங்களோடு இருக்க எங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து இந்த வார்த்தைகளை வாழ்வாக்கும் போது உங்கள்பணி சிறக்கும்.

இறுதியாக இந்த “இளையோர் வழிகாட்டி” நூல் வெளிவர உதவியாக இருந்த நம் மறைமாவட்ட ஆயர், இளங்குருமட அதிபர், அருட்தந்தையர்கள், சக சகோதரர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அமைதி அரசு
முதலாம் ஆண்டு இறையியல் - 2005