மாதா பாடல் - உம்மைத் தேடி வந்தேன்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாருமம்மா-2


1
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலை காத்தாய்-2
பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்ததாய்(2)- உம்மை
2
கடல் நீரும் போல உன் கோயில் காண‌
அலையாக வந்து உன் பாதம் சேரும்-2
உலகாளும் தாயே உனை பாடி வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா(2)- உம்மை
3
மலடான மங்கை மடிமீது மகனை
மகிழ்ந்தாடச் செய்த மகிமையின் தாயே-2
குருடானேன் உன்னை கரங்கூப்பி நின்றால்
அருளாகி எனக்கு ஒளி தாரும் தாயே(2)- உம்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக