இதோ உங்களுக்காக…..

இளையோரது பணி சிறக்க வேண்டுமெனில் - ஒவ்வொரு இளைஞனும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பிரியமானவர்களே!

இன்றைய இளைஞர்கள் நமது நாட்டின் ஏன் நமது திருச்சபையின் கண்களும் கூட மாறிவருகின்றன காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கம் இளைஞர்களை என்றுமே மாறாத இறைவன் அருளிய வழியில் நடத்தி செல்வது நமது கடமை. இன்றைய உணர்வுகள், எண்ணங்கள், ஏக்கங்கள், எதிர்பார்புகள், அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். திருப்பலி மற்றும் பங்கு பணிகளில் ஆர்வமுடன் பங்கெடுக்க முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் நமது பங்கு ஆன்மீகத்தில் மறுமலர்ச்சி அடையும். இளையோர் வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக இறைவன் விரும்பும் வாழ்வாக அமையும்.

இன்றைய இளைவோருக்கு நம் தத்தவங்கள் தேவையில்லை தேவையெல்லாம் நம் சக தோழமைதான். எனவே நமது தோழமையால் அவர்களை புரிந்துக்கொண்டு அவர்களை வழிநடத்த குருக்கள் மற்றும் குருமாணவர்களாகிய நாம் முன்வர வேண்டும்.
இந்தப்பணியில் எண்ணற்ற சவால்கள் நம்மை வசந்திக்கும், எண்ணற்ற சவால்களை நாமும் சந்திப்போம். இந்த தருணத்தில் உங்களுக்கு உதவிட இந்த “இளையோர் வழிகாட்டி” உங்களோடு இருக்க எங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து இந்த வார்த்தைகளை வாழ்வாக்கும் போது உங்கள்பணி சிறக்கும்.

இறுதியாக இந்த “இளையோர் வழிகாட்டி” நூல் வெளிவர உதவியாக இருந்த நம் மறைமாவட்ட ஆயர், இளங்குருமட அதிபர், அருட்தந்தையர்கள், சக சகோதரர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அமைதி அரசு
முதலாம் ஆண்டு இறையியல் - 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக