முரண்பாடு

பிடித்தமான பாடலை மிதமாக வைத்து
பிடித்த கவிஞனின் நூலில் ஆழ்நிதிருக்கையில்
கதவுத் தட்டும் பொழுது சுர்ரென கோபம் வருகிறது
படிக்கும் கவிதை எண்ணவோ பொறுமையைப் பற்றி!
எப்படியாவது முதலிடம் பெறவேண்டும்…
நாளையக் கவிதைப் போட்டியில்
சகிப்புத்தன்மை என்ற தலைப்பில்…
தாத்தா! தள்ளிப் போய் இருமக்கூடாதா?
வயசான காலத்துல எதுக்கு கிடக்கிற!

பாஸ்டின் பிரிட்டோ
(தத்துவவியல் 2ம் ஆண்டு - 2005)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக