இறைவனைப்புகழும் அன்னை மரியா

விறகு வெட்டி ஒருவன் இருந்தான். வெட்டிய விறகை விற்று வாழ்க்கை நடத்தி வந்தான். அன்றாடம் கிடைக்கும் விறகுக்காக இறைவனைப்புகழ்ந்து வந்தான். உணவிற்காக, உடைக்காக, உறைவிடத்திற்காக இறைவனைப் புகழ்ந்து வந்தான். தன் மனைவிக்காக, மக்களுக்காக இறைவனைப்புகழ்ந்து வந்தான. ஒரு நாள் இப்படி இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தபோது மேலிருந்து மலர்கள் அவன் மீது பொழியப்பட்டன. ஏறெடுத்துப்பார்த்தான். ஆயிரக்கணக்கானோர் மலர்களை தூவிக்கொண்டிருந்தார்கள். “நீங்கள் யார்?” என்று கேட்டான் விறகு வெட்டி. “நாங்கள் கடவுளுடைய சம்மனசுக்கள்” என்றார்கள். “என் மீது ஏன் மலர்களை தூவுகிறீர்கள்? நான் கடவுளை ஒன்றும் கேட்கவில்லையே” என்றான் விறகு வெட்டி. “அதற்காகத் தான் உன்மீது மலர்களை தூவச்சொன்னார் கடவுள். உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் நீ ஒருவன் தான் எதையும் கேட்டதில்லை. மற்றவர்கள் எல்லாம் பட்டியல் போட்டு கடவுளை கேட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். நீயோ எதையும் கேட்டதில்லை. எனவே தான் இறைவன் மகிழ்ந்து உன்னைப் பெருமைப்படுத்தினார்” என்றார்கள். உண்மைதான். இறைவனைப் புகழப் புகழ நாமும் உயர்த்தப்படுவோம்.

இதனைத்தான் கன்னி மரியாளும் செய்தாள். கன்னிமரியாள் காலமெல்லாம் இறைவனை புகழ்ந்து வந்தாள். தொடக்கம் முதல் இறுதி வரை கடவுளைப் புகழ்ந்து கொண்டே இருந்தாள்.

“என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து என் இதயம் களிகூர்கின்றது. ஏனெனில் எனக்கு அரும்பெரும் செயல்கள் புரிந்துள்ளார்” என்று இறைவனைப் புகழ்ந்து பாடினார். அன்னை அவர்கள் மங்களகரமான அந்த மங்களவார்த்தை செய்தியை கேட்டபோது மட்டும் மகிழ்ச்சியால் துள்ளி, பெருமிதத்தில் மிதந்து, பாடி அப்படியே அமர்ந்துபோகவில்லை. மாறாக அன்னை அவர்களின் வாழ்வின் ஒவ்வொருநொடிப்பொழுதும் ஒவ்வொரு அங்க அசைவுகளும் இறைவனைப் புகழ்ந்த வண்ணமாக இருந்தன என்று சொன்னால் அது மிகையாகாது.

இயேசுவின் பிறப்பை கபிரியேல் வானதூதர் முன்னறிவித்தபோது சொன்ன வார்த்தைகள்: அவர் பெரியவராய் இருப்பார். உன்னதக்கடவுளின் மகன் எனப்படுவார். தாவீதின் அரியணையை பெறுவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது. ஆனால் நடந்தது, குழந்தையை பெற்றடுத்து மாட்டுத்Pவன பெட்டியில் கிடத்த வேண்டியிருந்தது. அதற்காக அன்னை கடவுளை சபிக்கவில்லை. அந்த நேரத்திலும் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்காமல் மகிழ்ச்சியோடு இறைவனை புகழந்து இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல: திடீரென ஒருநாள் வானதூதர் மரியாளுக்கும் சூசைக்கும் கனவில் தோன்றி குழந்தையை ஏரோது கொல்ல தேடுகிறான். நீ எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடிச் செல்லும் என்ற செய்தியை கேட்டு சற்று கலங்கிப்போனாலும் அந்த நேரத்திலும் இறைவனின் திட்டம் என்று இறைவனைப் புகழ்ந்திருக்க வேண்டும்.

இவ்வாறாக கன்னி கணவனில்லாமல் கருத்தரித்த போதுமஇ; இறைவனை உலகிற்கு கொண்டு வந்தபோதும் இருந்த சூழலைக்கண்டு இடிந்துபோய் விடாமல் இருந்தபோதும் தன் மகனை புத்திமாறிப்போனவனென்று ஊரார் ஏசிய போதும் கொடுமையான கேவலமான மரத்தை தன் மகன் சுமந்துபோனபோதும் கழுமரத்தின் அடியில் நின்று அந்த துன்பத்தை ஏற்ற போதும் இறைவனின் சித்தத்துக்கு அடிபணியும் வகையில் வரிசையாக தன் வாழவில் இன்பம் துன்பம் உயர்வு தாழ்வு எது வந்தாலும் எல்லாம் இறைவனுக்கு என்று வாழ்ந்தவள் நம் அன்னை மரியாள்.

இன்பத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது இயல்பானது. ஆனால் துன்பத்தில் இறைவனுக்கு எவ்வாறு நன்றி செலுத்த முடியும்? துன்பத்திலும் மரியாள்: தம் அழைத்தலில் பின்வாங்கவில்லை. மரியாள் சிலுவை அருகே நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:25). கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுவுமே அவரைப் பிரிக்க முடியவில்லை (உரோ 8:35).

மோயீசன் செங்கடலைக் கடந்த பிறகு தன் தங்கை மரியத்துடன் கடவுளைப் புகழ்ந்து நடனமாடுகிறார். திருப்பாடல்கள் 150ல் ஏறத்தாழ 100க்கு மேலுள்ள திருப்பாடல்கள் எல்லாம் இறைவனைப்புகழ்வதாகவே அமைந்துள்ளது. இப்படி புகழ்வது என்பது உயரிய நிலை.

தூய லூக்கா தமது நற்செய்தியில் மக்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர் என்று பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

+ மரியா இறைவனைப் போற்றுகின்றார் (லூக் 1:47): செக்கரியா இறைவனைப் போற்றுகின்றார் (லூக் 1:68): சிமியோன் இறைவனைப் போற்றுகின்றார் (லூக் 2:28).
+ முடக்குவாத நோயினின்று குணமடைந்தவர்… கடவுளைப்போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டிற்குப் போனார். அதைக் கண்ட யாவரும் மெய் மறந்தவராய்க் கடவுளைப் புகழ்ந்தனர்” (லூக் 5: 25-26).
+ நயீன் ஊர்க் கைம்பெண்ணின் இறந்து போன மகனை இயேசு உயிர்பெற்று எழச்செய்தபோது அனைவரும் கடவுளைப் போற்றிப்புகழ்ந்தனர் (லூக் 7:16).
+ பதினெட்டு ஆண்டுகளாக நிமிரமுடியாமல் கூன் விழுந்த நிலையில் இருந்த பெண் குணமடைந்தபோது, அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப்புகழ்ந்தார் (லூக் 13:13).
+எரிக்கோவில் பார்வையற்ற ஒருவர் இயேசுவால் மீண்டும் பார்வை பெற்றபோது கடவுளைப் போற்றுகிறார். மக்கள் யாவரும் கடவுளைப் புகழந்தனர் (லூக் 18:43).

இயேசுபெருமானின் வாழ்வும் விண்ணகத்தந்தையைப் புகழ்வதாகவே இருந்தது.  தாம் அனுப்பிய எழுபத்திரண்டு சீடர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்த பல்வேறு புதுமைகளைப் பற்றித் தம்மிடம் கூறியபோது, இயேசு இறைவனைப் போற்றினார் (லூக் 10:21). ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தபோதும் (மாற்6:41), எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுடன் பந்தி அமர்ந்த போதும் (லூக் 24: 30), இயேசு கடவுளைப் போற்றினார்.

• இயற்கையும் இறைவனைப்புகழ்கின்றது
• கதிரவன் தன் கிரணக் கைகளால் கடவுளைத் தொழுகிறான்.
• கடல் தனது அலைகளால் ஆர்ப்பரித்து ஆண்டவரைப் போற்றுகிறது.
• மரங்கள் தங்கள் பூக்களைத் தூவித் தூவி அந்தத் தூயவனைத் துதிக்கின்றன.
• நிலம், நீர். காற்று, நெருப்பு, வானம் ஆகிய ஐம்பெரும் பூதங்களும் தத்தம் தொழிலைச் செய்து தங்கள் தலைவரைப் போற்றுகின்றன.

அவ்வாறிருக்க, பகுத்தறிவுடைய மனிதர் மட்டும் கடவுளைப் போற்றாதிருப்பது முறையாகுமா?

இரவில் புகைவண்டியில் பயணம் செய்த ஓர் அருட்சகோதரி நன்றாகத் தூங்கி விட்டார். அவரை டி. டி. ஆர் எழுப்பி ‘டிக்கட்’ கேட்டபோது அவர் கண்களை மூடிய வண்ணம் முழுந்தாளிட்டு சிலுவை அடையாளம் வரைந்து, “இயேசுவின் திரு இருதயமே! என் கண், காதுகளையும் , வாய் இருதயத்தையும் என்னை முழுவதும் உமக்குக் காண்pக்கையாகக் கொடுக்கிறேன்” என்றார். டி. டி. ஆர் சிரித்துக்ககொண்டு “சிஸ்டர் எனக்கு அதெல்லாம் வேண்டாம். டிக்கட்டை மட்டும் கொடுங்க, போதும்” என்றார். அப்போதுதான் அந்த அருட்சகோதரிக்குச் சுயநினைவு வந்தது!

நம்மில் பலர் கிளிப்பிள்ளை போன்று ஒருசில செபங்களைச் சொல்கிறோம். அவை பெரும்பாலும் நம் உதட்டிலிருந்துதான் வருகின்றன. உள்ளத்திலிருந்து வருவதில்லை. இறைவாக்கினர் எசாயாவை மேற்கோற் காட்டி இயேசு கிறிஸ்து “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகுதொலைவில் இருக்கிறது” (மத் 15:8) என்று கூறிப் போலியான வழிபாட்டைக் கண்டனம் செய்கிறார்.

இறைவனைப் போற்றுவதும் அவருக்கு நன்றி செலுத்துவதும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்: ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலாது. நற்செய்தியில் பல இடங்களில் இயேசு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார். ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தபோது, ஏழு அப்பங்களையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (மாற் 8:6). இலாசரை உயிர்த்தெழச் செய்யுமுன் இறைவனுக்கு நன்றி கூறுகிறார் (யோவா 11:4). குணம் பெற்ற பத்துத் தொழுநோயாளிகளில் ஒருவர் மட்டும் திரும்பி வந்து, இயேசுவின் காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தியபோது, “பத்துப்பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக் 17:17) என்று கேட்டதின் மூலம் இயேசு நம்மிடமிருந்து நன்றி உணர்வை எதர்பார்க்கிறார் என்பது தெளிவு.

எல்லாச் சூழ்நிலையிலும் நன்றிகூற (1தெச 5:18) அழைக்கிறார் தூய பவுல்,
தென்னிந்தியத் திருச்சபையைச் சார்ந்த ஒரு ‘பாஸ்டர்’ குதிரை ஒன்று வைத்திருந்தார். அக்குதிரைமேல் ஏறி, ‘இயேசுவுக்குப் புகழ்’ என்றால் அது ஓடும். ‘ஆமென்’ என்று சொன்னால் அது நின்று விடும். விவிலியக் குதிரை. அக்குதிரையைக் கத்ததோலிக்கக் குரு ஒருவர் பாஸ்டரிடமிருந்து விலைக்கு வாங்கினார். அக்குதிரையை ஓட்டுவது எப்படி, நிறுத்துவது எப்படி என்று மிகத் தெளிவாகப் பாஸ்டர் அவருக்குக் கற்றுக்கொடுத்தார்.

மலையில் வாழ்ந்த கத்தோலிக்கக் குரு மறுநாளே அக்குதிரையின் மேல் அமர்ந்து, ‘இயேசுவுக்குப்புகழ்’ என்று சொன்னதும் அக்குதிரை மிகவும் வேகமாக ஓடி, மலையின் விளிம்பிற்குச் சென்றுவிட்டது. இன்னும் ஒர் அடி அது முன்சென்றால் பாதாளத்தில விழவேண்டியிருக்கும். கத்தோலிக்கக் குருவுக்கு உடலெல்லாம் நடுங்கி வேர்த்துக்கொட்டியது. எப்படியோ ‘ஆமென்’ என்று சொல்லி அக்குதிரையை நிறுத்திவிட்டார். பேராபத்திலிருந்து தப்பிய மகிழ்ச்சியில் “இயேசுவுக்குப் புகழ்” என்று சொல்லி விட்டார்! உடனே அக்குதிரை அக்குருவுடன் பாதாளத்தில் குதித்துவிட்டது. விவிலியக் குதிரை விபத்துக் குதிரையானது. இது வெறும் கற்பனைக் கதையே.

‘இயேசுவுக்குப் புகழ்’ என்று கூறுபவர் விபத்திற்கு உள்ளாகமாட்டார்கள். மாறாக, இயேசுவைப் புகழ்வதால் அவர்கள் வாழ்வு வளம் பெறும், நெஞ்சிற்கு அமைதி கிடைக்கும். நாம் இருப்பதும் இயங்குவதும் இறைவனைப் போற்றுவதற்காகவே. ஏன்? வாழ்வு என்பது வாழ்த்துவதற்காகவேயாகும்.

ஓவ்வொரு திரைப்பட கலைஞனின் கனவும் தன் ஆயுள் நாட்களில் எட்டிப்பிடிக்க நினைக்கும் நிலா தான் அமெரிக்க நாடு வழங்கும் ஆஸ்கார் விருது. அந்த நிலாவை தட்டிச்சென்று தமிழகத்திற்கே பெருமை தேடித்தந்தவர் தான் ஏ.ஆர். ரஹ்மான். அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் அந்த விருது கொடுக்கும் நேரம.; உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நேரத்தில் அவன் உதறிய முத்துக்கள் இவைதான். என்ன தெரியுமா! “எல்லா மகிமையும் இறைவனுக்கே!” மனிதன் தன் மணிமகுடத்தை அடைந்தபோதும்கூட தவறாமல் மறவாமல் இறைவனு;கு நன்றி கூறிய தருணம் தான் இத்தருணம்.
தேவையா?

மனைவி ஒருவர் ஒவ்வவொரு நாளும் அருமையான உணவு சமைத்து, அதை அன்புடன் தன் கணவருக்குப் பரிமாறினார். ஆனால் கணவரோ தன் மனைவியின் சமையலை ஒருநாள் கூட பாராட்டியதில்லை. ஆத்திரம் அடைந்த மனைவி ஒருநாள் மாட்டுத் தவிட்டைக் குழைத்து அதைத் தன் கணவருக்கு பரிமாறினார். கணவரோ கடும்கோபத்துடன் “ என்னடி! நான் என்ன மாடா?” என்று கத்தினார்.

மனைவியோ மிகவும் அமைதியாக, “ஆமாங்க நம் மாட்டிற்கு என்ன தீவனம் கொடுத்தாலும் தின்கிறது. நல்லா இருக்குது அல்லது நல்லா இல்லை என்று அது ஒருபோதும் சொல்வதில்லை. அவ்வாறே நீங்களும்“ என்று ஒரு போடு போட்டார்.

மனைவி எவ்வளவு மோசமாகச் சமைத்தாலும் ‘சூப்பர்’ என்று சொல்லி அவரைப் பாராட்டாத கணவர் எவரும் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது.

மனிதருக்குத்தான் புகழ்ச்சியும் பாராட்டுதலும் தேவை. புகழ்ச்சிக்கு மயங்காத மனிதர் எவருமில்லை. ஆனால் கடவுளுக்கு நமது புகழ்ச்சி தேவையா? இக்கேள்விகளுக்கு திருச்சபையின் திருவழிபாடு மிகவும் பொருத்தமான பதிலைத்தருகிறது.

நமது புகழுரை இறைவனுக்குத் தேவையில்லை. நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதே அவரது அருட்கொடையால்தான் நாம் இறைவனைப் புகழ்ந்துரைப்பதால் அவரின் மாட்சிமை ஏற்றம் பெறாது: எனினும் நாம் மீட்படையப் பயன்படுகிறது. இறைவன் நமது புகழ்ச்சியால் மயங்குபவர் அல்ல. நாம் அவரைப் புகழவில்லை என்றால் அல்லது அவருக்கு நன்றி செலுத்தவில்லை என்றாலும் அவருக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இறைவனைப் போற்றுவதால், மகிமைப்படுத்துவதால் நாம் மீட்படைகிறோம்;: நாம் மீட்படைவதால் இ.றைவன் மகிமை அடைகிறார்.
துன்பங்களில் துவண்டு நின்ற நிலையிலும் சரி, வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட போதிலும் சரி கர்த்தர்க்குத் தாயாக வேண்டும் என்ற இனிய செய்தி அறிவிக்கப்பட் போதும் சரி, “இதோ உன் தாய்” என்று இவளை உலக மாதாவாக உலகிற்கு இறைவன் கொடுத்தபோதும் சரி, கன்னிமரியாள் இறைவனைப் புகழ்ந்து கொண்டே இருந்தாள்.

உலக மக்களெல்லாம் நம் அன்னை மரியாளை உலகமாதாவே என்று வாழ்த்தி போற்றி பாடும் வகையிலும் வாழ்ந்தாள். அன்னைமரியாளை புகழாதோர் இப்புவியில் இல்லை என எனலாம். அவள் அன்பை எண்ணி எண்ணி வியந்து போகிற மக்கள் கூட்டம் ஏராளம் ஏராளம். அன்னை மரியாளைப்பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை எத்தனை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாதப்பத்திரிக்ககைள் வாரப்பத்திரிக்ககைகள் துண்டுப்பிரசுரங்கள் எண்ணிலடங்கா. இவையெல்லாம்ட நம் அன்னை மரியாளை புகழந்துபோற்றிப்பாடுவதற்கு சான்றகளாகும்.

உலகில் பலவேறு இடங்களில் காட்சி தந்த அன்னை மரியாள் இன்றும் தன் அன்புப் பிள்ளைகளுக்கு ஏராளமான புதுமைகளைப் புரிந்து கொண்டிருக்கும் அற்புதக் காரியங்கள் எல்லாம் அந்தந்த அலயக் காட்சியகங்களில் வைக்கப்பட்டிக்கின்றன என்றால் இவைகளுகம்ட அன்னை மரியாளைப் புகழந்து கொண்டிருக்கின்றன என்று தானே அர்த்தம். எனவே மானிடப்பிறவிகள் மட்டுமல்ல இயற்கை உலகமே அன்னை மரியாளை புகழ்கிறது.

கடவுள் நமது வாழ்வில் பொழிந்த, பொழிந்துவரும் பல்வேறு நன்மைகளைக் குறித்துத்துதிக்கலாம். என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே, கிறிஸ்துவ குடும்பத்தில் என்னைப் பிறக்குமாறு செய்தவரே, நோய்களைக் குணமாக்கியவரே, மன்றாட்டுகளைக் கேட்டுப்பதில் அளிப்பவரே, எனது குற்றங்களை மன்னித்து மறந்துவிடுபவரே, விபத்துக்களிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்து வருபவரே, எனக்காக உயிர் நீத்த உத்தமரே உம்மைத் துதிக்கிறேன் உமக்கு நன்றிகூறுகிறேன்.

“ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன.; மீட்பின் கிண்ணத்தை கையில் எடுத்து ஆண்டவரின் திருப்பெயரை தொழுவேன்” என்று கூறும் திருப்பாடல் 116 ஐ நினைவில் நிறுத்தி தொடர்ந்து வருகிற இவ்வழிபாட்டில் நன்றி உணர்வோடு கலந்து கொண்டு நன்றி பலியாக ஒப்புக்கொடுப்போம்.

மரியாளின் புகழ்ச்சி மற்றும் நன்றி பாடலை நமது புகழ்ச்சி பாடலாகவும் நன்றிப்பாடலாகவும் கொண்டு எந்த நிலையிலும் இறைவனைப்போற்றி அவருக்கு நன்றியுள்ளவர்களாக நாம் வாழ்வதே நாம் நம் தாய்க்கு பாடும் தாலாட்டாகும்.

1 கருத்து:

  1. இறைவனை நாம் என்றுமே போற்றிப் புகழ வேண்டும் என்பதையும், வெறுமனே போற்றுதலோடு நிறுத்தாமல், இறைவன் காட்டிய மதிப்பீடுகளின் படி வாழவும் வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு