அமைதியில் ஓர் அனுபவம்

ஒரு முதியவர் தன் பங்குத் தந்தையிடம் சென்றார். அவரைப் பார்த்து “தந்தையே என் வீட்டு அருகில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். மூன்று நாட்களுக்கு முன் பவுல் அடிகளாரின் திருமடல்களை எல்லாம் இரவு முழுவதும் சத்தம் போட்டுப் படித்துக்கொண்டிருந்தாள். அடுத்த நாள் தான் புனித சவேரியார் என்று நினைத்துக்கொண்டாள். பகலும் இரவும் விடாது போதித்துக்கொண்டேயிருந்தாள். உரத்த குரலில் இரவு முழுவதுமட பாடிக்கொண்டே இருந்தாள். என்னால் தூங்க முடியவில்லை. கண் மூடி ஒரு வாரமாகிறது. இந்தக் கொடுமையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் சுவாமி” என்று கெஞ்சி மன்றாடினார் அந்த முதியவர்.
பங்குத்தந்தை அவளைத் தன்னிடம் அனுப்புமாறு கூறினார். அவளை முதியவர் அழைத்து வந்தார். அவளிடம் மூன்று நிமிடம் தனிமையில் பேசி அனுப்பிவிட்டார். ஒரு வாரம் கழிந்தது. முதியவர் மலர்ந்த முகத்துடன் புன்முறுவலுடன் பங்குத் தந்தையிடம் வந்தார். “சுவாமி உங்களிடம் அழைத்து வந்தேனே அடுத்த வீட்டுப்பெண், அவள் பேசி ஒரு வாரமாகிறது. சத்தமே இல்லை, அமைதியாக இருக்கிறாள். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஓன்றே ஒன்று அறிந்து கொள்ள ஆசை. அவளிடம் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார். பங்குத்தந்தை, “அவளை தான் கன்னிமரியாள் என்று நம்ப வைத்தேன்” என்று புன்னகையுடன் கூறினார்.
இந்த உலகில் பிறர் பேசி சாதித்ததை அன்னை பேசாமல் சாதித்தாள். கன்னி மரியாளின் வாழ்வைப் படிப்போமானால் அவள் அதிகம் பேசியதாகவே இல்லை. அமைதியாக இருந்தாள். இறைவனோடு ஒன்றித்து செபித்து வந்தாள். கர்த்தருக்குத் தாயாக வேண்டும் என்ற செய்த கன்னி மரியாளுக்கு அறிவிக்கப்படுகிறது. கன்னி மரியாளோ “இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்றாhள். இயேசு கன்னி மரியின் வயிற்றில் தூய ஆவியின் ஆற்றலால் கருவாகி உருவாகி பிறக்கிறார். வானோர் படைத்திரள்
“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோர்க்குஅமைதி உண்டாகுக” என்று கடவுளைப் பார்த்து புகழ்;ந்தது.
இதனைக் கேட்ட இடையர் குழாம் விரைந்து மரியாளையும், யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றி தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். ஆனால் மரியாள் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தாள். யெருசலேம் வழக்கப்படி குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்கத் தூக்கிச் செல்கிறார்கள். சிமியோன் குழந்தையை கையில் ஏந்தி மரியாளை நோக்கி “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற அவ்வார்த்தைகளை அமைதியாகத் தியானிக்கிறாள்.
12 வயது சிறுவன் யெருசலேம் தேவாலயத்தில் காணாமல் போய் விடுகின்றார். மூன்று நாட்கள் அலைந்து கண்டுபிடிக்கிறாள் கன்னி மரியாள். மகனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்தாய், இதோ பார் உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றாள். இயேசு “ஏன் என்னைத் தேடினீர்கள்?” என்று கேட்கிறார். எப்படி இருக்கும் அத்தாய்க்கு! கன்னி மரியாளோ இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
இயேசு பெருமான் மக்களோடும் சீடர்களோடும் உரையாடிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு அவருடைய தாய் வந்திருப்பதை சீடர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். “யார் என் தாய்?; என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் தந்தையும்” என்ற சொல்லைக் கேட்கும் கன்னி மரியாள் திகைத்துப்போனாலும் அமைதியாக தியானித்துக்கொண்டு இருக்கிறாள். இயேசுவைக் கொடியவர்கள் பிடித்து அடித்து துன்புறுத்திக் கொடுமைப்படுத்துகிறார்கள். தாயின் உள்ளம் தவிக்கிறது. அவரைக் காப்பாற்றத்துடிக்கிறது. எனினும் அனைத்தையும் கண்ணால் கண்டும் கூட அனைத்தையும் தியானித்தவராய் வீரத்தாயாக வெற்றி நடை போடுகிறாள்.
இந்நிலை சாதராரண நிலை அல்ல. ஆன்மீக வாழ்வின் உயரிய, உன்னத எழிலார்ந்த நிலை. நம் வாழ்விலும் என்ன நேர்ந்தாலும் இறைவார்த்தையை இதயத்தில் இருத்தி தியானித்தவாரே வாழக் கற்றக்கொள்ளும்போதுதான் நாமும் மகத்தான காரியங்களை சாதிக்க முடியும், சரித்த்pரம் படைக்க முடியும். சகாப்தத்தை உருவாக்க முடியும். சாதனை புரிவது, சரித்திரம் படைப்பது, சகாப்தத்தை உருவாக்குவது செயல்களால் மட்டுமல்ல ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தாலும் உருவாக்கலாம்.
ஒரு பெண்: என் வீட்டுக்காரர்ட்ட எந்த தலைப்பை கொடுத்தாலும் சரி. அந்த வி~யத்தைப் பற்றி ஒரு மணி நேரம் அழகா பேசுவார்.
மற்றொரு பெண்: அது என்ன பிரமாதம். என் வீட்டுக்காரர் வி~யமே இல்லாம நாள்பூரா பேசிக்கிட்டே இருப்பார்.
திருமணத்திற்குப்பின் அடுத்து வந்த முதல் மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்ததென்ன? முதல் ஆண்டு அவன் பேசினான், அவள் கேட்;டாள்;;: இரண்டாம் ஆண்டு அவள் பேசினாள், அவன் கேட்டான்: மூன்றாம் ஆண்டு இரண்டுபேரும் பேசினார்கள். ‘ஊரே கேட்டது. மூன்று ஆண்டுகளில் முத்தான காதல் முடிவடைந்து விட்டது: சத்தான காதல் செத்துவிட்டது.
இது இப்படியிருக்க, ஒருசிலர் பேசினாலே நமக்கு கேட்பதற்கு எரிச்சலாக இருக்கும்.
சிலர் பேசினால் சங்கீதமாக இருக்கும். சிலர் பேசினால் சங்கடமாக இருக்கும்.
சிலர் பேசினால் நம்மால் மறுக்கமுடியாது. சிலர் பேசினால் நம்மால் பொறுக்க முடியாது.
சிலர்; எதையாவது சாதிக்க வேண்டுமென்று பேசுவார்கள்.
சிலர் யாரையாவது பாதிக்கவேண்டுமென்று பேசுவார்கள்.
சிலர் எதையாவது ஆக்க வேண்டுமென்று பேசுவார்கள்.
சிலர் யாரையாவது தாக்க வேண்டுமென்று பேசுவார்கள்.
எப்படிப்பேசினாலும் சரி சிந்தித்து, நிதானமாக, என்ன பேசுகிறோம், எதைப்பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம், எப்படிப்பேசுகிறோம் என்று சிந்தித்து பேசினால் நலமாக இருக்கும்.
ஓர் அரசியல்வாதி பொதுகு;கூட்டமொன்றில் “தோழர்களே, எண்ணிப்பாருங்கள். மீண்டும் மீண்டும் எண்ணிப்பாருங்கள்” என்று ஆசேவசத்துடன் கத்தினார். கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து நின்று “இந்த அரசியல் கூட்டத்திற்கு வருகின்றவர்களுக்கு கலா 50 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லிக்கூடட்டிகக்கொண்டு வந்தார்கள். மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்த்தேன். 40ரூபாய் மட்டுமே இருக்கிறது” என்றார்.
பலர் பணத்தை எண்ணுகின்றனர் சிலர் நேரத்தை, வயதை எண்ணுகின்றனர். வேறு சிலர் காதலை எண்ணுகின்றனர். திருமணம் செய்யாதவர்கள் திருமணத்தை எண்ணுகின்றனர். திருமணம செய்துகொண்டவர்கள் மணமுறிவை எண்ணுகின்றனர்.
மரியாள் எதை எண்ணினார்? ஏதைப்பற்றிச் சிந்தித்தார்? வுpவிலியம் கூறுவதென்ன?மரியாள் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச்சிந்தித்துக்கொண்டிருந்தார்” (லூக் 2:19). “அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்தார்” (லூக் 2:51).
மரியா இயேசு கூறியதையும் தம் உள்ளத்தில் பதித்து வைத்து அவற்றைவப்பற்றியே சிந்தித்தார். மரியாவுக்கு எல்லாம் இயேசு மயம்: எண்ணும்போது இயேசு மயம்: உண்ணும் போதும் இயேசு மயம்: உறங்கும்போதும் இயேசு மயம்: எங்குமு; இயேசு மயம்:எதிலுமட் இயேசு மயம்:
மிகவும் மட்டமான வாழ்வு நடத்திய ஓர் இளைஞன் தன் ஆசிரியரைச் சந்தித்ததபோது ஆசிரியரிடம், “ நான் உங்கள் மாணவன் “{ என்று கூற, ஆசிரியர் அவனிடம் “நீ என் வகுப்பில் இருந்திருக்கலாம். ஆனால் நீ என் மாணவன் அல்ல” என்று வருத்தத்துடன் கூறினார்.
இயேசு இன்று கிறிஸ்தவர்களளைப் பார்த்து “ நீங்கள் கிறிஸ்தவ மதத்தில் இருக்காலாம். ஆனால் நீங்கள் என் சீடர்கள் அல்ல” என்று கூறுவார். கிறிஸ்தவராக இருப்பது முக்கியமல்ல: ஆனால் கிறிஸ்தவன் சீடராக விளங்குவதே முக்கியமாகும், இன்று இயேசுவுக்கு “விசிறிகள்” பலர் இருக்கின்றனர்: ஆனால் அவரின் சீடர்கள் மிகக் குறைவு.
மரியா இயேசுவின் தாய் என்பதைவிட இயேசுவின் சீடர் என்பதே முக்கியமானது. இயேசுவின் சீடராவது எவ்வாறு? “என் வார்;த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்” (யோ 4:31). எனவே இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களே அவருடைய உண்மையான சீடர்கள் ஆவர்.
“உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று தம்மிடம் கூறிய பெண்ணிடம் இயேசு “இறைவார்த்தையைக்கேட்டு அதைக்கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேற பெற்றோர்” என்றார் (லூக் 11:27-28). இவ்வாறு கூறியதால் மரியாள் பேறுபெற்றவர் என்பதை இயேசு மறக்கவில்லை: மாறாக மரியாள் இறைவனின வார்த்தையைக்கெட்டு அதைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தார் என்பதில் தான் உண்மையான பேறு அடங்கியுள்ளது என்பதை இயேசு வெளிச்சம்போட்டுக்காட்டினார்.
குருவாம் இயேசுவைக்கண்டு அவர் நாமத்தைச்சொல்லி , அவர் வார்த்தையைக் கேட்டு அவரின திருவுருவை என்றும் சிந்தித்து வந்த மரியள் உண்மையிலேயே இயேசுவின் முத்தான, முதன்மையான, முழுமையான சீடராகத் திகழ்கின்றார். எல்லாரையும் இயேசுவின் சீடராக்குவதே மரியாளின் ஒரே விருப்பம்.
“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோ 2:5) என்று கானாவு}ர்த் திருமணத்தில் பணியாளர்களுக்குக் கொடுத்த கட்டளைதான் நற்செய்தியில் மரியாள் பேசும் இறுதி வார்த்தைகள். அக்கட்டளைதான் மரியாவின் இறுதிக்கட்டளை: இறுதிவிருப்பம்.
“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் “ என்ற மரியாளின் இறுதி விருப்பமும், “ஆண்டவர் கூறியபடியே அனைத்தையும் செய்வோம்” (வி.ப. 19:8) என்று சீனாய் மலை அடிவாரத்தில் இஸ்ராயேல் மக்கள் இறைவனுக்கு அளித்த பழைய உடன்படிக்கையின் இறுதி வாக்குறுதியும், “நான் உங்ககளுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள் “ (மத் 28:20) என்று இயேசு கலிலேயா மலையில் தம் சீடர்களுக்குக் கொடுத்த இறுதிக்கட்டளையும் ஒன்றாக இருப்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இறைவனின் விருப்பத்தை கட்டளையை நிறைவேற்றுவதுதான் விவிலியத்தின் அடிப்படையான அம்சமாகும்.
கடவுளை நம்பாத நாத்திகர்களின் மாநாடு நடந்து கொண்டிருந்தது. ‘கடவுள் இல்லை’ என்று நிரூபிக்கக்கூடிய தங்களது ஆராய்ச்சி நூல்களை மேடையில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியிருந்தார்கள். அப்போது அங்கு வந்த கிறித்தவர், எல்லா ஆராய்ச்சி நூல்களுக்கும் மேலாக விவிலியத்தை வைத்து, “விவிலியமே தலை சிறந்த, உன்னதமான நூல், எல்லாவற்றிற்கும் மேலானது” என்றாராம். அங்கிருந்த ஒரு நாத்திகர் கோபத்துடன் விவிலியத்தை எடுத்து எல்லாப் புத்தகங்களுக்கும் அடியில் வைத்தார். உடனே அக்கிறித்தவர், “எல்லா புத்தகங்களுக்கும் அடிப்படையான, ஆதாரமான நூல் விவிலியம் என்பதை அவரது செயல் சுட்டிக்காட்டுகிறது” என்றாராம். மீண்டும் கோபமடையந்த அந்த நாத்திகர் விவிலியத்தை எடுத்து மற்ற புத்தகங்களுக்கு நடுவில் வைத்தார். கிறித்தவரோ இன்னும் விடாப்பிடியாக “விவிலியம் அச்சுப்போன்றது, அதை மையமாக வைத்தே எல்லாம் சுற்றுகின்றன என்ற உண்மையை இப்போது அவர் சுட்டிக்காட்டுகிறார்” என்றாராம்.
காலங்களையெல்லாம் கடந்து வந்திருக்கும் கடவுளின் வார்த்தை, வரலாற்றில் அளப்பரிய மாற்றங்கள் செய்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. “மனித குலத்திற்கு கடவுள் வழங்கியுள்ள கொடைகளில் மிகச்சிறந்த கொடை விவிலியமே” என்கிறார் ஆபிரகாம் லிங்கன்.
மரியா இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டார் (லூக் 1:38). மரியா இறைவர்த்தையை மலைநாட்டடிற்கு எடுத்துச்சென்றார் (லூக் 1:39-44). மரியா இறைவார்த்தையைத்தம் உள்ளத்தில் பதித்துச்சிந்தித்தார் (லூக் 2:19). மரியா இறைவர்த்தையைக் கடைபிடிக்க கட்டளையிட்டார் (யோவா 2:5).
உயிருள்ள வார்த்தைளை வாசித்து, உயிரோட்டமாக வாழ்ந்திடுவோம்
நிலையான வாக்கினை தியானித்து, நிறைவான வாழ்வைப் பெற்றிடுவோம்.
ஒருபங்கில் திருவிழாவிற்கு தயாரிப்பாக நவநாட்கள் நடந்துகொண்டிருந்தன. சிறப்பு மறையுரைக்காக தாடி வைத்திருந்த ஒரு குருவானவரை அழைத்திருந்தார்கள். ஆக்குரு இறைவர்த்தையின் மீது இருந்த தாகத்தின காரணமாக மிகவும் வேகத்தோடு தன் தலையை இங்கும் அங்கும் ஆட்டி மறையுரை வைத்தார். ஓவ்வொரு நாள் பிரசங்கத்தின் போது; அக்கூட்டத்திலிருந்த பாட்டி ஒருவர் அழுதுகொண்டிருப்பார். தன்னுடைய பிரசங்கத்தால் தொடப்பட்டு, மனம்வெதும்பி அப்பாட்டி அழுவதாக அக்குரு நினைத்துக்கொண்டார் . அவர் நவநாட்கள் முடிந்து அவ்வூரைவிட்டு போவதற்குமுன்பாக அப்பாட்டியைச்சந்திக்க நேரிட்டது. ஆக்குரு பாட்டியிடம் மறையுரை நேரத்தில் அழுத்தற்கான காரணத்தைக்கேட்டபோது “சாம்p நர்ன ஒரு ஆடுவளர்த்தேன். அதுமீது என் உயிரையே வைத்திருந்தேன். ஆதற்கு உங்களை மாதிரியே ஒரு தாடி இருந்தது. குடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அது காணாமற்போய்விட்டது. ஊங்கத்தாடியைப்hர்த்தவுடன் அந்தஆடு ஞாபகம் வந்துவிட்டது. ஆதனால் தான் அழுதேன்” என்று அந்தப்பாட்டி சொன்னாராம்.
கடவுளுடைய வார்;த்தை நமக்கு அறிவிக்கப்படும்போது நாம் எந்த மனநிலையுடன் அதற்கு செவிமடுக்கிறோம் என்று சிந்தித்துப்பார்க்க இந்தக் கதையுமு; இன்றைய வாசகங்களும நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நூம் திருப்பலியில் பங்கெடுக்கும்போதும், கடவுளுடைய வார்த்தை பகிரப்படும்போதும், ஏன் நாமே விவிலியத்தை வாசிக்கும்போதும் இறைவார்த்தை நமக்குப் பறைசாற்றப்படுகிறது. இவ்வாறு பறைசாற்றப்படும் இறைவார்த்தைக்கு நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு செவிமடுத்து அவ்வார்;த்தை நம்முள் செயல்பட அனுமதிக்கிறோம் என்பது நாம் சிந்திக்கவேண்டிய ஒன்று.
‘நெஞ்சிலே செருக்குற்றோரை இறைவன் சிதறடிக்கிறார்’ (லூக் 1:51). ஏன்ற மரியாளின் கூற்றுபொய்யாகுமா. எனவே விவிலியத்தை திருச்சபையின் மடியில் அமர்ந்து படிக்கவேண்டும். விசுவாச ஒளியில் படிக்கவேண்டம். தாழ்ச்சியுடன் படிக்கவேண்டும், மரியாளை வழிகாட்டியாகக்கொண்டு படிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக