என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்

 என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்

என்னை உனக்கு கொடுப்பதில் தானே ஆனந்தம் 

உன்னில் உனக்காய் வாழ்வது எந்தன் ஆனந்தம்- 2

1.

கனிகளை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்

கனிவாய் உள்ளம் வேண்டும் என்று நீர் கேட்டீர்

மலர்களை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்

எனக்காய் மலர வேண்டும் என்று நீர் கேட்டீர்

உன்னில் என்னை தந்து விட்டேன்

உம் பணி செய்ய துணிந்து விட்டேன் - 2

என்னை ஏற்று மகிழ்வாயா

என்றும் உன்னில் வாழ்ந்திடுவேன் - 2

2.

கோதுமை மணிகள் கையில் ஏந்தி நான் வந்தேன்

எனக்காய் வாழ வேண்டும் என்று நீர் கேட்டீர்

தீபம் ஏந்தி உம் பீடம் நான் வந்தேன்

எனக்காய் ஒளிர வேண்டும் என்று நீர் கேட்டீர்

உன்னில் வாழ முடிவெடுத்தேன்

உம் பணி செய்ய துணிந்து விடேன் - 2

என்னை ஏற்று மகிழ்வாயா - 2

என்றும் உன்னில் வாழ்ந்திடுவேன் -2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக