உன் கையில் என் பெயரெழுதி


உன் கையில் என் பெயரெழுதி இறைவா
உன் நெஞ்சில் என் நினைவெழுதி-2
என்றென்றும் என்னை
நிலைக்க செய்தாய்-2
உன் நெஞ்சில் என் நினைவெழுதி இறைவா
என்னை நீ நிலைக்க செய்தாய்

1
என் கண்ணில் உந்தன் வடிவெழுதி
இம் மண்ணில் உந்தன் அடிதொழுது-
பித்தனாய் என்னை அலையவிட்டாய்
உன் பக்தனாய்
என்றும் தொடரவிட்டாய்

2
என் கண்ணீரில் உந்தன் பாதம்
கழுவி உம் மலர் பதத்தில்
என் இதழ் பதித்து-2
உள்ளத்தை உடைத்துவிட்டேன்
உன் உள்ளத்தை அடைந்து
உயர்ந்துவிட்டேன் -2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக