இறைவனின் பலியினில் இணைந்திட வாருங்களே

இறைவனின் பலியினில் இணைந்திட வாருங்களே 
தியாக தேவனின் உணர்வினில் சேருங்களே 
தன்னை தந்தவர் தரணி மீட்டவர் அழைக்கும் குரலினை கேளுங்களே 
வாருங்கள் வாருங்கள் இறைமக்களே 
வாழுங்கள் வாழுங்கள் இறை அன்பிலே 


தண்ணீரும் இரசமாய் மாறும் போது 
கண்ணீரும் இன்பமாய் மாறிடுதே– எங்கள்
கண்ணீரும் இன்பமாய் மாறிடுதே 
உமது பலியில் இணையும் போது 
புதுமை வாழ்வில் கண்டுகொண்டோம் 
உம்மை வாழ்வில் கண்டுகொண்டோம் 
வழியும் நீயே வாழ்வும் நீயே 
நிலையாய் உறவாய் வாழ்பவர் நீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக