ஒளியாம் இறையே வாராய்

ஒளியாம் இறையே வாராய்
எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்-2
1.
விண்ணில் வாழும் விமலா
மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ
‌எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக‌-2

2.
நீரும் மழையும் முகிலால்
பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால்
வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியே

3.
அருளே பொங்கும் அமலா
இருளைப் போக்க வாராய்
குறையை நீக்கும் நிமலா
நிறையை வளர்க்க வாராய்- ஒளியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக