புதிய ஏற்பாடு...

நாவே!
இன்னும் கொஞ்சம மௌனம் கா
வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பை போல
நெஞ்சே!
துயரத்திலும் நன்மைகாண்
மரணம்வரைக்கும் சென்றவிதை
இன்னொரு ஜனனம் காண்பதுபோல
உணர்வே!
கலங்குதல் தவிர்
கடமை செய்யும்போது
கண்கலங்காத
வெட்டியான்போல

ஆல்வின்
முதலாமாண்டு 2010
அம்மன்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக