என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள்

என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள்

ஏற்றமிகு உன் படைப்பிலே

அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில்

அர்ப்பணமாக நானும் வந்தேன் -2


1. நான் காணும் உயிர்கள் எல்லாம் நாளெல்லாம் அவரினிலே

நான் தேடும் அமைதி எல்லாம் நாதன் அவர் பெயரினிலே

எந்தன் தேவனோடுதான் என்றும் நானும் வாழத்தான்  - அர்ச்சனைப் பூவாய் . . . .


2. எனைத் தெரிந்தாய் கருவினிலே

அணைத்துக் கொண்டாய் அன்பினிலே

தனை அறிய தரணி எல்லாம் தன் கரத்தில் தாங்கிக் கொண்டாய்

எந்தன் தேவனோடுதான் என்றும் நானும் வாழத்தான் - அர்ச்சனைப் பூவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக