அழைக்கும் இறைவனின் குரலினிலே

அழைக்கும் இறைவனின் குரலினிலே
ஆவியின் ஆலயமாகிடுவோம்
ஆண்டவர் இயேசுவின் சாட்சிகளாய் - 2
அருளினில் நனைவோம்
அர்ப்பணம் செய்வோம்
வரங்கள் செழிக்கும் உள்ளம்
அது இறைவன் வாழும் இல்லம்
எழுக - 2 இறைகுலமே
விரைக - 2 இறைபதமே

1
இறைவனின் அரசே இகமதில் முழங்கிட
இன்றே புறப்படுவோம்
இனி உண்மை அன்புடன் நீதி நெறிகளை
உலகினில் மலரச்செய்லோம் ‡ 2
ஏழை மக்களின் துயர்துடைப்போம்
ஏங்கும் வாழ்விற்கு உயிர்கொடுப்போம்
எழுக...

2
இயேசுவின் பணிகளை துணிவுடன் ஏற்றிட
இயக்கமாய் ஒன்றிணைவோம்
இனி மனிதர் மாண்புடன் வாழும் நிலை பெற
மனிதத்தில் கோயில் செய்வோம்
வாழும் வறியவர் குரல்கேட்போம்
மாற்று சமுதாய புவி படைப்போம்
எழுக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக