வருகை பாடல்

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட‌
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம் -அர்ச்சனை
1
தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சைப் பிள்ளையாயினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராக புனிதராக வாழ பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வை கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதே என்று என்னைக்காத்து வருகின்றீர் - அர்ச்சனை

2
உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதை ஆக்கினீர்
உமது மாட்சியை எங்கும் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் செய்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்ட்ம் தீட்டினீர்
அஞ்சாதே என்று என்னைக்காத்து வருகின்றீர் - அர்ச்சனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக