வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்

 வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்

எங்கள் ஆரோக்கியத் தாய்மரியே நீ வாழ்க

எங்கும் புகழ் மணக்க விளங்கும் பேரணங்கே

எங்கள் தாயாக என்றும் இருப்பவளே


1. முடமாய் இருந்தவனை முழுவதும் குணமாக்கி

நடமாடச் செய்தவளே நாயகியே தாயே

குறைந்திட்ட பால் பெருக்கி குன்றாத நலம் புரிந்து

நிறைவு அடைந்திடச் செய்த எம் தாய்மரியே


2. செவ்வாய் இதழ்விரித்து செங்காந்தள் கரமுயர்த்தி

ஒவ்வாத பிணியெல்லாம் நொடியில் தீர்ப்பாய்

கத்தும் கடல் புயலடக்கி காற்றை நெறிப்படுத்தி

தரையில் அமைதியைத் தந்தவள் நீ தாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக