Conversion is Reestablishment of Relationship


(Zacchaeus meeting Jesus)
Dear brothers and sisters in Christ Jesus!
Everyone in this earth is in need of something. Some of us are in need of love; some others are in need of consolation; some are in want of wealth; some others of luxury. In the process of acquiring all these needs and wants, we terribly break our relationship with our fellow men. We try to acquire our requirements and amaze our richness at the cost of relationships. Today’s liturgy invites everyone of us to re-make such broken relationships, and to re-establish the order prevailed in the beginning.

The basic understanding of Sin is nothing but “breaking of relationship with God and with one another. We may say that we never intend to break away our relation with our God. But breaking the relationship with God is nothing but breaking our relation with our fellow human beings. For it is said, If I am not in good terms with my neighbour, I am not in relation with God. The so called ‘Original Sin’ is nothing but the sign of ‘broken relationship.” It is not just disobedience to the command and the commitment of the Lord, but it is a willful detachment from God, that express I do not belong to you any more.
Something similar we come across in today’s liturgy of the word. A man called Zacchaeus, the chief tax-collector has willfully broken his relationship with his people, and so naturally with God. He collects more tax what he is supposed to collect. Therefore he entitled to be a ‘sinner’ but what teaches us lesson is later part of the reading from this man Zacchaeus we can learn two distinct and important qualities.

1. His desire: to be re-united with God and fellow men.
2. His determination: in achieving his desire even at the cost of all his wealth.


1. His Desire
It is true he is a sinner. But there should have been a great longing deep down in his heart to be converted to the life of righteousness, and witness. He should have heard about the call of St.Matthew, the tax-collector. Therefore Zacchaeus should have been waiting for a chance to see “Who Jesus is?” He knows that Jesus is a man who accepts even the so called sinners. It might have created in him curiosity to see Jesus, for in spite of his wealth he was not accepted in the society. It is true with everyone of us. Even though we have broken our relationship with our fellow men, deep down of our heart we want to be re-united but do we proved to the next step like Zacchaeus?


2. His Determination
Like any one of us he has desire. But in spite of all the difficulties, humiliations, he proceeds in achieving his desire. He determines to see Jesus whatever may be the cost, he is a man disliked by all. Therefore, making use of the chance, in the crowd people would have given him much trouble. Even then he decides to climb the tree. Tree stands for “Life” in the Bible. For the fallen humanity was to be restored by cross made of a tree. As a result he receives life, salvation from Jesus.  Imagine, a rich official, climbing the tree when whole village is gathered around. Suddenly things get changed and the man disliked by all becomes the center of all attraction where in a new relationship is made between him and his master. And that relationship is more authenticated when he gives back his wealth to his people.

A sinner becomes a sign of salivified man. A disliked man becomes lovable witness to the Gospel. It is all because of his true desire and his determination, out of which a new life and new relationship is born. Coming to our life, it is true that all of us have desire but do we put up with the difficulties in achieving those desires.

Our loving God is always ready to accept us as he accepted Zacchaeus. But he expects from every one of us such true desire.  For, God who created us without our concent can not save us without our consent. Imagine, in front of God we are nothing. But He wants us to be saved. Because He truly loves all that exists. That is what we heard in first reading. He gives chances for our re-establishment of relationship. It is we who willingly go away from Him. Zacchaeus has made use of the chance. What about us? As our Lord passed through Jericho, today passes us through the Eucharist. Are we ready to manifest our desire to be re-united with him?  But such re-establishment can be made true only by remaking our love for our fellow brethren. Thus we can, like Zacchaeus, become a witness to the Gospel. It is true, such thing is not an easy task, we may come across so many opposition in and around us. But are we ready like St. Paul, who in spite of all the difficulties witnessed the Gospel he preached.  For him, it was of external opposition. But in re-making our relationship we may find, so many internal opposition like pride, selfishness, arrogance and superiority complex etc. Our Lord expects each one of us to break away with all these things and come forward to create a new-world of love and peace.
Bro.A.Susai Devanaesan.

Spirituality of Mary


Mary the woman of Faith and Prayer
A) Mary and Faith
  1. Faith of Mary is personal that she surrenders herself to God in perfect obedience of will. The whole person of Mary was involved in making an act of faith.
  2. Faith is not a result of her intellection. It is not hers, but faith is the fruit of God’s grace.
  3. Mary’s faith is free: It is not under pressure or compulsion she freely accepted God’s will.
  4. Assuring faith: Mary did not know her future. She trusted in the power of God’s word and was convinced that it is God who was acting in her. Faith led to the salvation of people through her son.
  5. Suffering Faith: Suffering makes Mary to have more faith. Because of the faith we can bear suffering.
  6. Communitarian: Mary’s faith is personal but not individualistic. It is the ecclesial faith. The faith of the Church is based on Mary’s faith

B) Mary and Prayer
A) Prayer
a)   Magnificate- prayer of praise
b)  At Cana-  prayer of petition
c)   At Cenacle (Upper room- at the time of Pentecost, she was in prayer (mental prayer)
B) Meditation
a)   Lk2:19 after the visit of the Shepherds
b)  After she found Jesus in the Temple.
Ø         Mary the Woman of Discipleship
·       Meaning of a disciple
Disciple is the one who disciplines himself or herself according to the rule of the master.
Mary as the disciple: Jesus called His disciple as this master, brother and sister. Disciple is the mother of Jesus but mother has become the disciple of Jesus.
·       Rule of the Master Jesus
One must hear word of God and do it.
·       Hearing the Word Of God:
Hearing means, ‘Submitting one’s will to the will of the other.’  Hearing means, giving up one’s will for the sake of the master’s will. (Spiritual Sacrifice) It means readiness to follow or to do God’s will. Doing the will of God in action namely to one’s neighbours.
Mary’s helping tendency (Charity)
 As a Christian we have to grow like this.
All these instances Jesus was with Mary. Mary put the will of God in action in and through Jesus. Therefore Mary did the will of God for the sake of Jesus, her Master. A disciple of Jesus is one who does the will of God in and through and for Jesus the master.



Mary the women of the Eucharist

(Ecclesia De Eucharistia No: 53-55)
Eucharistic Liturgy
a)               We are not sure If Mary was in the Eucharistic Celebration of our Lord (Lord’s Supper). Mary would have been definitely present when the apostles celebrated Eucharist.
b)  Jesus’ presence must be Distinguished,
                              i.            Natural made
                          ii.            Sacramental made
Ø Natural made is divided in to two
v Physical body –Jesus 33 years on earth
v Spiritual body –In heaven
Ø Sacramental made – Body on the Altar
Sacramental body would not be possible without physical body Mary would have thought apostles “Give Birth” to Jesus Sacramental body.  It is because she “gave birth” to Jesus Physical body. (e.g)Mary is like Pradeepa Patil (President) Apostles are like Monmohan Singh (Prime minister)
President has more dignity than the prime minister. The person who she gave birth physically is the same person who is made present Sacramentally. Eucharist is continuation or prolongation of incarnation.

c)   What would the Apostles have thought while celebrating the Eucharist?
At Cana Mary said, do what ever Jesus tells you. This command of Mary is of value not only at Cana in the Context of Wedding but for all people at all times. At the last supper Jesus said “do this in memory of me”. When the Apostles celebrated the Eucharist they obeyed not only the commandment of Jesus but ultimately the commandment of Mary.
d)  Mary said, “Amen” and received Jesus in her Womb. In the Same way we say ‘Amen’ And received the Same Jesus in the Eucharist.
e)   In the tabernacle there is the Sacramental Body of Jesus. In Mary there was Physical body of Jesus. Same person but in different modes. Mary’s visit to the Elizabeth is the first Eucharistic procession.
Ø Mary in Relation to Jesus Christ
Popularity of Mary: Mary is the only world-wide known saint. Most of shrines are dedicated to Mary. Most of the Pilgrimages are made to Mary. To Mary prayers are addressed (Rosary). Most of the Catholics are named after Mary. Mary is presented as an embodiment of all virtues. Model for every virtue.
Ø Mary as Mother
    Physical motherhood: Angel addressed Mary- Full of Grace (From above)
    Elizabeth addressed Mary – Full of Faith (human point of view). 
That saviour who would be born, is the revelation of God. Mary said, “YES” to the revelation. That is faith. This Faith itself is a result of Grace.
There is a movement within Mary from God to God,  (Everything comes from God and goes to God).
Ø Spiritual Motherhood: (Mt12:48)
Anyone who does will of god is Jesus mother. Mary is mother of Jesus in the Spiritual sense because she did the will of God. As disciple of Jesus, Mary is the mother of Jesus. Mary alone is mother of Jesus physically and Spiritually. While Mary alone is mother of Jesus Physically, all His disciples can be mother of Jesus Spiritually. Spiritual motherhood from proceeds physical motherhood. Mary conceived word of God in Her heart before she conceived him in her womb (St. Augustine). Only in Mary spiritual motherhood culminated in physical motherhood. First Mary received created grace (Sanctifying grace) that is Immaculate Conception of Mary (Spiritual mother) Then Mary received uncreated grace (God himself). When? At the virginal conception of Jesus.
Mary as the Woman
God had plan of salvation in all eternity. This plan was executed in history. In this plan a woman played a major role and her role is related to Jesus and the Church because in them Salvation is or was realized.

Three levels of Salvation History

A.  Beginning of time:
Salvation is promised. In Gen3:15 there is a mention of a woman. This woman would play a major role in Salvation.(Already foretold)
B.  Fullness of Time
Salvation is realized in two stages
a.    Cana
b.   Calvary
A. Cana
Jesus began the work of Salvation, at that time Jesus addressed Mary as ‘woman.’  Why? Jesus pointed out the Mary is the Woman who was mentioned at the beginning of History. Jesus’ hour neither has come nor yet come. That hour of giving wine not yet come. Here wine referred to Salvation. As a preparation of Salvation, Jesus gave real wine. Wedding party who was in need of wine stands for the entire humanity. Who is in need of salvation? Here Mary is mother of mankind. Hereafter Mary is stands for mother of mankind.
c.    Calvary (Jn 19:26)
d.   Complete the end of Salvation. Hour of giving wine has come. Mary was there. Here Jesus addressed Mary as Woman. St. John stands for all the disciples of Jesus. Church is the redeemed Community. Therefore Mary becomes mother of the Church.
·       End of time
In Rev 12th Chapter we read, St. John had a vision of the “woman” in glory. Here woman is Mary in God. This woman is the Church that will be glorified. Here Mary stands for the glorified church. Mary identified with victorious church.
Mary as the New Eve
St. Paul Said in his letter to the Romans 5:12 Sin, and  death came from one man Adam - Earth, and in the same chapter he said grace and life came from man, Jesus - Heaven (Rom 5:17)
Beginning of History
Adam brought sin and death
A woman was very significant as a symbol of disobedience
Eve
New beginning of History
Jesus brought grace life. 
Therefore Jesus is called new Adam
A woman was a significant as a symbol of obedience.
Mary – New Eve.
Therefore Mary is reversal of Eve (EVA=AVE)
Mary as mother is related to the person of Jesus Christ
Mary as the woman is related to the Slavonic Action of Christ.
Bro.  A William.

பொன் மொழிகள்



  1. கடந்தவை இறைவனின் இரக்கத்திலும், நிகழ்பவை இறைவனின் அன்பிற்கும், வருபவை இறைவனின் பராமரிப்பிற்கும் உரியவை – புனித அகுஸ்தினார்.
  2. துறவி தேனியைப் போல், நற்பண்புகளை சேகரிக்க வேண்டும் - புனித அந்தோணியார். 
  3. நம் ஆன்மாக்கள் கடவுளுடையவை, ஒரு போதும் அவை அலகையின் உடமையல்ல – புனித செபஸ்தியார். 
  4. அன்பில்லாமல் பேசப்படும் உண்மையைவிட அமைதியே மேலானது – புனித சலேசியார். 
  5. உன்னால் இயன்றதைச் செய், கடவுளும் அன்னை மரியும் மற்றனைத்தும் செய்து விடுவர் - புனித ஜான் போஸ்கோ. 
  6. நம்மை அழைத்தவரின் விருப்பத்தைவிட , நடக்க தகுந்த பாதை உண்டோ? – புனித அருளானந்தர்.
  7. ஆண்டவரே நமது இரகசிய சக்தி, திருத்தூதர்களை பெந்தகோஸ்தே நாளில் திடப்படுத்தியது போல் நம்மையும் திடப்படுத்துவார் - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 
  8. வாழ்வில் நிகழ்வன அனைத்திலும் அதை தாங்கும் சக்தி அடங்கியுள்ளது. – அன்னை தெரசா 
  9. உன் மகிழ்வின் அளவு உன் மனதில் இருக்கிறது – அபிரகாம் லிங்கன்
  10. கடவுளுடன் கொள்ளும் ஒப்புரவு மற்ற உறவனைத்தையும் புதுப்பிக்கிறது - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

சகோ. ஞா. எடிசன் சின்னப்பன்

Mary in Revelation to the Church

Mary of the Prototype of the Church
a.       Pilgrimage of Faith
Israel made a journey (pilgrimage) from Egypt to Cana. At this journey two things were there.
1. External-from  one place to another.
2. internal-from lesser faith to great faith
Church is the new Israel. So church is also making a journey pilgrim church.
Here also two things
1. external-spreading of faith from  one place to another
2. internal-depending on  faith (growth from within)

Certain stages of the devolvement of this concept
a)              Creation: the Spirit of God hovered over the water. Light came first-that marked the beginning of creation.
b)              annunciation: Holy Spirit overshadows Mary. Jesus the light of the world conceived- that marked the beginning of new creation.
c)               Calvary: Jesus gave up the spirit (Jn: 19:30) there was born symbolically the Church. Water and blood are flowing from the side of Jesus. Water stands for Baptism and blood stands for Eucharist. Baptism and Eucharist are the most fundamental sacraments of the Church. As Eve came from the side of Adam when he asleep, Church came from the side of Jesus while he was deep sleep. Therefore the church is the bride of Jesus. There, Mary presented Jesus in the church.
d)              Pentecost: The Spirit of God descended. That marks the beginning of the Church. There Mary was present. Now church started its journey of faith. It is the faith of Mary that apostles proclaimed. Mary does not appear anymore in New Testament. The church started its pilgrimage of faith. Where Mary left, the Church took in. The faith of the church is nothing but Mary’s faith is the beginning or basis of the faith of the church. As Mary accompanied Jesus in his life–time so Mary would accompany the Church.
Mary as Virgin Mother
1. Mary is Virgin
That is faith to God and decided to God. At the same time Mary is the mother because he gave birth to Jesus. Like Mary, church is also virgin and mother.
Virgin-faithful to Christ
Mother-he gave birth to children of God through Baptism.
What is said of Mary is said of the church. Therefore Mary is the proto-type of the church.
2. Mary is the Member of the Church
Through Mary is the Mother of God (highest in dignity among the creatures).  She is the member of the church. Why? She was also redeemed by God. What is the church? Church is the community of the redeemed. However Mary is the pre-eminent member of the church because she was redeemed in a prominent manner.
3. Mary is the mother of the church:
Jesus is the head
Church is the body
Mary is the mother of Jesus the head. Therefore Mary is the mother of his church the body. It means, mother of the head is also mother of the body. May blessed Mother Mary, lead us in her own way.
Bro. Emmanuvel

அடுத்தவன் கண்ணீரில் வாழ்பவனும்
டாஸ்மார்க் தண்ணீரில் வாழ்பவனும்
இறக்கை இல்லா பறவைப் போல,
பறப்பதைப் போன்று இருந்தாலும்
படுத்தே கிடக்கிறான்…

சகோ. ஜஸ்டின் பிரதீப் 

சிறகை இழந்த பறவை சிறையிலிருந்து…


சொந்தங்கள் எனக்கு இல்லை – சில
பந்தங்களும் எனக்கு இல்லை – ஆனால்
பல நெஞ்சங்கள் மட்டும் என்னை
பலமாய் அன்பு செய்கின்றன – அவை
என்னை போல உறவை இழந்த சிட்டுக்கள்
உறவை மறந்த சிட்டுக்கள் - ஆனால்
அன்பை ஆழமாக அன்பு செய்பவர்கள் நாங்கள்….

சகோ. அருள் செபாஸ்டின்

அன்னை


நான் கருவாய் இருந்தேன்
கருப்பை ஆனாய்
உறங்க நினைத்தேன்
கட்டில் ஆனாய்
இசையை விரும்பினேன்
தாலாட்டு ஆனாய்
நடக்க முயற்சித்தேன்
நடைவண்டி ஆனாய்
நோய்வாய் பட்டிருந்தேன்
மருந்து ஆனாய்
இருட்டில் இருந்தேன்
ஒளி ஆனாய்
வெயிலில் காய்ந்தேன்
நிழல் ஆனாய்
மழையில் நனைந்தேன்
குடை ஆனாய்
சோற்றுடன் நிலவை ஊட்டி – உடல்
சேற்றைச் சேலையால் துடைத்து
பாலைவனச் சோலை ஆனாய்
உலகில் எல்லாம் ஆனாய்
என் உயிரினும் மேலானாய்
என்றும் அமிழ்தமானாய்….

சகோ.  ஜஸ்டின் பிரதீப்

மரியாள்


தந்தை இறைவனுக்கு
தயங்காமல், “ஆம்” என்று
தாயானார் இறைவன் இயேசுவுக்கு.

வார்த்தைகளால் வடிக்க இயலாது
விலைமதிப்பில்லா கற்பின் பெருமையை
தலைமகனைப் பெற்றதால்
கன்னிமை கறையா தாய் ‘மரியாள்.’

இறைவனால் எதுவும் இயலும் என்பதை
இதயத்தில் இருத்திய விசுவாசத் தாய்.
நாடி வருவோரை நலன்களால் நிரப்பி
நன்மைகளால் அரவணைக்கும் அடைக்கலத்தாய்
மன இருள், உடல் பிணி நீக்கி
மன வலிமை தரும் ஆரோக்கிய தாய்.
பாவ உலகை மீட்க,
மனிதன் மனமாற்றம் பெற,
மன்னவன் இயேசுவைத் தந்த மீட்பின் தாய்.
துன்புறுவோரின் துயர் நீக்கி
வாழ்வில் புது வசந்தம் தரும்
விண்ணகத் தாய் இவர் மறுமலர்ச்சியின் தாய்.

சகோ. அருள் செபாஸ்டின்.

உன் அயலானை அன்பு செய் - லூக் 10:27


ஒரு கவிஞனின் கதறல், 

என் மழலைப் பருவத்தில், என் தாய் என்னை அரவணைத்துக் கொண்டு “இவன் எனது பிள்ளை,” என்று சொல்லி அரவணைத்தாள். மழலை பருவம் முடித்து, பள்ளி பருவத்தில், என் அருகில் இருந்தவன், என்னை சுட்டி காட்டி, இவன் என் நண்பன் என்றான். 

கல்லூரியில் காலடி வைத்த நாள் முதல், இவன் எனது ஊரைச்சார்ந்தவன், மாவட்டத்தை சார்ந்தவன், ஜாதியை சார்ந்தவன், குலத்தை சார்ந்தவன், வழிமரபை சார்ந்தவன் என்று ஒவ்வொருவரும் என்னை கூறு போட்டுக் கொண்டார்கள். 

இவ்வாறு எங்கு பார்த்தாலும் நான், எனது, என்று சொல்லக்கூடிய சமுதாயத்திலிருந்து விரைந்து எழுந்து, தப்பி பிழைத்தவனாய் இறைவனடி அமர்ந்து “இறைவா, இனிமேல் நான் எங்கு செல்வேன்? என்று கேட்டேன். அதற்கு இறைவன், நீ மீண்டும் அவர்களிடமே சென்று, அவர்களை அன்பு செய்” என்றார்.

பிரியமான கிறிஸ்தவர்களே!

நாம் நற்செய்தியில் வாசிக்க கேட்கிறோம், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், போதகரே நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கின்றார். அதற்கு இயேசு, “உன் முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரை அன்பு கூர்வாயாக, உன் மீது நீ அன்பு கூர்வது போல், உன் அயலான் மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார். 

தந்தை இறைவனின் அன்பு எத்துனை உயர்ந்தது என்பதற்கு, பழைய ஏற்பாட்டை படிக்கின்ற போது, இஸ்ராயேல் மக்களை மீட்பதற்காக, அவர்களுடைய எதிரிகளை அடியோடு அழித்து விடுகின்றார். அவர்கள் மீது கொண்ட அளவிட முடியாத அன்பினால் அவர்கள் செய்கின்ற பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். புதிய ஏற்பாட்டிற்கு வருகின்ற போது, தந்தை இறைவன், அன்பின் பரிசாய் தன் மகனையே பலியாய் கொடுத்தார். 

பிரியமானவர்களே! 
“அன்பு” என்ற வார்த்தை இன்றைய நவீன உலகில் உருகுலைந்து அதன் உட்பொருளை உணர முடியாத நிலையில் உள்ளது. அதன் உட்பொருள்தான் என்ன என்று ஆராய்வகற்காய், அடுக்கடுக்காய் அகராதிகளை புரட்டினேன், அவையெல்லாம் உண்மையான அர்த்தத்தை கொடுப்பவையாக இல்லை. படிப்பறிவு (அதாவது புத்தகங்களில் இருந்து அறிவை வளர்த்துக்கொள்வது) பட்டறிவு (தனது சொந்த அனுபவங்களில் இருந்து அறிவை வளர்த்துக் கொள்வது) என்று இருவகை உண்டு. அவற்றுள் எனது பட்டறவின்படி, “அன்பு என்பது, தன்னை மறந்து பிறருக்காய் தன்னையே இழப்பது.” 
ஆம், நாம் நம்மை மறந்து, பிறருக்காய் வாழ்பவர்களாக, பிறரை, நான், எனது இனம், மொழி, ஜாதி, குலம் இவற்றையெல்லாம் கடந்து அன்பு செய்பவர்களாக இருக்கின்ற போது, நாம் உண்மையான கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக வாழ்கின்றோம். 

நமக்கெல்லாம் தெரியும், “மகாத்மா காந்தியடிகள் வக்கீல் படிப்பு முடித்து மாதம் ஆயிர கணக்கில் சம்பாதிப்பவர். இருப்பினும் அவற்றையெல்லாம் துறந்து, நாட்டு மக்களுக்காக போராட முன்வந்தார். ஒரு முறை சுதந்தர போராட்டத்தின் போது, தன் மனைவியிடம் இருந்த நகைகளை விற்பதற்காக கேட்டார். அவரது மனைவி தமக்கு கல்யாண வயதில் பிள்ளைகள் இருப்பதை அறிந்தவராய் அந்த நகைகளை தர மறுத்து விடுகின்றார். பின்னர் காந்தியடிகள், தனது குழந்தைகளை அழைத்து, அப்போதைய அவசிய தேவை என்ன என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் வழியாகவே மனைவியிடமிருந்து நகைகளை பெற்று, அதனை விற்று தன்னோடு பணியாற்றியோர்க்கு செலவு செய்ததாக ஆசிரியர் குறிப்பிடுக்கின்றார். அதே ஆசிரியர் காந்தியடிகளை பற்றி பின்வருமாறு கூறுகின்றார், “He is a man who walked in the way of self – denial.”

அன்று காந்தியடிகள் மட்டும் எனக்கு என்னுடைய பதவி முக்கியம், எனது பிள்ளைகள், மனைவிதான் முக்கியம் என்று நினைத்திருந்தால், இன்றுவரை நமது நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்திருக்க கூடும். ஆனால் அவர், தன்னை மறந்து, நமது நாட்டையும், நாட்டு மக்களையும் நேசித்ததால்தான், தன் ஆடையை கூட இழந்து நிற்கின்றார் கல்வாரியில் நின்ற இயேசுவை போல.
அன்னை தெரசாவை பற்றி நன்றாக அறிந்து இருக்கின்றோம். அன்று அன்னை தெரசா, அவரை பற்றி நினைத்திருந்தால் தனது துறவற வாழ்க்கை, துறவற சபை, சபையின் பள்ளிக்கூடம் என இவற்றோடு அவரது வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் இவர் தன்னை பற்றியோ, உலகம் பேசும் வசைமொழிகளை பற்றியோ கவலைபடாமல், பிறர் மீது கொண்ட தெய்வீக அன்பால் பணியாற்றி நம் அனைவருக்கும் அன்னையாகவும், முன்மாதிரியாகவும் திகழ்கின்றார். 

ஆம், நம்முடைய அக கண்களை சற்று நமது அயலானின் மீது செலுத்துவோம். மற்றவர்கள் வறுமையில் வாடும் போது, நம்மோடு இருப்பதில் கொஞ்சம் பிறரோடு பகிர்ந்து வாழ்வோம். அடுத்திருப்பவர் வேதனையில் வாடும்போது, நமது நேரத்தை கருதாமல், ஆறுதலான வார்த்தைகளால் தேற்றுவோம். நாள் முழுதும் தனிமையில் வாடி, தன்னை மறந்து வாழும் முதிர்ந்த பெற்றோர்களுடன் எத்துனை நேரத்தை செலவழிக்கிறோம் என்று சிந்திப்போம்.

இறுதியாக எங்கேயோ படித்த இருவரிகள்
Forget yourself for others and others will never forget you” – பிறருக்காக உன்னை மறக்கின்றபோது, அவர்கள் ஒருபோதும் உன்னை மறப்பதில்லை.” ஆமென்.

சகோ. சின்னப்பன் - மெய்யியல்

மன்னிப்பு


மன்னிக்கும் மனமே இறைவன் வாழும் இல்லிடம்
இறை இயேசுகிறிஸ்துவின் விலையேற பெற்ற இரத்ததால் விடுதலை பெற்றுள்ள என் இனிய இறை சகோதரமே!

கணிணியின் கண்ணாடி திரையில் கரைந்து போய் கொண்டிருக்கிறது மானுடம். எப்பக்கம் நோக்கினும் போட்டி, பொறாமை, சுயநலம், வெறுமை, வெறுப்பு….. இத்தகைய சூழலில் இன்றைய வார்த்தை வழிபாடானது “மன்னிப்பு” என்னும் மலரை தாங்கி வருகிறது.

மன்னிப்பு என்ன ஒரு அருமையான வார்த்தை….
உச்சரிக்கும்போதே உணர்ச்சிகள் சிலிர்த்தெழுகின்றன
உணர்கின்றபோது உறவுகள் உயிர்த்தெழுகின்றன
உணர்த்தும்போதோ உண்மைகள் விழித்தெழுகின்றன. 
ஆம், இத்தகைய ஒரு இனிமையான இறை செயலை குறித்து சிந்திக்க, செயலாற்ற இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மனதோடு மனம் பேசிய காலம் போய் அறிவின் அந்தரங்கத்திலே ஆராய்ந்து பார்த்து வாழ பழகி விட்டோம். ஆனால் இன்று இறைவன் நம்மை பார்த்து “மனிதனே நீ அறிவோடு ஆராய்ந்தது போதும், இதயத்திற்குள் இறங்கி வா. இந்த மனுகுலமானது மண்ணில் ஆண்டுகள் ஆயிரம் வாழ வேண்டுமா? மன்னிக்க கற்றுக் கொள்!” என்று அழைப்புவிடுக்கிறார். 

“வம்பு சண்டைக்கு போக மாட்டேன், வந்த சண்டையை விடமாட்டேன்” என்ற பழமொழியை நாம் கேட்டதுண்டு. நான் நல்லவன். யாருக்கும் எந்த தீங்கும் மனதால் கூட செய்ததில்லை. பிறகு, ஏன் எனக்கு தீங்கிழைப்பவனை, எனக்கு இடையூறு செய்பவனை நான் ஏன் மன்னிக்க வேண்டும்? என்பதே நமது வாதம். ஆனால் இன்று வாசிக்க கேட்ட அனைத்து வாசகங்களும் நாம் ஏன் மன்னிக்க வேண்டும்? எதற்க்காக மன்னிக்க வேண்டும்? யாரை மன்னிக்க வேண்டும்? எப்படி மன்னிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றன. 

1. ஏன் அல்லது எதற்காக மன்னிக்க வேண்டும்?
  • ஏனெனில் நாம் அனைவரும் இறைசாயலில் படைக்கப் பட்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் அனைவரும் இறைமக்களாய் இணைக்கப்பட்டிருக்கிறோம். அயலாரில் ஆண்டவரை காண்கின்ற போது நம் குறை, நிறைகளை மன்னிப்பது நம் கடைமையல்லவா? 
  • மன்னிப்பதென்பது இறைவனின் இன்றியமையாத குணமாகும். தனக்கென ஒரு மக்களினத்தை தேர்ந்து, அவர்களை தனதாக்கி கொண்ட இறைவன், அவர்கள் வேற்று தெய்வங்களை நாடிச்செல்கையில் அவர்களை அழித்துவிட எண்ணுகிறார் ஆண்டவர். ஆனால் மோயிசனோ அம்மக்களுக்காக பரிந்து பேசுகிறார். எனவே இறைவன் அவர்களை மன்னித்து ஏற்று கொள்கிறார் என்று இன்றைய முதல் வாசகத்திலே வாசிக்க கேட்டோம். அந்த இறை சாயலை பெற்றுள்ள நாம் அவரின் குணநலன்களை கடைபிடிப்பது கட்டாயமல்லவா?
  • மன்னிப்பு நம்மில் மகிழ்ச்சியை கொணர்ந்து உடைந்து, உருகுலைந்து போன உள்ளங்களை உருபெற செய்கிறது. கனமான இதயங்கள் கனிவுற்று காயங்கள் குணபடுத்தப்படுகின்றன. உருவிழந்து, உணர்விழந்து வரும் ஊதாரி மைந்தனை, ஓடோடிச் சென்று, அள்ளி அரவணைத்து முத்த மழை பொழிகையில் அந்த தந்தையின் அன்பு மட்டுமல்ல அங்கே அவரின் மன்னிப்பும் வெளிப்படுகிறது. இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம். கனமான இதயங்கள் இடம்மாறி அங்கே மகிழ்ச்சி மனங்களில் குடிக்கொள்ளச் செய்கிறது. 
  • ஆக மன்னிப்பதில் நமது கடமையும், கட்டாயமும் மட்டுமல்ல, நமது உடல் உள்ள நலமும் அடங்கியிருக்கிறதென்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

2. யாரை நாம் மன்னிக்க வேண்டும்?
  • பல நேரங்களில் நம்மையறியாமலேயே சில, தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. எனவே தன்னை அறியாமல் நமக்கு தீங்கிழைப்பவர்களை நாம் மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தூய பவுல் அடிகளார் தன்னைப் பற்றி கூறுகையில், தான் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட தகுதியற்றவர் என்று கூறுகிறார். ஏனெனில் தான் இயேசுவை பழித்துரைத்து, இழிவு படுத்தி, துன்புறுத்தியதாக கூறுகிறார். இருப்பினும் தான் அறியாமையில் அவ்வாறு செய்ததால், பாவிகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளவந்த இயேசு பாவிகளுள் முதல் பாவியாகிய தன்னை ஏற்றுக் கொண்டார் என்று தெளிவாக இன்றைய இரண்டாம் வாசகத்திலே கூறுகின்றார். 
  • தன் தவறை உணர்ந்து உண்மையாக மனம் வருந்தும் யாரும் மன்னிப்பை பெறும் உரிமை பெற்றுள்ளனர். ஏனெனில் இறைவன் தன் தவறுகளுக்காக மனம் வருந்தும் உள்ளத்தைத்தான் எதிர்பார்கிறார். நமக்கெல்லாம் 1980 களில் பிரபலமாக பேசப்பட்ட திரு ஆட்டோ சங்கரைப் பற்றி தெரியும். ஆனால் அவர் சிறையில் இருந்து விடுதலை அடைந்த பின், இந்த சமுதாயம் மனம்திருந்திய அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. எங்குசென்றாலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. யாரும் அவரை நம்ப வில்லை. “மனம் திருந்திய என்னை இந்த சமுதாயம் மனிதானாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என்று அவரே தன் நிலையைப் பற்றி கூறுகிறார். 

3. எப்படி மன்னிக்க வேண்டும்?
  • தன்னை விட்டு விலகிச் சென்ற தன் மக்களை மன்னிப்பதில் தன் சட்டத்திட்டங்களையெல்லாம் ஒரு பொருட்டாக ஆண்டவர் எண்ணவில்லை என்று எரேமியா இறைவாக்கினர் கூறுகின்றார். எனவே மற்றவரை மன்னிப்பதில் ஏற்படுகின்ற துன்ப துயரங்களை ஏற்று கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பல நேரங்களில் நம்மோடு மனத்தாங்கலாய் இருக்கும் நபரின் முகமே அவர் நம்மிடம் மன்னிப்பை எதிர்பார்கிறார் என்று தெரிவித்து விடும். மற்றவர்கள் யாரும் தன் மகனை ஏதும் சொல்லி விட கூடாது என்றுதானே ஊதாரி மைந்தனின் தந்தை அவன் தூர வரும் போதே ஓடிச் சென்று அவனை அள்ளி அரவணைத்துக் கொள்கிறார். எனவே மற்றவர்கள் ஏளனமாக பார்ப்பதற்கு முன்பே நம் மன்னிப்பை அவர்களுக்கு வழங்கி விட வேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுபடுத்துகின்றது. 
  • அதுமட்டுமல்லாமல், ஏழு முறையல்ல எழுபது தடவை ஏழு முறை என்று (மத். 18:21) வாசிப்பது போல் நாம் செயல் பட வேண்டும். 
ஆதி. 33:10 நாம் வாசிக்கின்றோம், “மன்னிப்போரின் முகம் கடவுளின் முகம் போன்றது.” தன்னை ஏமாற்றி தனக்குறிய ஆசிரை தந்தையிடமிருந்து பறித்துக்கொண்ட யாக்கோபை, ஏசா முன்வந்து மன்னிக்கிறார். அங்கே மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. உறவுகள் புதுபிக்கப்படுகின்றன.
ஆக, மன்னிப்பதில் ஏற்படுகின்ற சிறு சிறு வருந்தங்களை ஏற்றுக் கொண்டால், அங்கே அளவில்லாத மகிழ்ச்சி பிறக்கும். மன்னிப்பின் இறைவன் வழி வாழ முற்படுகின்ற நாமும் அவரை பின்பற்ற வேண்டாமா? கர்த்தர் கற்பித்த ஜெபத்திலே நாம் தினமும் ஜெபிக்கிறோம், “எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல் எங்களையும் மன்னியும்,” என்று ஆனால் அதன்படி வாழ முற்படுகின்றோமா?

ஆம், என் அன்புகுறிய இறை சகோதரமே!
நம் ஜெபங்கள் வாழ்வாகாவிடில் அதனால் வரும் பயனென்ன? இத்தகைய மன நிலையில்தான் அந்த மூத்த சகோரனும் இருந்தான். தந்தைக்கு கீழ்படிதலுள்ளவனாய் இருந்தாலும், மனம் வருந்தி வீடுவரும் இளைய மகனை தானும் மன நிறைவுடன் ஏற்றுக் கொண்டானா? இல்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. மனம்வருந்தி வீடு வரும் தன் சகோதரனை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறான். அதுமட்டுமல்லாது, கண்டும் காணாதது போன்ற மனநிலையை வெளிபடுத்துகிறான். இது இன்னும் கொடுமையானது. 

இத்தகைய மனநிலையை நாம் தினமும் அனுபவிக்கிறோம். தவறு செய்த கணவனை ஏற்றுக் கொள்ளாத மனைவி, மனவருந்தும் மனைவியை கண்டுகொள்ளாத கணவன், தன்னை கைவிட்டு விட்ட பிள்ளைகளை கறித்துக் கொட்டும் பெற்றோர், என்னை ஓரங்கட்டும் உடன் பணியாளன் - என எத்தனையோ உருவங்களில் இந்த மூத்த மகன் உலாவருகிறான். இதற்கெல்லாம் காரணம் தான்தான் சரி என்று தன்னல வட்டத்திலே வாழ்வதுதான். 

இதோ இன்னும் சிறிது நேரத்தில் நற்கருணை வடிவில் வர இருக்கின்ற இயேசு நம்மை பார்த்து கேட்கிறார். “மகனே! மகளே! நீ என்னை ஏற்றுக்கொள். நான் உன்னில் வரும்போது நீ நானாகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும் உன் பகைவரும் நானாகின்றனர். அவர்களில் நீ என்னை ஏன் காண மறுக்கிறாய்? 
இறைவன் விடுக்கும் இந்த வினாவிற்கு நமது பதில் என்ன?

சகோ. போஸ்கோ

நம்பிக்கையே நல்லது


இன்று நீ பார்ப்பவர்கள் எல்லாம்
உன்னை ஏமாற்றலாம்!
நாளை
உன்னை ஏமாற்றியவர்கள் எல்லாம்
உன்னை எதிர்பார்க்கலாம்
இன்று
நீ இரைப்பதெல்லாம்
உளறல்கள் ஆகலாம்
ஒரு நாள்
உன் உளறல் கூட
தலைப்புச் செய்தியாகும்
இளைஞனே
எப்போதும் நம்பிக்கையே நல்லது
காத்திரு தோழா!
காலம் வெல்லும்!


சகோ. செபஸ்தியான்

பகிர்வு


உருப்படைத்து, உயிர்க்கொடுத்து நம்மை இம்மண்ணிலே உலவவிட்ட இறைவன், நம்மீது கொண்ட அன்பினால் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பி, மீட்பளித்து, தம் உண்மையான அன்பினை எண்பித்ததோடு நாம் எத்தகைய பகிர்வு வாழ்வு வாழ வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறார். உறவுகள் மேன்மையடைய பகிர்தல் அவசியம். நம் உற்றத்துணையான இயேசுவை உற்று நோக்குகின்ற போது அவர் எத்தகைய பகிர்வு வாழ்வை மேற்கொண்டார் என்பதை நம்மால் நன்குணர முடியும். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதே தன் உணவாகக் கொண்டிருந்த இயேசு தன்னையே பிறரின் வாழ்விற்காய் அர்ப்பணித்தார். அத்தகைய அர்ப்பண வாழ்வை சிறப்புடன் ஆற்றக் காரணம் தன்னையே மறுத்து, பிறருக்காய் உயர் நோக்கில் வாழ்ந்ததே அவரின் சிறப்பு. நிறைவான மகிழ்ச்சியை நம்மால் எப்போது எய்த இயலும் தெரியுமா? பிறருக்காய் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து வாழ்கிறபோது மட்டுமே இத்துணை இனிமையளிக்கும், அர்த்தமுள்ள வாழ்வினை வாழ்ந்திடும்போதுதான் பரமனின் பரிசுத்த அன்பை சுவைத்தவர்கள் என்ற நற்பேறு பெறுவோம். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தார். (மத் 14:17-21) இப்புதுமை இயேசு கிறிஸ்துவின் பகிர்விற்கு நற்சான்றாய் விளங்குகின்றது.

வாழ்க்கை சுமையா? சுவையா? அதை நாமே சுவையாக மாற்றிக்கொள்ள முடியுமா? எப்படி? காயப்பட்ட இதயங்களைக் குணப்படுத்தும் போது! கறைபடிந்த ஆன்மாக்களை தூய்மையாக்கும்போது! வேதனையுறும் உள்ளங்களைத் தேற்றும் போது! சுமையாக இருக்கும் வாழ்க்கை சுகமாய் மாறும். விண்ணையும் மண்ணையும் இணைப்பதற்காக, விண்ணினின்று வந்தார் இயேசுகிறிஸ்து. சிதறிப்போன ஆடுகளை ஒன்றுபடுத்தவே, புத்துயிர் அளிக்கும் ஆவியாரால் பிறரோடு பகிர்ந்து வாழவே எம்பெருமான் மண்ணிற்கு வந்தார். இதன் பயனாகத்தான் குருடரும் செவிடரும் நலம் பெற்றனர். 

 “மனித வாழ்வு மாண்புற, குடும்ப வாழ்வு இன்புற,
சமூக வாழ்வு நலம்பெற, ஆன்ம வாழ்வு வளம்பெற
பகிர்வு வாழ்வு வாழும் பொழுதே, தொடர்பயணம், புனித பயணமாகும்…..
பயணிக்கப் புறப்படுவோம், பகிர்ந்து வாழ முற்படுவோம்!”

சகோ. சதீஸ் ஏசுதாஸ்

எங்கே மனிதம்?


மனிதன் மனிதனாய் இருந்தான்.
மறைந்திட்ட மனிதம் சொல்லிக்கொண்டது
மனிதன் வாழ்கிறான் என்று...!
மனிதன் மிருகமாய் உருமாறினான்
காட்சிதந்த மனிதம் சொல்லிக்கொண்டது
மனிதனா வாழ்கிறான்? என்று....!
வாழக்கற்றவன்
பிறரை வாழ்விக்க கற்கவில்லை
மனதால் மதி கற்றவன்
மதியின்றி மனிதம் மறந்தான்
வசதிகளால் வறுமை பழித்தான்
மதிப்பினால் 
மரியாதையும் மறந்தான்.
மனிதம்! 
துணைஉயிர் தோன்றியவுடன் 
மலர்ந்திருக்க வேண்டியது
துயரால் உயிர் பிரிந்தும் 
மலர மறுக்கிறது
கல்லுக்குள் ஈரம் கண்டவன் 
மனிதனில் மனிதம் காணவில்லை
கூட்டுக் குடும்பத்தில் 
குடியேற தெரிவதில்லை மனிதனுக்கு 
மனிதம் காக்கும் மண்டபங்களாய் 
மலிந்து காணப்படுகிறது
முதியோர் இல்லங்கள்!
கட்டாயக் கல்வி 
புகட்டிய பெற்றோர்கள்
கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
முதியோர் இல்லங்களுக்கு….!
மந்தைகளில் சில 
கவர்ச்சி மனிதங்கள்
மலிவாய் விற்கப்பட்டனர். 
சில கருப்பு மனிதங்கள்
அதையும் கவர்ந்து சென்றன 
முந்துவோர்க்கு சிறப்பு 
சலுகையும் உண்டாம்!
அரசியலில் மனிதமா?
ஆண்டவா! 
அறியா மக்களிடம் 
நோட்டை வாங்கி 
துண்டுக்களாக்கி கொடுப்பதுதான்…
காந்தி படத்திற்கு பின்னாலல்லவா 
கள்ளப்பணம் கண்டுபிடிக்கப்பட்டன!
கடலே இல்லாத ஊரிலா கப்பல்
அதையும் கேட்டான் 
கதவே இல்லாத ஏழை!
சில மனிதங்கள்
ஓட்டிற்காகவே 
வளர்க்கப்படுகின்றன. 
மதவாதிகளிடம் மனிதம்….. 
அது மதிய நிலவல்லவா?
மதங்களை மடியில் கிடத்தி 
பாலூட்டி வளர்த்ததில் 
எழுந்துசென்று மனிதம் நோக்க 
காலமில்லையாம் 
வெறிநாய் என்றாலும் 
மதவெறிநாய் கடித்தால்
மகிழ்ச்சி…!
மனங்களில் தேடாத இறைவனை 
மதங்களில் தேடி 
மறுத்துவிட்டன மனங்கள்!
நீதிமன்றங்களில் 
நிச்சயம் இருக்குமே மனிதம்!
நிகழ்வதை நம்பமுடியவில்லை…!
காசின்றி காதுகேட்பதில்லை 
வழக்கறிஞருக்கு 
கட்டணமின்றி கதவு 
திறப்பதில்லை…..
பூனையை மீட்க குதிரை
விற்கப்பட்டது. 
குதிரையை மீட்க இருந்த 
குடிசையும் விற்கப்பட்டது…..
குருடன் கண்டதாய் சாட்சி கூற 
அதை செவிடன் கேட்டு 
ஊமையன் பொய் பேசுகிறான்
ஓ… 
புரிந்துவிட்டது பொய்களை
நிறுக்கத்தானோ
நீதி தராசு…?
இதயம் நின்று துடித்தது…?
மருத்துவமணையில் கூடவா
மனிதம் குறைவு….!
உயிர்காக்கும் கட்டிடத்தில் 
மனிதம் காக்க 
சிறுகம்பி கூடவா இல்லை…
பணத்திற்காய் மருந்திட்டவர்கள்
மனிதம் கண்டு 
முகம் சுளித்தார்கள்
ஆடைகளில் இருக்கும் வெள்ளை 
அவர்களின் அகங்களில்
இல்லை…..
உணரப்பட்டது…….!
தீர்க்க முடியா நோயினால்அல்ல!
திரட்ட முடியா பணத்தினால்….!
மனிதத்தை மட்டும் மறந்தவன் 
மறக்கவில்லை
விலங்கிற்கும் ஆறாம் 
அறிவை புகுத்த….
சிங்கத்தை வேடிக்கை காட்ட… 
கிளியை சீட்டெடுக்க…..
யானையை பிச்சையெடுக்க…..
ஐயோ! 
இறைவா நகம் வளர்ந்த அளவு கூட 
மனிதம் வளரவில்லையே!
குரங்கிற்கே குட்டிகரணம் போட 
கற்றுக் கொடுத்தவன் 
குழந்தையையா விட்டுவைப்பான்!
ஏதோ கற்றுக்கொண்டது
காசு கொடுத்தால்தான் 
கடைக்கே செல்கிறது…
விருந்தாக இல்லையெனினும் 
மருந்தாக ஊட்டியிருக்கலாம் 
மனிதத்தை….
படித்தவர்
வாங்கும் சிறப்பு சான்றிதழை விட
பதவியில் இருப்பவரின்
சிபாரிசு சான்றிதழ்
சற்று அதிகமாகவே சாதிக்கிறது
பதவியில் மனிதம் 
பனியளவு கூட இல்லை!
கருக் கலைக்கப்பட்டும் 
கன்னிகளாய் சில பெண்கள்…. 
உறவு அங்கீகரிக்கப்பட்டும் 
கலைக்கப்படும் சில கருக்கள்!
எங்கே மனிதம்?
இளைஞரிடம் இருப்பதாக 
தெரியவில்லை
இருட்டுக்குள் படம் பார்ப்பவர்களிடம் 
மனிதம் மங்களாகத்தானே தெரியும் 
பெண்களுமா மாறிவிட்டார்கள்
மானம் என்றால் 
மரணம் கொள்வார்களே!
மனிதம் என்றால் 
என்ன செய்வார்கள்?
தொலைக்காட்சியின் தொடர்கதையில்
தொலைந்தவர்கள் 
மனிதம் எப்படி தேடுவார்கள்?
மனிதம் மறந்தவர்களுக்காய்
மாநாடு போடுவோம்!
மனிதம் மறந்த முதியோரா?
காய்ந்த மனதை 
அன்பால் உழுவோம் 
மனிதம் மறந்த இளைஞரா?
இங்கும் அங்கும் இலைகளாய் 
துளிர்விடும் மனிதத்தை 
மறவாமல் போற்றுவோம் 
பால் குடிக்கும் குழந்தையா?
வீரத்தை ஊட்டியது போதும், 
மனிதம் ஊட்டுவோம் 
குடிக்கமறுத்தால்
மருந்தாய் ஊட்டுவோம் !
மனிதம் காக்கும் பணி 
நம் 
மனதிலிருந்து முதலில் துவங்கட்டும் 

சகோ. பிரான்சிஸ் அமலதாஸ்.

நிழல்



தென்றல் தவழ காரணமான
மரத்தை வெட்டி
களைத்த மனிதன்
நெருப்பு போன்று சுட்டெரிக்கும்
சு10ரியனின் வெப்பம் தாங்காமல்
இளைப்பாறத் தேடுகிறான்…..
மரத்தின் நிழலை.

சகோ. செல்வகுமார்

துன்பம்


கி. மு: கிறிஸ்துவைப் பின்பற்றும் முன்
கி. பி: கிறிஸ்துவைப் பின்பற்றியப் பின்

கி . மு
துன்பமே எனக்கென்ன நீ நண்பனா?
என்னுடைய வாழ்வில் அடிக்கடி நீ.
துன்பமே எனக்கென்ன நீ
எதிரியா?
பழிவாங்கி பார்த்து சிரிக்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ மழையா?
என்னை முழுவதும்
நனைத்து விடுகிறாய்!
துன்பமே எனக்கென்ன நீ
தூரத்து உறவினரா?
அடிக்கடி எனக்கு போன் செய்கிறாய்!
துன்பமே என்கென்ன நீ தீவிரவாதியா?
சுட்டு சுட்டு மயானத்தில் எரிக்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ
தினமும் வரும் பிறந்த நாளா?
தினமும் கைகொடுத்து
வாழ்த்து தெரிவிக்கிறாய்!
துன்பமே எனக்கென்ன நீ
கல்லூரி காதலியா?
கனவிலும் என்னை தொடருகிறாய்.

துன்பமே எனக்கென்ன நீ
சில் வண்டுகளா?
பூ போன்ற என்னில்
பூதமாக வந்து அமர்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ
life time recharge 
வாழ்நாள் முழுதும்
என்னுடன்……..

கி . பி
இயேசுவே!
எனக்கென்ன நீ
இறப்பினும் வாழ்வா?
நல்லவேளை உன்னை
பின்பற்றினேன்,.
இறப்பதற்கு முன் தெரிந்ததே!
இறந்தபின் தெரிந்திருந்தால்
முடிவில்லா வாழ்வு
முடியாமல் போயிருக்கும்.
முற்றிலும் துறந்து
முழுமையாய் பின்பற்றுவோம்
துன்பங்களும் துகள்களாய் மாறும்!..

சகோ. டேவிட் ரஜேஸ்

நல்ல சமாரியன்


அன்பு இதயத்தில் சுரக்கப்பட வேண்டும்! சுரண்டப்பட கூடாது!  இவ்வுலகில் இரு வகையான அன்பு உண்டு.  1. இறையன்பு, 2. பிறரன்பு. கடவுள் நம்மீது கொண்ட அன்பு அல்லது நாம் அவர் மீது கொள்ளும் அன்பு இறையன்பு எனப்படும். நம் சகோதர சகோதரரிகளோடு கொள்ளும் அன்பு அல்லது அவர்கள் நம்மீது கொள்ளும் அன்பு பிறரன்பு எனப்படும்.
பிறரன்பில் குறைகள் ஏற்பட காரணம் என்ன? நம்மிடம் இருக்கும் சுயநலம் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய நற்செய்தியில் ஒரு மனிதன் ஜெருசலேமிலிருந்து ஜெரிக்கோவுக்கு செல்கிறான் என வாசிக்க கேட்டோம். ஜெருசலேம் என்பது கடவுள் வாழக்கூடிய இடம். விவிலியத்தில் ஜெருசலேம் தேவாலயத்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜெருசலேம் ஒளியின் இடமாக இருந்தது. ஜெரிக்கோ, பகைவர்கள் தங்கி வாழக் கூடிய இடமாக இருந்தது. பாவங்களை கட்டிக்கொண்டு, பிறரின் பொருட்களை கொள்ளையடித்து, சாபத்தை பெற்றவர்களாய் இருளில் வாழந்துக் கொண்டிருந்தனர். நற்செய்தியில் கூறப்பட்ட மனிதனோ ஒளிமிகுந்த ஜெருசலேத்மை விட்டு இருள் நிறைந்த ஜெரிக்கோவை நோக்கி செல்கிறான். பகைவர்களால் தாக்கப்பட்டு செல்வங்களை இழந்து குற்றுயிராய் விடப்படுகின்றான். “பழைய ஏற்பாட்டில் தொடக்க ஆகமத்தில் ஆதாம் ஏவாள் கடவுளின் பிரசன்னத்தில் வாழ்ந்து வந்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளையில் அவர்கள் ஒளியை விட்டு, எந்த மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னாரோ, அந்த இருளான பகுதியை நோக்கி சென்றார்கள். பாவம் என்னும் பாதள குழியில் விழுந்தனர். புதிய ஏற்பாட்டில் இந்த மனிதனும் அதே நிலைக்குதான் ஆளாகியிருக்கிறான். (அருளப்பர் 8: 34) பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமை. (உரோமையர்) 

பாவத்தின் சம்பளம் மரணம்

முதலில் ஒரு குரு தற்செயலாய் செல்ல நேர்ந்தது. அடிப்பட்டுகிடந்தவனை காப்பாற்ற முன் வரவில்லை. காரணம் என்ன? யூதர்களின் சட்டப்படி குரு இறந்தவனையோ அல்லது நோயுற்றிருப்பவனையோ தொட்டால் அல்லது அவன் அருகில் சென்றால் அவர் 7 நாட்கள் கோயில் பணிகள் எதையும் செய்ய முடியாத வண்ணம் தீட்டு என்று ஒதுக்கி விடுவார்கள். எனவேதான் அவர் தன் வழியாய் போனார். இரண்டாவதாக ஒரு லேவியன் ஒருவன் வருகிறான். அவனும் உதவி செய்ய முன் வரவில்லை. ஏன்? நான் ஒரு வேளை அவனை காப்பாற்ற அருகில் செல்லும் போது கள்வர்கள் ஒளிந்திருந்து என்னையும் தாக்க முற்பட வாய்ப்புண்டு என்று யூகித்து பயத்துடன் ஒதுங்கி சென்றான். மூன்றாவதாக நல்ல சமாரியன் வருகிறார். அவனை பார்த்தவுடன் இரக்கம் கொண்டு, அருகில் வந்து அவனின் காயத்திற்கு கட்டுபோடுகிறார். (ஓசே 6:12) வாருங்கள் நாம் அவரிடம் செல்வோம். அவரே நம் காயங்களுக்கு கட்டுபோடுவார். 

ஆம் பாவத்தில் விழுந்து குற்றுயிராய் துடித்துக்கொண்டிருக்கும் நம்மை அவர் மடியில் கிடத்தி பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். எண்ணெய் வார்த்து காயங்களை கட்டுவது, நம்மை மன்னித்து ஆவியாரின்  வல்லமையால் நிரப்புவதை குறிக்கின்றது. பிறகு அவனை ஒரு சாவடிக்கு கொண்டு சேர்க்கிறார். அந்த சாவடிதான் நம் கத்தோலிக்க தாய் திருச்சபை. இந்த திருச்சபையை நிறுவியவர் இயேசுக் கிறிஸ்து. அந்த நல்ல சமாரியனாகிய இயேசு அந்த சாவடிக்காரரிடம் இரண்டு தெனாரியத்தை கொடுக்கிறார். இரண்டு தெனாரியம் என்பது இயேசுவின் இரண்டு கட்டளைகளை குறிக்கிறார். (மாற்கு 12: 30-31) நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன். எல்லாவற்றிகும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது, தன்னைதானே நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பது.

இங்கு யேசு இறையன்பையும் பிறரன்பையும் முன்வைக்கிறார். இயேசு ஜெபிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த நிகழ்வுகளிலும், தந்தை இவரே என் அன்பார்ந்த மகன் இவரிடம் நான் பூரிப்படைகிறேன் என்று சொன்ன நிகழ்வுளிலுமிருந்து இயேசுவிடம் இருந்த இறையன்பு நமக்கு தெளிவாகிறது. இயேசு நோயாளர்கள், அடிமைகள், ஒதுக்கப்பட்டோர் அனைவருக்கும் புதுமைகள், அற்புதங்கள் செய்வதின் வழியாக அவரின் பிறரன்பு வெளிப்படுத்தபடுகின்றது. 

1அருளப்பர் 4:9 – தம் ஒரே பேரான மகனின் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம் மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது. இறைவன் நம்மை அன்பு செய்கிறார். அவரை நாம் அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் புனித சின்னப்பர் கண்ணால் காணக்கூடிய சகோதர சகோதரியை அன்பு செய்யாதவன் கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்யமுடியாது என்கிறார். எனவே அன்பு செய்வோம். அன்பில் வாழ்வோம். மகிழ்வில் திளைப்போம். அகற்கான அருளை வேண்டுவோம். 


திருத்தொண்டர் டோனி 

மரணம் ஒரு மணமகன்


“மனிதன் நினைக்கிறான்
வாழ்வு நிலைக்குமென்று
கடவுள் நினைக்கிறான்
பாவம் மனிதனென்று”
மனிதா மரணத்தை கண்டு அழுகிறாயா? அது
உன் அறியாமையை கண்டு சிரிக்கிறது
மரணம் உனக்கு விருப்பமானவற்றை
பிரித்து விடுகிறது
என்று ஏசுகிறாய் - ஆனால்
மரணம் ஒரு பிறப்பு
மரணம் ஒரு வளர்ச்சி
மரணம் ஒரு மணமகன்
என்பதை நீ அறிந்ததில்லையா?
மரணம் ஒரு பிறப்பு:
இருளின் மரணம் ஒளியின் பிறப்பு
மலர்களின் மரணம் காய்களின் பிறப்பு
அறியாமையின் மரணம் அறிவின் பிறப்பு
சாதியத்தின் மரணம் சமத்துவத்தின் பிறப்பு
உறக்கத்தின் மரணம் தானே விழிப்பு!
மரணம் ஒரு வளர்ச்சி
இலைகளின் மரணம்தான்
கிளைகளின் வளர்ச்சி
இளமையின் மரணம் முதிர்ச்சி
பழமையின் மரணம்
புதியவற்றின் எழுச்சி
கன்னிமையின் மரணம்
தாய்மையின் பிறப்பு
மரணம் ஒரு மணமகன்
மரணம் என்னும் மணமகன்
வாழ்க்கை என்னும் மணமகளை
அழைத்து செல்கிறது
விண்ணகத்தில் நிலைவாழ்வு பெற
ஆம் - “மரணம் ஒரு மணமகன்”


E. எடிசன் ராஜ்

அமைதி


இறையேசுவில் அன்பான சகோதரர்களே, சகோதரிகளே 

எங்கே நிம்மதி என்று மனிதன் தேடி பார்த்து இறுதியில் தற்கொலையில் தன் வாழ்வை முடித்துக் கொள்கிறான். 6000 ஆண்டுகள் முன்பு மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை வரலாற்று ஏட்டில் வடிவமைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த 6000 ஆண்டுகளில் 5700 ஆண்டுகள் ஏதாவது ஒரு மூலையில் அடுத்த நாட்டின் மீது போர்த்தொடுத்து அமைதியில்லா நிலையில் நாட்களை கழித்திருக்கின்றனர். மீதம் உள்ள 300 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? இல்லை. அந்த 5700 ஆண்டுகள் எப்படி சண்டை போடலாம் என்று யோசித்து, ஆயுதங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். கடந்த ஆண்டு ஒரு புகழ் பெற்ற நடிகை தற்கொலை செய்துக் கொண்டாள். அவள் சாகும்முன் தான் கைபட எழுதிய வாசகம்: என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் வாழ்வில் நிம்மதியில்லாததால் நிம்மதியை தேடி செல்கிறேன்”. 

இன்று மனிதன் அமைதியை தேடி அலைமோதிக்கொண்டிருக்கிறான். என் குடும்பம் கடனில் மூழ்கியிருக்கின்றது. இந்த கடன்களையெல்லாம் நான் எப்போது அடைக்கப்போகிறேன் என்று ஏங்கும் கூட்டம் ஒருபுறம், பிரிந்த என்குடும்பம் ஒன்று சேரும் நாள் வராதா? நோயினால் பிடிக்கப்பட்ட நான் சுகம் பெற மாட்டேனா? என் குடும்பத்தில் உள்ள சொத்துப் பிரச்சினை தீராதா? என் குடும்பத்திற்கு எதிராக பிறர் ஏவிவிட்ட பில்லிசு10ன்யம் போன்ற கட்டுகளை உடைத்தெறிய முடியாதா? இப்படி பல கேள்விகளோடு வாழும் நமக்கு இன்றைய முதல் வாசகத்தின் வழியாக கடவுள் சொல்கிறார், நான் என் சமாதானத்தை உங்கள் குடும்பங்களில் ஆறுபோல் பாய்ந்தோட செய்வேன்…. சமாதானம் என்று சொன்னவுடன் நாம் நினைவுக்கு வருவது “பிரிந்தவர்கள் சமரசம் செய்துக்கொண்டு ஒன்று சேர்வது மட்டும் இதன் பொருள் அன்று, கடவுள் சொல்லும் சமாதானம் பல அர்த்தங்களைக் கொண்டது. 

எபிரேய மொழியில் சலோம் (shalom) என்று கூறுவர். சலோம் என்றால் ‘அமைதி’ என்று பொருள். இவ்வார்த்தைக்கு புகழ், செல்வம், நல்வாழ்வு என்று பல அர்த்தங்களை உள்ளடக்கியது என்று பொருள் கொள்ளலாம். கடவுள் சொல்லும் சமாதானமும் மேலே கூறப்பட்டுள்ள பல அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையாகத்தான் இருக்கின்றது. அந்த சாமாதானத்தைதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சீடர்களை அனுப்பிய நிகழ்விலும் பார்கிறோம். “நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் சமாதானம் என்று சொல்லுங்கள்” என்கிறார். 

இயேசு இவ்வுலகிற்கு வந்தது அந்த சமாதானத்தை அகிலம் முழுவதும் கொடுக்கவே. இயேசு பிறக்கும் போது, வானதூதர்கள், “உன்னதத்தில் மகிமையும், மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும் ஆகுக” என்று பாடினார்கள். பலர் இயேசுவை தேடிவந்தபோது, அவர், அவர்களை குணப்படுத்தி, “சமாதானமாய் போ” என்றுதான் சொல்கின்றார். இயேசு பாடுகள் பட்டு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு அச்சத்தில் சீடர்கள் கதவுகளை தாழிட்டு, கலக்கத்தில் என்ன நேருமோ என்று குழம்பியிருந்த போது இயேசு திடீரென்று உள்ளே தோன்றி ‘உங்களுக்கு சமாதானம்’ என்று சொல்கிறார். 

இன்று அந்த சீடர்களைப்போல், நம்முடைய இதயக் கதவுகளை பூட்டி வைத்துக்கொண்டு நடந்ததையும், நடப்பவற்றையும், நடக்கப் போவதைபற்றியம் பலவாறு சிந்தித்து, கலக்கத்தில் துவலும் வேளையில், ஆண்டவர் சொல்வது “உங்களுக்கு சமாதானம்.” இந்த சமாதானம் ஒருவருக்கு மட்டுமன்று, மாறாக உலகுக்கே உரித்தாக வேண்டும் என்று விரும்புகிறார். 
ஆதி ஆகமம் 10ஆம் அதிகாரத்தில் நோவா பெட்டகத்திலிருந்து வெளிவந்த பிறகு அவரின் சந்ததியர்கள் 72 நாடுகளுக்கு சென்று வாழ்ந்தனர் என விவிலிய அறிஞர்கள் சொல்கின்றார்கள். பழைய ஏற்பாட்டின் கணக்குப்படி உலகில் 72 நாடுகள் இருந்தன. புதிய ஏற்பாட்டின் கணக்குபடி 72 சீடர்களை அனுப்புவது உலகம் முழுவதும் அமைதியை கொண்டுபோய் சேர்க்கவே என்று சொன்னால் அது மிகையாகாது. 

எனவே இயேசு இவ்வுலகிற்கு கொண்டுவந்த அமைதி, முதலில் கடவுள் தரும் சமாதானம் நம்மில் குடி கொள்ள ஒத்துழைப்பை தரவேண்டும். புனித அகுஸ்தினார் “என் நெஞ்சம் உம்மை அடையும் வரை இறைவா நிம்மதி இல்லை” என்று கூறுகிறார் . இந்த உலக செல்வங்கள் நிம்மதியை தருவதில்லை. உயிருள்ள தேவனாகிய ஆண்டவர் இயேசுவை தேடும் போதுதான் அமைதி என்பதை இனம் கண்டு கொள்ள முடியும். அதற்கு வேண்டிய அருள் வரத்தை இத்திருப்பலியில் கேட்டு ஜெபிப்போம்! ஆமென்…..

திருத்தொண்டர் டோனி 

ஜெபம்


ஜெபிக்க ஜெபிக்க இறையன்பில் நாளும் வளர்கின்றோம்
கொடுக்க கொடுக்க பிறரன்பில் நாளும் மகிழ்கின்றோம் 
ஆம் எத்துணை அழகான இறையியல் செறிந்த வார்த்தைகள். ஜெபம் கிறிஸ்துவத்தின் அடிப்படையான ஆணிவேர் போன்றது. ஆலமரத்தின் விதை சிறியதாக தன்னுடைய வேர்களை பரப்பி வலிமையடைந்த மரமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. பல்வேறு பறவைகள் தங்கும் சரணாலயமாக தன்னை உருமாற்றிக் கொள்கிறது. கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, நம்முடைய ஜெபமும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலே ஆழ்மனதில் உறைந்து நமக்கும் நம்மை சுற்றி வாழ்வோர் அனைவருக்கும் பலன் தரக்கூடியதாக அமைய வேண்டும். ஜெபத்தினால் நமக்கும் இறைவனுக்கும் இடையே உறவு ஆரம்பமாகிறது. மண்ணுலகில் தந்தைக்கும் உரையாடல் நடைபெறுகிறது. இறைவன்பால் நம்மையெல்லாம் கொண்டு சேர்க்க வல்லதே ஜெபம். நம்மையும் இறைவனையும் ஒன்றாக சேர்க்க வல்ல உடன்படிக்கை பெட்டகமாக ஜெபம் செயல்படுகிறது. காதலன் காதலியிடம் எவ்வளவு நெருக்கமான உறவு கொண்டு இருப்பானோ அதைப்போல ஜெபமானது நம்மை மூவொரு இறைவனோடு நெருக்கம் கொள்ளச் செய்கிறது. 

ஜெபம் வேண்டுதலும், கேட்க்கபடுதலும் 

பழைய ஏற்பாட்டில்
சாலமோன், தான் கட்டிய ஆலயத்தில் இறைவனை வந்து தங்கும்படி கெஞ்சி மன்றாடுகிறார். அதோடுமட்டுமல்லாது இந்த ஆலயத்தில் நின்று கொண்டு கைகளை உயர்த்தி இறைஞ்சும் பொழுது உம் மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும் என்று மன்றாடினார். சாலமோன் இவ்வாறாக மன்றாடிய பின் வானத்திலிருந்து நெருப்பு இறங்கி எரி பலியையும் மற்றப்பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சிமை கோவிலை நிரப்பியது. (2குறிப்பேடு 7:1) யூதாவின் வழிமரபினரான யாக்கோபு இஸ்ராயேலின் கடவுளை நோக்கி “கடவுளே மெய்யாகவே நீர் எனக்கு ஆசி வழங்கி என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னை துன்புறுத்தாது, நீர் பாதுகாத்தருள்வீராக! என்று மன்றாடினார். (1குறிப்பேடு 4:10) எல்கானாவின் மனைவி அன்னா மலடியாய் இருந்தார். அன்னா தனக்கு மகப்பேறு அருளுமாறு இறைவனிடம் கெஞ்சி மன்றாடினார். ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார் ( 1சாமுவேல் 1:19) இப்பையனுக்காகவே நான் வேண்டிக் கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை கேட்டருளினார். (1சாமுவேல் 1:27). 

இறைவாக்கினராகிய எலியா, ஆகாபு அரசிடம் “நான் பணிபுரியும் இஸ்ராயேலின் கடவுளான ‘வாழும் ஆண்டவர்’ மேல் ஆணை! என் வாக்கினாலன்றி வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது” என்றார் (1அரசர்கள் 17:1). பல நாட்களுக்குப் பிறகு பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில் ஆண்டவர் எலியாவிடம் “அகாயு உன்னைக் காணுமாறு போய் நில், நான் நாட்டில் மழைப் பெய்யச் செய்வேன்” என்று கூறினார். (1அரசர்கள் 18:1) ஆகாபு உணவும் பாணமும் அருந்தச் சென்றபின் எலியா கார்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக் கொண்டார். (1அரசர்கள் 18:42). இதற்க்கிடையில் வானம் இருண்டது. கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது பெரும் மழைபெய்தது. (1அரசர்கள் 18:45) 

அமிதாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. நினிவே நகருக்கு சென்று அதற்கு அழிவு வரப்போகிறது என்ற அறிவிக்கச் சொன்னார். ஆனால் ஆண்டவரின் திருமுன்னின்று தப்பியோட தர்சீசுக்கு பயணப்பட்டார். ஆண்டவர் கடலில் கொடுங்காற்று வீசும்படி செய்தார். படகில் இருந்தவர்கள் யோனாவை கடலில் வீசி எறிந்தார்கள். பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கியது. யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறே தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடினார். (யோனா 2:1) ஆண்டவர் அந்த மீனுக்கு கட்டளையிட அது யோனாவை கரையிலே கக்கியது. (யோனா 2:10) யோபு வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் அறிந்த ஒன்றே. துன்பங்கள், சாவுகள், பேரிழப்புகள் மத்தியிலே இறைவனைப்பற்றி அவதூராக பேசாமல் இறைவனைப் புகழ்ந்தேத்தினர். ஆனால் அவர் நண்பர்கள் இறைவனைப் பற்றி சரியாக பேசவில்லை, எனவே ஆண்டவர் யோபுவை அவர்களுக்காக மன்றாட செய்தார். யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடிய பிறகு ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் கொடுத்தார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார் (யோபு 42:10).

நாம் இறைவனிடம் இடையறாது ஜெபிக்கும் பொழுது நம் தேவைகளை நிறைவேற்றுபவராக, சோர்ந்துபோன தருணங்களில் அரவணைக்கும் அன்பு தெய்வமாக நம்மோடு ஒவ்வொரு நொடிப்பொழுதும் தங்கி இருக்கிறார் நம் ஆண்டவராகிய இறைவன். 

புதிய ஏற்பாட்டில்
புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே ஜெப வீரராய் திகழ்கிறார். ஜெபத்தில் தீராத ஆர்வம் கொண்டவராயிருகிறார். கிறிஸ்துவின் பிறப்பு, ஞானஸ்நானம், பணிவாழ்வு, போதனைகள், புதுமைகள், இறப்பு, உயிர்ப்பு அனைத்துமே ஜெபத்தோடு இணைந்ததாக காணப்படுகிறது. கிறிஸ்து தன் தந்தைக்கு நன்றி கூறுவதும், பாடுகளின் மலைமேலும் இரவுநேரத்திலும் (லூக் 6:12) தனிமையிலும் (லூக் 9:18) பாலைவனத்திலும் (லூக் 5:16) இடையறாது ஜெபிக்கிறார். இறைமக்களாகிய நம் அனைவருக்கும் கிறிஸ்துவே முன் உதாரணமாக திகழ்கிறார். 

புனித லூக்கா தன்னுடைய நற்செய்தியிலே “ஜெபம்” பற்றிய மூன்று உவமைகளை கூறுகிறார். 
  1. காலம் தாழ்ந்து வந்து உதவி கேட்கும் தன் நண்பனின் தொல்லையின் பொருட்டாவது அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார்” என்கிறார் கிறிஸ்து (லூக் 11:5-8) கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள். இறைசமூகமாகிய நாமும் இறைவனிடம் கேட்க வேண்டும். (லூக் 11:9-10) 
  2. இரண்டாவதாக நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமையிலே மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனறு இயேசு கூறுகிறார். தாம் தேர்ந்து கொண்ட மக்களின் மன்றாட்டை கேட்பாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நம் தேவன் நாம் கேட்பதற்கு முன்னமே நமக்கு என்ன தேவை என்பதை அறிந்தவராயிருக்கிறார். என்ன தேவை என்பதை அறிந்து தக்க காலத்தில் நமது மன்றாட்டுகளை நிறைவேற்ற காத்திருக்கிறார். (லூக் 18:1-8)
  3. மூன்றாவதாக பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையிலே நாம் எவ்வாறு தாழ்மையோடு ஜெபிக்க வேண்டும் என்று கூறுகிறார்.(லூக் 18:9-14).
நம் வாழ்வில் ஜெபம் 
கடவுளே உனக்கு கண் இல்லையா? காது இல்லையா? என்று புலம்புகிறோம். நம்முடைய ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் தாழ்ச்சி, நேர்மை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம். ஜெபமானது பயிற்சியாக இல்லாமல் நமது வாழ்வாக மாற வேண்டும். நமது தேவைகளான நல்ல வேலைக்கிடைக்கவும், வீடு வாங்கவும் குணம் பெறவும் மட்டுமல்லாது, இறைவனை நம் உள்ளத்திலே கொண்டுவரக் கூடிய கருவியாக செயல்பட வேண்டும். தாழ்ச்சி நிறைந்த மனதோடும் (2 குறிப்பேடு 7:14) திறந்த இதயத்தோடும் (எபி 29:13) ஆண்டவரிடம் நாம் மன்றாடும் போது விண்ணக மலையிலிருந்து நமக்கு நிச்சயம் செவிசாய்ப்பார். ஜெபமானது இறைவனை வழிபடவும், மனம் திருந்தி வாழவும், பிறருக்காக ஜெபிக்க உதவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட வரங்களுக்காக நாம் இத்திருப்பலியிலே மன்றாடுவோம். ஆமென்.

சகோ. ஜோசப்