மரியாள்


தந்தை இறைவனுக்கு
தயங்காமல், “ஆம்” என்று
தாயானார் இறைவன் இயேசுவுக்கு.

வார்த்தைகளால் வடிக்க இயலாது
விலைமதிப்பில்லா கற்பின் பெருமையை
தலைமகனைப் பெற்றதால்
கன்னிமை கறையா தாய் ‘மரியாள்.’

இறைவனால் எதுவும் இயலும் என்பதை
இதயத்தில் இருத்திய விசுவாசத் தாய்.
நாடி வருவோரை நலன்களால் நிரப்பி
நன்மைகளால் அரவணைக்கும் அடைக்கலத்தாய்
மன இருள், உடல் பிணி நீக்கி
மன வலிமை தரும் ஆரோக்கிய தாய்.
பாவ உலகை மீட்க,
மனிதன் மனமாற்றம் பெற,
மன்னவன் இயேசுவைத் தந்த மீட்பின் தாய்.
துன்புறுவோரின் துயர் நீக்கி
வாழ்வில் புது வசந்தம் தரும்
விண்ணகத் தாய் இவர் மறுமலர்ச்சியின் தாய்.

சகோ. அருள் செபாஸ்டின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக