என்னை நேசிக்கின்றாயா ?


என்னை நேசிக்கின்றாயா ?
என்னை நேசிக்கின்றாயா ?
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா (2)
   (என்னை நேசிக்கின்றாயா.......)

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் (2)
தேடி இரட்சிக்கப் பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் (2)
   (என்னை நேசிக்கின்றாயா.......)

பாவத்தின் அகோரத்தைப் பார்;;;
பாதகத்தின் முடிவினைப் பார்; (2)
பரிகாசச் சின்னமாய்ச் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் (2)
   (என்னை நேசிக்கின்றாயா.......)

பாவம் பாரா பரிசுத்தர்;;; நான்
பாவி உன்னை அழைக்கிறேன் பார்; (2)
உன் பாவம் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா (2)
   (என்னை நேசிக்கின்றாயா.......)

உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான் (2)
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ (2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக