அன்னை


நான் கருவாய் இருந்தேன்
கருப்பை ஆனாய்
உறங்க நினைத்தேன்
கட்டில் ஆனாய்
இசையை விரும்பினேன்
தாலாட்டு ஆனாய்
நடக்க முயற்சித்தேன்
நடைவண்டி ஆனாய்
நோய்வாய் பட்டிருந்தேன்
மருந்து ஆனாய்
இருட்டில் இருந்தேன்
ஒளி ஆனாய்
வெயிலில் காய்ந்தேன்
நிழல் ஆனாய்
மழையில் நனைந்தேன்
குடை ஆனாய்
சோற்றுடன் நிலவை ஊட்டி – உடல்
சேற்றைச் சேலையால் துடைத்து
பாலைவனச் சோலை ஆனாய்
உலகில் எல்லாம் ஆனாய்
என் உயிரினும் மேலானாய்
என்றும் அமிழ்தமானாய்….

சகோ.  ஜஸ்டின் பிரதீப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக