ஒரு நிமிடம் உன்னருகினில் இருக்க


ஒரு நிமிடம் உன்னருகினில் இருக்க
அருவாயோ என் இறைவா
அந்தச் சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் தலைவா- ஒரு நிமிடம்
1.
விழிகளை மூடி உனை நினைக்கையிலே
விந்தைகள் நிகழ்வதும் ஏன் இறைவா _ 2
மொழியினைத் தாண்டி மனம் உறவாட
மகிழ்வினில் மிதப்பதும் ஏன் இறைவா?
ஏன் இறைவா ஆ..ஆ...ஒரு நிமிடம்
2.
சோதரர் மானிடர் அழுகுரல் கேட்க
கேள்விகள் பிறப்பதும் ஏன் இறைவா_2
வேதனை கண்டும் நீர் காத்திடும் மௌனம்
விளங்கவில்லை அது ஏன் இறைவா?
ஏன் இறைவா ஆ...ஆ... ஒரு நிமிடம்
3.
அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதன் நியாயமென்ன_2
தொழுதுனை வணங்கி கவலைகள் கூற
கண்ணீர் மறைந்திடும் மாயமென்ன?
மாயமென்ன ஆ...ஆ....ஒரு நிமிடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக