மரணம் ஒரு மணமகன்


“மனிதன் நினைக்கிறான்
வாழ்வு நிலைக்குமென்று
கடவுள் நினைக்கிறான்
பாவம் மனிதனென்று”
மனிதா மரணத்தை கண்டு அழுகிறாயா? அது
உன் அறியாமையை கண்டு சிரிக்கிறது
மரணம் உனக்கு விருப்பமானவற்றை
பிரித்து விடுகிறது
என்று ஏசுகிறாய் - ஆனால்
மரணம் ஒரு பிறப்பு
மரணம் ஒரு வளர்ச்சி
மரணம் ஒரு மணமகன்
என்பதை நீ அறிந்ததில்லையா?
மரணம் ஒரு பிறப்பு:
இருளின் மரணம் ஒளியின் பிறப்பு
மலர்களின் மரணம் காய்களின் பிறப்பு
அறியாமையின் மரணம் அறிவின் பிறப்பு
சாதியத்தின் மரணம் சமத்துவத்தின் பிறப்பு
உறக்கத்தின் மரணம் தானே விழிப்பு!
மரணம் ஒரு வளர்ச்சி
இலைகளின் மரணம்தான்
கிளைகளின் வளர்ச்சி
இளமையின் மரணம் முதிர்ச்சி
பழமையின் மரணம்
புதியவற்றின் எழுச்சி
கன்னிமையின் மரணம்
தாய்மையின் பிறப்பு
மரணம் ஒரு மணமகன்
மரணம் என்னும் மணமகன்
வாழ்க்கை என்னும் மணமகளை
அழைத்து செல்கிறது
விண்ணகத்தில் நிலைவாழ்வு பெற
ஆம் - “மரணம் ஒரு மணமகன்”


E. எடிசன் ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக