இயற்கை


ஓசோனில் ஓட்டை
ஓட்டையின் ஊடே புற்றுநோய்
செருக்குடன் கட்டிடங்கள்
செரிக்க வரும் நிலநடுக்கங்கள்
புகையாகிய பூங்காற்று
பூஜ்யமாக்குகிற புயல்
நலிந்த நன்னீர் நாகரீக நோய்கள்
மாண்டு போகும் மரங்கள்
மறந்து போகும் மழைகள்
சேர்கின்ற மணல்
நிலைக்கிற நிலச்சரிவு
ஆம்,
கருவறை இல்லாவிட்டால்
ஏது குழந்தை!
இயற்கையை பாதுகாக்காவிட்டால்
ஏது சுகமான வாழ்க்கை மனிதனுக்கு
சிதைக்க வேண்டாம் இயற்கையை
இயற்கையில் சிதைந்து போவோம்.

சகோ. L. செல்வகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக