இயேசுவின் திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்

எங்கள் குடும்பங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்
நன்றி கூறுகின்றோம்
எங்களை ஆசீர்வதியும்
எப்பொழுதும் இறைப்பிரசன்னத்தை உணர்ந்து வாழ வரம் தாரும்
பலவீனர்களுக்கு பலத்தையும் செல்வம் உடையவர்கள் பிறருக்கு உதவிசெய்யும் நல்ல மனத்தையும் தந்தருளும்
விதவைகளுக்கும், அநாதைபிள்ளைகளுக்கும் நாங்கள் உதவியாய் இருக்கச் செய்தருளும்
சிறையில், தனிமையில், நோயில், துன்பத்தில் இருக்கின்றவர்களை ஆசீர்வதியும்
உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும், நல்ல ஒழுக்கத்தையும், பணிவையும், அறிவையும், தந்தருளும்
மரண தருவாயில் இருக்கிறவர்களை நாள்தோறும் சந்தித்தருளும்
ஆன்மாக்களை விண்ணகத்தில் சேர்த்தருளும் எங்கள் அனைவருக்கும் அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் சாகும் தருவாயில் உதவியாகவும் இருந்தருளும் - ஆமென்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக