காணிக்கை தரும் நேரம் கடவுளே

காணிக்கை தரும் நேரம் கடவுளே உன் திரு முன்னே
அன்பென்னும் பலியாக அள்ளி தரும் நேரம்
என்னை படைத்தேன் என்னை படைத்தேன்
இன்றும் என்றும் உந்தன் உகந்த காணிக்கையாய்

வாழும் வாழ்வை பலியாய் தந்தேன்
வரமே தருவாய் நீ
போதும் என்ற மனமே தந்து
பொறுத்துக்கொள்வாய் நீ
என்னன்பு தேவனும் நீ என் வாழ்வின் ஜீவனும் நீ

உள்ளம் விரும்பும் இறைவன் நீரே
உவந்து தர வந்தேன்
மீதி வாழ்வை திருமுன் தந்து
நிம்மதி பெறுகின்றேன்
என்னன்பு தேவனும் நீ என் வாழ்வின் ஜீவனும் நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக